Connect with us

tech news

எங்கும், எப்போதும் கேமிங் தான்.. அசுஸ் சூப்பர் சாதனம் அறிமுகம்..!

Published

on

அசுஸ் ROG இந்திய சந்தையில் ROG Ally X சாதனத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மெல்லியதாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த சாதனம் கைகளில் வைத்து விளையாடுவதற்கு ஏற்ப நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய அசுஸ் ROG Ally X மாடலில் AMD Z1 சிப்செட், ரேடியான் 780M iGPU வழங்கப்பட்டுள்ளது. இவை தலைசிறந்த கேமிங் அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சாதனம் 80Wh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதன் கண்ட்ரோல் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகளை வழங்குவதற்காக ஆர்மரி கிரேட் ஸ்பெஷல் எடிஷன் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

மெமரியை பொருத்தவரை ROG Ally X 1TB M.2 NVMe Gen 4 SSD கொண்டிருக்கிறது. இதனை 4TB மற்றும் 24GB LPDDR5X 7500MT/s நீட்டித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை Full HD 1080p ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், VRR சப்போர்ட் உள்ளது. இந்த சாதனத்தில் AMD ரேடியான் சூப்பர் ரெசல்யூஷன், ஃபிடெலிட்டி FX சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் AMD Fluid Motion Frame உள்ளிட்டவைகளுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் மற்றும் வாழ்நாள் முழுக்க டால்பி பயன்படுத்துவதற்கான சந்தா வழங்கப்படுகிறது. மேலும் மேம்பட்ட ஜீரோ கிராவிட்டி தெர்மல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது சாதனம் எளிதில் சுடாவதை தடுக்கிறது. இத்துடன் இரண்டு USB C போர்ட்கள் உள்ளன. இந்த சாதனம் 678 கிராம்கள் எடை கொண்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு வைபை 6E வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் புதிய அசுஸ் ROG Ally X மாடலின் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

google news

latest news

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

Published

on

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க அதிகபட்சம் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி இருப்பதையும், ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருப்பதை கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்..

பிஎம் கிசான் வலைதளம் செல்ல வேண்டும்.

வலைப்பக்கத்தில் பயன்பெறுவோர் பட்டியலை (Beneficiary List) இயக்கலாம்.

இனி மாநிலம், மாவட்டம், மற்றும் முகவரியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியில் அறிக்கையை வழங்கக் கோரும் (Get Report) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் பயனாளிகள் பட்டியல் பஞ்சாயத்து அலவலகங்களிலும் ஒட்டப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது தவணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரூ. 2000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்திய பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றதும் பிரதமர் மோடி இந்த தவணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்

Published

on

ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசு துவங்கி, செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்று உத்யோகினி. இந்த திட்டம் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ. 3,00,000 வரையிலான கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைக்கு பெண்கள் வட்டி ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கடன் தொகையை அதிகபட்சம் 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானவர்கள் யார் யார்?

  • உத்யோகினி திட்டத்தில் பயன்பெறுபவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • கடன் பெறும் பெண்ணின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 1,50,000 மற்றும் அதைவிட குறைவாக இருக்க வேண்டும். விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் விலக்கு உள்ளது.
  • கடன் பெறும் பெண்ணின் வயது 18 முதல் 55 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • உத்யோகினி திட்டத்தில் கடன் பெறுவோர் அதற்கு முன் நிதி நிறுவன கடன் பாக்கி வைத்திருத்தல், கடன் செலுத்த தவறி இருத்தல் கூடாது.

உத்யோகினி திட்டத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் துணை இயக்குநர் / CDPO அலுவலகங்கள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அருகாமையில் உள்ள வங்கியில் சமர்பிக்க வேண்டும். இனி விண்ணப்பம், ஆவணங்கள் சரியாக இருப்பின் குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் வழங்கும் நடைமுறை துவங்கப்படும்.

கடன் கோரும் பெண் சமர்பிக்கும் விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை வங்கி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். ஒருவேளை அனைத்தும் சரியாக இருப்பின், கடன் வழங்க நிதி ஒதுக்குமாறு வங்கி சார்பில் கார்ப்பரேஷனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் தொகை விடுவிக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிற்கே நேரடியாக கடன் தொகை செலுத்தப்பட்டு விடும். இதை கொண்டு விண்ணப்பதாரர் வியாபாரத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

google news
Continue Reading

latest news

இது தெரியாம போயிடுச்சே.. தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு பெற இதை செய்தாலே போதுமா?

Published

on

ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டம் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் ஊக்குவிக்கப்படும் நிலையில், ஸ்மார்ட் கார்டு பெறும் வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன. முன்பு ஸ்மார்ட் கார்டு பெற விரும்புவோர் அதற்காக அரசு அலுவலகம் சென்று நேரில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.

ஆனால், தற்போது இந்த நிலை மாறி பயனர்கள் ஆன்லைன் மூலமாகவே ஸ்மார்ட் கார்டு பெற விண்ணிப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் இணைய வசதி இருக்கும் எந்த இடத்தில் இருந்து கொண்டும் ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பிக்க முடியும்.

