Connect with us

Cricket

IPL-ல விளையாடுவீங்களா? ஈசி இல்லங்க.. டோனி பளீச்!

Published

on

இந்திய அணி மற்றும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எம்.எஸ். டோனி ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இதுபற்றி சி.எஸ்.கே. மற்றும் எம்.எஸ். டோனி தரப்பில் இதுவரை உறுதியான தகவல் அல்லது அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ். டோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதை சூசகமாக தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசும் போது, “அடுத்த சில ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவு கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும். தொழில்முறை விளையாட்டாக கிரிக்கெட் ஆடும் போது, போட்டியை கொண்டாடுவது கடினமாகி விடும்.”

“எனக்கு அதை செய்வதில் தான் விருப்பம். ஆனால் அது ஈசியில்லை. அர்ப்பணிப்பு இருக்கும் என்பதால், உணர்ச்சிகள் வெளிப்படும். அடுத்த சில ஆண்டுகளில் போட்டியை கொண்டாட விரும்புகிறேன். இரண்டறை மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக நான் ஒன்பது மாதங்கள் உடற்தகுதியுடன் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு திட்டமிடல் அவசியம், அதே நேரம் கொஞ்சம் அமைதியாக இருப்பதும் அவசியம்,” என்று எம்.எஸ். டோனி தெரிவித்தார்.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் வெளியான தகவல்களில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது பற்றிய முடிவை இம்மாதம் 31 ஆம் தேதி தெரிவிப்பதாக எம்.எஸ். டோனி கூறினார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எதுவாயினும் அடுத்த சில நாட்களில் எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் தெரியவரும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *