Connect with us

Cricket

2025 டி20 ஆசிய கோப்பை இந்தியாவில் நடக்குது – எப்போ தெரியுமா?

Published

on

2025 ஆண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த இருக்கிறது. இதேபோன்று 2027 ஆம் ஆண்டு இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. வங்காளதேசத்தில் இந்த தொடர் 50 ஓவர்கள் கொண்ட வடிவில் நடைபெறும்.

2027 ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருப்பதை ஒட்டி, அதற்கு முன்னோட்டமாக அமையும் வகையில், 2027 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் 50 ஓவர்கள் கொண்ட தொடராக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக 2023 ஆண்கள் ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தின. இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட இருந்த போட்டிகள், பிசிசிஐ வேண்டுகோளுக்கு இணங்கும் வகையில், இலங்கைக்கு மாற்றப்பட்டன. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடத்த இருப்பதால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தொடரில் விளையாடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வது பற்றி எந்த முடிவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 1990/91 ஆண்டு இந்தியா ஆசிய கோப்பை தொடரை நடத்தியது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பையின் எதிர்கால தொடர்களில் மொத்தம் 13 போட்டிகள் இடம்பெறும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெற உள்ளன. எனினும், இவை எங்கு நடத்தப்படும் என்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆண்கள் அண்டர் 19 ஆசிய கோப்பை தொடர் 2024, 2025, 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் நடத்தப்பட உள்ளது. இவை அனைத்திலும் 15 போட்டிகள் நடக்கப்படும். இத்துடன் 2024 மற்றும் 2026 ஆண்டுகளில் டி20 வளர்ந்து வரும் எமர்ஜிங் டீம்ஸ் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 2025 மற்றும் 2027 ஆண்டுகளில் இதே தொடரின் 50 ஓவர்கள் கொண்ட வடிவில் நடைபெற இருக்கிறது.

தற்போது ஆசிய கோப்பை தொடரை இந்தியா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் போட்டி அட்டவணை மற்றும் இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

google news

Cricket

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

Published

on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு பல முறை சாதகமான முடிவுகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆடம் ஜாம்பா இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதே இல்லை.

நேதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன், டாக் முர்ஃபி மற்றும் மேத்யூ குஹ்னெமேன் ஆகியோர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்தான மற்றும் இரண்டாம் கட்ட சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆடம் ஜம்பா ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க அந்த அணி நினைத்ததே இல்லை.

நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடிய போதிலும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஏக்கம் இன்றும் தனக்கு இருப்பதாக ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு கடினமான காரியம் என்ற போதிலும், அதனை விளையாட ஆசை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடினாலே பெரும் சாதனை என்ற நிலை உள்ளது.

அந்த வகையில், ஆடம் ஜாம்பா இதுவரை இந்த சாதனையை படைக்காதவராக இருக்கிறார். குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் சாதனை படைத்த போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடம் ஜாம்பா சாதனை படைக்கவில்லை. இது குறித்து ஆடம் ஜாம்பா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.

“உண்மையில், என் வாழ்நாளில் இனிமேல் நான் ஆஷஸ் விளையாடவே முடியாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம். அந்த வகையில், அவற்றில் விளையாட வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. இங்கிலாந்தில் விளையாடுவது, ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு சாத்தியப்படும் விஷயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்று ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.

google news
Continue Reading

Cricket

கவுதம் கம்பீரின் கோபம்.. தினேஷ் கார்த்திக் சொல்வது சரிதான்..

Published

on

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரது தந்திரமிக்க ஆட்டம் மற்றும் கடுங்கோபம் என இரண்டிற்கும் சம அளவு பெயர் பெற்றவர். இந்திய அணிக்கு துவக்க வீரராக இருந்தது, ஐபிஎல் தொடரில் ஆலோசகராக இருந்தது என எந்த சூழலிலும் தனக்கு தவறு என தெரிந்தவற்றுக்கு கவுதம் கம்பீர் கோபத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கியதே இல்லை.

கவுதம் கம்பீரின் கோபம் உலக கிரிக்கெட்டில் பலருக்கும் பழகிப் போன விஷயம் தான். போட்டிகளின் போது வீரர்கள் கோபம் கொள்வது சமீபத்திய காலங்களில் சகஜமாக மாறி வருகிறது. கிரிக்கெட் மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது ரசிகர்களுக்கும் பழகிவிட்டது. இந்த நிலையில், கவுதம் கம்பீர் கோபம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.

“அவரது (கம்பீர்) கோபம் எப்போதும் வீரர்களை பாதுகாக்கவே வெளிப்படும். இதனை மற்ற வீரர்கள் அனைவருமே விரும்புவர். கோபம் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் கோபம் கொள்ள மாட்டார். தேவையான இடத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது, வார்த்தைகளை மிக கவனமாக பயன்படுத்துவது கம்பீரின் பாணி. இவ்வாறு செய்வது அவர் வீரர்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வர முடியும்.”

“ஏராளமான டி20 தொடர்களில் அவர் பங்கேற்றுள்ளார். ஆனால் இந்த டெஸ்ட் தொடர், ஒரு பயிற்சியாளராக அவருக்கு மிகவும் புதிதாக இருக்கும். அது அவரின் பின் மூளையில் விளையாடிக் கொண்டிருக்கும். கடினமான சூழல்களில் பல முறை வெற்றிகரமாக கடந்து வந்தவர்களில் ஒருவர் கம்பீர். போட்டியின் நாடியை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர். ஒரு பயிற்சியாளராக இப்படி இருப்பது மிகவும் முக்கியம் ஆகும்.”

