latest news
என்னுடன் போட்டியிட்டது பெண் அல்ல ஆண்… ஒலிம்பிக்கில் வெடித்த சர்ச்சை… கதறி அழுத குத்துச்சண்டை வீராங்கனை
ஒலிம்பிக்கில் 66 கிலோ எடை பிரிவிற்கான குத்துச்சண்டை போட்டியில் ஆட்டம் தொடங்கிய 46வது நொடியில் தன்னுடன் மோதுவது ஒரு பெண்ணல்ல ஆண் தான் என வீராங்கனை ஒருவர் பாலின குற்றச்சாட்டை வைத்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தாலியை சேர்ந்த ஏஞ்சலா கரினியை அல்ஜீரியாவை சேர்ந்த இமானே கலீப் எதிர்கொண்டார். இப்போட்டி தொடங்கி இமானே ஏஞ்சலாவை மூக்கில் ஒரு குத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை வாங்கியவுடன் ஏஞ்சலா 46வது நொடியில் தன்னுடைய ஆட்டத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
மேலும் தன்னுடன் மோதிய இமானே கலீப் பெண்ணே இல்லை என்றும், ஒரு ஆணுடன் என்னை மோத வைத்தது நியாயமற்ற செயல் எனும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இருந்தும் இமானே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட ஏஞ்சலா ஆட்டக்களத்திலேயே கதறி அழுதார்.
மேலும் இது குறித்து பேசிய ஏஞ்சலா அப்படி ஒரு குத்தை நான் வாங்கியதே இல்லை. என்னுடன் மோதியது பெண்ணே இல்லை. இது குறித்து ஒலிம்பிக்ஸ் கமிட்டி விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இமானே கலீப் பெண் தன்மை சோதனைகள் தோல்வி அடைந்தார். அவர் ஒரு பயாலஜிக்கல் ஆன் எனக் கூறப்பட்ட நிலையில் போட்டியில் விளையாட முடியாமல் அப்போதே அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வீரரின் பாலினம் அவருடைய பாஸ்போர்ட்டை வைத்தே அடையாளப்படுத்தப்படும். அது மட்டுமல்லாமல் பாரிஸ் ஒலிம்பிக் பங்கெடுத்துள்ள அனைத்து வீரர்களும் முறையான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கலந்து கொண்டுள்ளனர்.ஒவ்வொரு வீரர்களுக்கும் பாரபட்சம் இன்றி விளையாட உரிமை உண்டு. கலிப் பல வருடங்களாக உயர் மட்ட போட்டியில் விளையாடுகிறார் என்பதை கருதாமல் இந்த விவகாரம் முரணாக கருதப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
india
வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…
ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு – காஷ்மீரில் மொத்தம் உள்ள தொன்னூறு சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்களர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முதற்கட்டமாக இருபத்தி நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. காஷ்மீர் பிராந்தியத்தில் பதினாறு தொகுதிகளிலும் , ஜம்மு பிராந்தியத்தில் எட்டு தொகுதிகளிலும் காலை ஏழு மணிக்கு பலத்த பாதுகாப்புடன் துவங்கிய வாக்குப்பதிவு தற்போது வரை நடந்து வருகிறது. வாக்குப் பதிவு துவங்கியதிலிருந்தே தங்களது வாக்குகளை பதிவு செய்ய பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தேர்தல் நடத்தப்படும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்களிக்க பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் காத்து நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
காலை பதினோறு மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகளும்,பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.
பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்தும் வகையில் அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், முதல் முறை வாக்கார்கள் தங்களது வாக்குகளை செலுத்தும்படி தான் அழைப்பு விடுப்பதாக பிரதமர் மோடி சொல்லியிருந்தார்.
latest news
ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…
பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் அனேக கோவில்களில் பிரசாதமாக தயிர் சாதம், லெமன் சாதம், கற்கண்டு சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், பொங்கல், சக்கரைப் பொங்கல் போன்றவை வழங்கப்படும்.
ஆனால் கோவில் திருவிழா ஒன்றில் பிரசாதமாக ப்ரோட்டா வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செய்தியை கேள்விப்பட்டவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனார்கள். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களும், வெளியூர்களில் பணி செய்பவர்களும் ஆர்வத்துடன் பங்கற்று வருவதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் நடத்தப்படும் இக்கோவில் திருவிழாவின் இந்தாண்டு திருவிழா தினசரி பூஜைகளுடன் பக்தி மயமாக கொண்டாடப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டங்கள் கலைகட்டியிருந்தது.