இவ்வாறு விண்ணப்பிக்கும் முன் உங்களிடம்- ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, பான் அட்டை, புகைப்படம், வருமான சான்று, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்டவை இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் தமிழக அரசின் TNPDS வலைதளம் செல்ல வேண்டும்.

இனி ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் (Smart Card application) என கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

வலைப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில், தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

விவரங்களை பூர்த்தி செய்ததும், தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

இனி குடும்ப உறுப்பினர்கள் விவரம், கியாஸ் இணைப்பு விவரங்களை பதிவிட வேண்டும்.

அடுத்ததாக விண்ணப்பத்தை சமர்பிக்கக் (Submit) கோரும் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கண்ட வழிமுறைகளை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பின், உங்களது விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதை கூறும் விண்ணப்ப எண் உருவக்கப்படும்.

பயனர்கள் இந்த விண்ணப்ப எண் பயன்படுத்தி தங்களது ஸ்மார்ட் கார்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். ஸ்மார்ட் கார்டு விண்ணப்பம் ஏற்கப்பட்டால், அதற்கான தகவல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வடிவில் வழங்கப்படும்.

google news
Continue Reading

latest news

ரூ. 2714 கோடி ஒதுக்கியாச்சு.. பெண்களுக்கு மாதம் ரூ. 1000.. வெளியான புது அப்டேட்

Published

on

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வெவ்வேறு பெயர்களில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சில மாநிலங்களில் இந்த திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்த வரிசையில், டெல்லியில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் மகிளா சம்மான் யோஜனா திட்டத்தை துவங்குவதற்கான பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திட்டம் டெல்லியின் முதல்வராக பதவியேற்றுள்ள அதிஷி மர்லினா அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை அறிவித்து இருந்தார். எனினும், இதனை செயல்படுத்துவதற்குள் அவர் பதவி விலகியுள்ளதை அடுத்து இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பேசிய டெல்லி முதல்வர் அதிஷி, “18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 வழங்கும் ‘முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தை இன்று தொடங்குகிறோம் என்றார். இதற்காக பல துறைகளின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், இந்த திட்டம் குறித்து கைலாஷ் கெலாட் புது தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாம். பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெல்லி தேர்தலுக்கு முன் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக டெல்லி அரசு ரூ. 2,714 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

google news
Continue Reading

latest news

குழந்தைகளுக்கு பான் கார்டு பெற வேண்டுமா? உடனே விண்ணப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!

Published

on

பான் கார்டு என்றாலே, அதனை பெரியர்கள் தான் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலாக நிலவுகிறது. எனினும், 18 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள் கூட பான் அட்டை வாங்கி வைத்துக் கொள்ளலாம். பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ வளர்ப்பவர் உதவியோடு பான் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

குழந்தைகள் பான் அட்டை எப்போது பெற வேண்டும்?

  • பெற்றோர் தங்களது குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யும் போது பான் அட்டை அவசியம் ஆகும்.
  • வேறு ஏதேனும் முதலீடுகளில் குழந்தையின் பெயர் பயன்படுத்தும் பட்சத்தில் பான் அட்டை பெற வேண்டும்.
  • குழந்தைக்கு வங்கி கணக்கு பெறுவதற்கு பான் அட்டை அவசியம் ஆகும்.
  • குழந்தை ஏதேனும் வருவாய் ஈட்டும் போது, பான் அட்டை பெற்றிருக்க வேண்டும்.
  • ஆன்லைனில் குழந்தைக்கான பான் அட்டை பெற விண்ணப்பிக்கும் முறைகள்
  • முதலில் NSDL அதிகாரப்பூர்வ வலைதளம் செல்ல வேண்டும்.
  • இனி சரியான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பிரிவை பதிவிட்டு, 49A படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • குழந்தையின் வயது, பெற்றோர் புகைப்படம் மற்றும் இதர தேவையான ஆவணங்களை அப்லோட் செய்ய வேண்டும்.
  • படிவத்தில் பெற்றோரின் கையெழுத்து மட்டும்தான் தேவை.
  • விண்ணப்பிக்கும் போது ரூ. 107 கட்டணம் செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதும், அதனை உறுதிப்படுத்தும் விண்ணப்ப படிவ எண் அனுப்பப்படும். அதை கொண்டு விண்ணப்ப நிலையை சரிபார்க்க முடியும்.
  • பான் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதும் பான் அட்டை மின்னஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் அனுப்பப்பட்டு விடும்.

நேரடியாக விண்ணப்பிப்பது எப்படி?

  • ஆன்லைனில் இருந்து 49A படிவத்தை டவுன்லோட் செய்து, அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • குழந்தையின் இரண்டு புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்ப படிவத்தை NSDL அலுவலத்தில் கட்டண ரசீதுடன் சமர்பிக்க வேண்டும்.
  • வெரிஃபை செய்த பிறகு, பான் அட்டை அலுவலகத்தில் வழங்கப்பட்ட முகவரிக்கு அனுப்பப்பட்டு விடும்.
google news
Continue Reading

Trending