“பயிற்சியாளராக அவர் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறார். அந்த வகையில், அவர் எப்படி திட்டமிடுகிறார் என்பதை பார்க்க விறுவிறுப்பாக இருக்கும். அவர் அனைத்து தரப்பிலும் பங்காற்றக்கூடியவர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை அவரது இந்த பாணி மிகவும் சிறப்பாக பங்காற்றி இருக்கிறது,” என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

INDvsBAN டெஸ்ட்: எல்லாரும் பேசட்டும், எங்க Focus இது தான்.. ரோகித் சர்மா

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் கணக்கிடப்படுகிறது.

மேலும், இந்திய சுற்றுப் பயணத்திற்கு முன் பாகிஸ்தானில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய வங்கதேசம் அணி, இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதே வேகத்துடன் இந்தியா வந்திருப்பது, இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவது என இந்த தொடர் பல காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பல விஷயங்கள் பற்றி பேசினார்.

“ஒவ்வொரு அணியும் இந்தியாவை வெல்ல வேண்டும் என்று நினைக்கின்றன. மேலும் அவர்களுக்கு அப்படி செய்வது பிடித்திருக்கிறது. அவர்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும். நாங்கள் பல்வேறு அணிகளுடன் அதிகளவு கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். நாங்கள் எங்களது போட்டியில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறோம்.”

“இங்கிலாந்து இங்கு வந்திருந்த போது, செய்தியாளர்கள் சந்திப்பில் நிறைய விஷயங்களை பேசினர், ஆனால் நாங்கள் அவை எதையும் கண்டுக்கொள்ளவில்லை. நாங்கள் எதிரணி பற்றி அதிகம் யோசிக்காமல், நல்ல கிரிக்கெட் விளையாடவே முயற்சித்தோம்,” என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

டோனியை அவுட் செய்தது வருத்தமா இருந்தது.. ஆர்சிபி வீரர் ஓபன் டாக்

Published

on

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிக் கட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டியை சிஎஸ்கே மற்றும் எம்எஸ் டோனி ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். வாழ்வா, சாவா நிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் இக்கட்டான சூழலில் எம்எஸ் டோனி அவுட் ஆனது ரசிகர்கள் மட்டுமின்றி அவரையும் மனதளவில் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியது.

போட்டியின் கடைசி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து பந்துகளில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் எம்எஸ் டோனி போட்டியை ஃபினிஷ் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், யாஷ் தயால் வேறு கிளைமேக்ஸ் கொடுத்து சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இக்கட்டான சூழ்நிலையில், கடைசி ஓவரை வீசிய யாஷ் தயால் எம்எஸ் டோனி விக்கெட்டை எடுத்தார்.

அடுத்த ஐபிஎல் சீசனில் டோனி விளையாடுவாரா? சிஎஸ்கே ஜெர்சியில் எம்எஸ் டோனி மீண்டும் விளையாடுவாரா என ஏகப்பட்ட கேள்விகளுடன் போட்டியை காண வந்த ரசிகர்கள் அவர் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதை பார்த்து மனம் நொந்தனர். கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் கடைசி இன்னிங்ஸில் டோனி விளையாடுகிறாரோ என்ற ஏக்கத்துடன் வந்தவர்களுக்கும், நாம் அடுத்த சீசனில் விளையாடுவோமா என்ற கேள்வியுடன் களமிறங்கிய டோனிக்கும் அவுட் ஆனது வருத்ததை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எம்எஸ் டோனி விக்கெட் எடுத்தது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக யாஷ் தயால் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த யாஷ் தயால் எம்எஸ் டோனியின் விக்கெட்டை எடுத்தது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

“அவரை அவுட் செய்ததும் நான் மோசமாக உணர்ந்தேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியாது, ஆனால் அவர் களத்தில் இருந்து வெளியேறும் போது இருந்த விரக்தி, அவர் மீண்டும் விளையாடுவாரா, இல்லையா என்பதை உணர்த்தியது. அவரை மீண்டும் களத்தில் பார்ப்போமா? என என் மனதில் நிறைய விஷயங்கள் ஓடிக் கொண்டே இருந்தது. பிறகு பெருமூச்சு விட்டேன், சற்று நிம்மதி கிடைத்தது,” என்று யாஷ் தயால் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்

Published

on

இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை படைக்க உள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையே நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 132 ரன்களை அடித்தால் புதிய சாதனை படைக்கலாம். தற்போதைய 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 1028 ரன்களை அடித்துள்ளார்.

அதன்படி இவர் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியின் போது 132 ரன்களை மட்டும் அடித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றை எடிஷனில் அதிக ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற முடியும்.

முன்னதாக 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஜிங்கியா ரஹானே 1159 ரன்களை அடித்து, ஒரே தொடரில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுதவிர ஒற்றை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 1000 ரன்களுக்கும் மேல் அடித்த மூன்று இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ஒருவர் ஆவார். இவர் தவிர ரஹானே மற்றும் ரோகித் சர்மா 1000 ரன்களை அடித்துள்ளனர்.

தற்போது 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்துள்ள வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் ஆகியோர் 1028 ரன்களை அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

ஜெய்ஸ்வால் வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் 371 ரன்களை அடிக்கும் பட்சத்தில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பெற முடியும்.

 

google news
Continue Reading

Trending