இந்நிலையில் திருவிழாவின் இறுதி நாள் அன்று பக்தர்களுக்கு ப்ரோட்டா பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய பத்தாயிரம் ப்ரோட்டாக்கள் தயார் செய்யப்பட்டதாக விழாக்கமிட்டி சார்பில் சொல்லப்பட்டது.
கோவிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ப்ரோட்டாவை பிரசாதமாக வழங்கபட்டதாக சொல்லப்பட்டது. இப்படி வித்தியாசம் காட்டுவதால் அடுத்த ஆண்டு வரை பகதர்களின் நினைவில் பத்திரகாளி அம்மன் கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம் நிற்கும் எனவும் சொல்லப்பட்டது.
கடந்த ஆண்டு திருவிழாவின் போது சப்பாத்தி வழங்கப்பட்டது அதிக வரவேற்பை பெற்றதால் இந்தாண்டு ப்ரோட்டா வழங்கப்பட்டதாக சொல்லபட்டது.
latest news
விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு திருமாவளவன் நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும் பங்கேற்கும் என்ற அறிவிப்பு வெளியானது.
இது குறித்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சிறுத்தை சிறுத்துப் போய் விட்டது என திருமாவளவனை விமர்சித்திருந்தார்.
அதோடு மது ஒழிப்பு கொள்கையை தனது சுயநலத்திற்காக பயன்படுத்துகிறார் என்றும், எப்போதும் போல நடக்கவில்லை என்று தெரிந்தது மத்திய அரசு மீது மடையை மாற்றுகிறார் என திருமாவளவன் மீது தனது காரசாரமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார் பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன்.
தமிழிசையின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய திருமாவளவன், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்ற விரக்தியில் பேசிவருகிறார்கள் எனவும், கூட்டணியில் மேலும் விரிசல் விழாதா? என்ற அவர்களின் எதிர்பார்ப்பு நடக்கவில்லை.
சட்ட மன்ற தேர்தலுக்கு இன்னும் பதினெட்டு மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் கணக்கு, கூட்டணிக் கணக்கு போடப்பட்டது நடக்கவில்லை என்பதன் விளைவாக அவர்களின் கூக்குரல், புலம்பல் இது எனவும் திருமாவளவன் பதிலளித்தார்.
ஆளும் கட்சியாக இருந்த போதும் மது ஒழிப்பு மா நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்க இருப்பது விசிகவும், திமுகவும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை குறிக்கிறது என்றார். மேலும் பாஜகவிற்கு பெரியார் என்றாலே பிடிக்காது, தமிழக ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் பெரியார் என்ற சொல்லையே நான் உச்சரிக்க மாட்டேன் என சொல்லியதை சுட்டிக்காட்டி பேசிருந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
latest news
ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?
இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில் அனைத்துவித அரசு சார்ந்த சேவைகளை பெறுவது, சிம் கார்டு பெறுவது, கியாஸ் இணைப்பு, வங்கி கணக்கு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை உள்ளது. ஒருவரின் தனிப்பட்ட அடையாள சான்றாகவும் ஆதார் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இதே போன்று பான் கார்டும் மக்களுக்கு மிக முக்கிய அரசு ஆவணமாக இருந்து வருகிறது. எனினும், இவற்றை எல்லா சமயங்களில் கையில் கொண்டு செல்ல முடியாது. சில வகை அவசிய தேவைகளின் போது, ஆதார் அல்லது பான் கார்டு கையில் இல்லையா? கவலையே வேண்டாம் கையில் மொபைல் இருந்தால் எந்த அரசு ஆவணங்களையும் வாட்ஸ்அப் மூலம் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு: அரசு ஆவணங்களை இருந்த இடத்தில் வாட்ஸ்அப் மூலம் பெறுவதற்கு மத்திய அரசின் டிஜிலாக்கரில் ஏற்கனவே பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும்.
மொபைலில் டிஜிலாக்கர் சேவையை செயல்படுத்த பயனர்கள் அவரவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனிற்கு ஏற்ற பிளே ஸ்டோரில் இருந்து டிஜிலாக்கர் அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் பதிவிட்டு, செயலியை பயன்படுத்த விரும்பும் மொழியை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு ‘Get Started’ ஆப்ஷனில் ‘Create Account’-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
இதன்பிறகு திரையில் தோன்று பதிவு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதில் உங்களது தனிப்பட்ட விவரங்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண் உள்ளிட்டவைகளை பதிவு செய்து ஆறு இலக்க பாதுகாப்பு குறியீட்டு எண்ணை வழங்க வேண்டும். இவற்றை பதிவிட்ட பிறகு, ‘Submit’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் வரும். இதனை வெற்றிகரமாக பதிவு செய்ததும், உங்களுக்கான டிஜிலாக்கர் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு விடும். இதன் பிறகு டிஜிலாக்கர் சேவைகளை வாட்ஸ்அப் செயலியிலும் பயன்படுத்த முடியும்.
இதற்கு மொபைலில் +91-9013151515 என்ற எண்ணை சேமித்துக் கொள்ள வேண்டும். இனி இந்த எண்ணிற்கு ‘hi’ என குறுந்தகவல் அனுப்பினால், டிஜிலாக்கர் சாட்பாட் பதில் அளிக்கும். இப்போது உங்களின் 12 இலக்க ஆதார் எண் பதிவிட வேண்டும். இதனை சரியாக பதிவிட்டதும், ஓடிபி பதிவிட வேண்டும். இதன் பிறகு டிஜிலாக்கரில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சேவைகளை அதற்கான ஆப்ஷன்களை க்ளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம். இதில் டிஜிலாக்கரில் உள்ள ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
Cricket
நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு பல முறை சாதகமான முடிவுகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் என்ற அடிப்படையிலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆடம் ஜாம்பா இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதே இல்லை.
நேதன் லயன், மிட்செல் ஸ்வெப்சன், டாக் முர்ஃபி மற்றும் மேத்யூ குஹ்னெமேன் ஆகியோர் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆஸ்தான மற்றும் இரண்டாம் கட்ட சுழற்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்கு வகித்த ஆடம் ஜம்பா ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க அந்த அணி நினைத்ததே இல்லை.
நீண்ட காலம் கிரிக்கெட் விளையாடிய போதிலும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஏக்கம் இன்றும் தனக்கு இருப்பதாக ஆடம் ஜாம்பா தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது தனக்கு கடினமான காரியம் என்ற போதிலும், அதனை விளையாட ஆசை இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடினாலே பெரும் சாதனை என்ற நிலை உள்ளது.
அந்த வகையில், ஆடம் ஜாம்பா இதுவரை இந்த சாதனையை படைக்காதவராக இருக்கிறார். குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் சாதனை படைத்த போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடம் ஜாம்பா சாதனை படைக்கவில்லை. இது குறித்து ஆடம் ஜாம்பா சமீபத்தில் மனம் திறந்து பேசியுள்ளார்.
“உண்மையில், என் வாழ்நாளில் இனிமேல் நான் ஆஷஸ் விளையாடவே முடியாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு இதில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம். அந்த வகையில், அவற்றில் விளையாட வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. இங்கிலாந்தில் விளையாடுவது, ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு சாத்தியப்படும் விஷயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை,” என்று ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.
-
latest news2 days ago
நண்பர்களிடையே தகராறு…குடிசைக்கு தீ வைத்த கொடூரம்…
-
Finance2 days ago
சரிவை சந்தித்த தங்கம் விலை…வீழ்ச்சியடைந்த வெள்ளியின் விலையும்…
-
Cricket2 days ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்
-
latest news2 days ago
சிறுத்தை மாதிரி இருந்தவர்…சிறுத்துப் போய்விட்டார்…திருமாவளவன் மீதான தமிழிசையின் ரைமிங் விமர்சினம்……
-
latest news2 days ago
என் சர்வீஸ்ல இப்படி நடந்ததில்ல…கொஞ்சமா குடிச்சேன், அவ்ளோ தான்…அதிர வைத்த பஸ் டிரைவர்…
-
latest news2 days ago
யுபிஐ பேமெண்ட் உச்சவரம்பு அதிகரிப்பு.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
-
Cricket2 days ago
அந்த ஒரு சாதனை மட்டும் போதுமாம்.. அஸ்வினின் ஆசை நிறைவேறுமா?
-
latest news2 days ago
பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை…முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி…