Connect with us

latest news

Flood Insurance இருந்தா போதும், வெள்ளம் பாதித்தாலும் பிரச்சினையில்லை..!

Published

on

இந்தியாவில் புயல், மழை, வெள்ளம் பாதிப்பு சமீப காலங்களில் கணிக்க முடியாத அளவுக்கும், எதிர்பாரா சமயங்களிலும் ஏற்படுகிறது. கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் பல்வேறு மாநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அவர்களது சேமிப்பு, உடமைகள் மற்றும் வசிக்கம் வீடு என எல்லாமே பாதிப்புக்கு ஆளாகிறது.

சமீபத்தில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. இதுதவிர அசாம், ஒடிசா, உத்தராகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலக்கட்டத்தில் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவது தொடர்கதையாத உள்ளது.

இந்த நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள காப்பீடு திட்டங்கள் உங்களுக்கு கைக் கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? வெள்ளம் தொடர்பான சேதங்களை மட்டும் உள்ளடக்கிய பிரத்யேக காப்பீடு திட்டங்கள் எதுவும் தற்போதைக்கு கொண்டுவரப்படவில்லை.

இருப்பினும், பரவலான காப்பீட்டு திட்டங்களில் வெள்ளப் பாதுகாப்பை ஈடு செய்யும் பலன் வழங்கப்படுகிறது. “ஸ்டாண்டர்ட் ஃபயர் & ஸ்பெஷல் பெரில்ஸ் பாலிசி மற்றும் ஹவுஸ்ஹோல்டர்ஸ் இன்சூரன்ஸ் பாலிசிட மூலம் வெள்ள பாதிப்புகளுக்கு காப்பீடு பெற முடியும் என ஃபின்ஹாட் இணை நிறுவனர் மற்றும் மூத்த நிதி அலுவலர் சந்தீப் கட்டியார் தெரிவித்தார்.

இதுபோன்ற காப்பீடு திட்டங்கள், “கலவரங்கள், வேலைநிறுத்தங்கள், வெள்ளம், புயல் மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு நிகழ்வுகளால் ஏற்படும் சேதங்கள், தீ மற்றும் ஆபத்து காப்பீடு வழங்குகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐஆர்டிஏஐ-இன் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட நிலையான வீட்டுக் காப்பீட்டு திட்டம் தான் பாரத் க்ரிஹா ரக்ஷா பாலிசி. இதை கொண்டு வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீட்டிற்கு காப்பீடு செய்து கொள்ளலாம். “இந்த திட்டம் பத்து ஆண்டுகள் வரை கவரேஜ் வழங்குகிறது. இந்த திட்டம் கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்கள் இரண்டிற்கும், கட்டிடத்தின் காப்பீடு செய்யப்பட்ட மதிப்பில் 20% வரை தன்னியக்க பாதுகாப்பை வழங்குகிறது.” என்று சோழ எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் சூர்யநாராயணன் தெரிவித்தார்.

இந்த வீட்டுக் காப்பீட்டுக் திட்டங்கள் வெள்ளம், புயல் மற்றும் சூறாவளிகளால் ஏற்படும் சேதங்கள் உள்பட பலவிதமான அபாயங்களை உள்ளடக்கியுள்ளது. அவை கட்டமைப்பு சேதத்திலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், கனமழையால் கட்டிட பெயிண்டிங்கில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வண்ணம் தீட்டுதல் போன்ற கூடுதல் செலவுகளையும் ஈடுகட்டுகின்றன.

இடம், சொத்து வகை, கட்டிட வயது மற்றும் கட்டுமானப் பொருள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீட்டு காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியம் தொகையகள் மாறுபடும்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Cricket

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி கடந்த வாரம் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அபாரமாக ஆடிய இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரு அணிகள் இடையிலான முதலாவது போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய வீர்ர்களான விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவை அழைத்து நிற்க வைத்து, அவர் முன் அவரது பந்துவீச்சை செய்து காட்டிய சம்பவம் அரங்கேறியது.

கான்பூரில் நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஆட்டம் துவங்கும் முன்பே, இந்த சேட்டை சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அப்போது விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா பும்ராவின் முன் அவரது பந்துவீச்சு ஆக்ஷன் எப்படி இருக்கும் என்பதை செய்து காட்டினர். இதனை துவக்கத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருந்த இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் வாய்விட்டு சிரித்தார்.

களத்தில் போட்டி துவங்கும் முன் இரு வீரர்கள் பும்ராவை கலாய்க்கும் சம்பவத்தை பார்த்து சிரித்த ரியான், ஒருக்கட்டத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் தான் அணிந்திருந்த குளோவ் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டார்.

google news
Continue Reading

Cricket

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

Published

on

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தியுள்ளார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 2000-க்கும் அதிக ரன்கள் மற்றும் 200-க்கும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், இதே சாதனையை மற்றொரு வீரர் சமன் செய்யும் நிலையில் உள்ளார்.

இந்த வீரரும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருபவர் தான். இந்திய அணியின் மற்றொரு ஆல்-ரவுண்டர் வீரராக சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரவிச்சந்திரன் அஷ்வின் ஜடேஜாவின் இந்த சாதனையை நெருங்கி வருகிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் இதுவரை 1943 ரன்களையும், 369 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா தற்போது 299 விக்கெட்டுகள் மற்றும் 3122 ரன்களை அடித்துள்ள நிலையில், அவர் இன்னும் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைக்க முடியும்.

google news
Continue Reading

Cricket

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

Published

on

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி நிதானமாக ஆடியது.

முதல் நாள் உணவு இடைவேளை வரை அந்த அணி 74 ரன்களை மட்டுமே குவித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இடையில் மழை காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. பிறகு உணவு இடைவெளிக்குப் பின் போட்டி மீண்டும் துவங்கியது. பிறகு மீண்டும் மழை குறுக்கிட்டதால், நேற்றைய ஆட்டம் பாதியில் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை அடித்திருந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்க இருந்தது. எனினும், தொடர் மழை காரணமாக இன்றைய போட்டி ஆரம்பிக்கப்படாமல் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகும் களத்தில் போட்டியை நடத்த முடியாத சூழல் நிலவி வந்துள்ளது.

இதனால் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு விட்டது. இன்றைய நாளில் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி நிறுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் இரு அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

google news
Continue Reading

latest news

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

Published

on

Karnataka CM

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ஹெச்.டி.குமாரசாமி மந்திரியாக உள்ளார். அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமின் பெற்றார் எனவும் சொல்லியிருக்கிறார்.

மூடா மோசடி தொடர்பாக கர்நாடக மாநில  முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய கவர்னர் அளித்த உத்தரவு செல்லும் என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து முறைகேடடு தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ராஜினாமா சித்தராமையா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி வருகிறது.

siddaramaiah

siddaramaiah

இதெல்லாம் நமது அரசியலை சீர்குலப்பதற்கான அரசியல் வேலை, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், லோட்டஸ் ஆபரேசனை முயற்சி செய்தார்கள், அது தோல்வி அடைந்தது, ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் இல்லாமல் இரண்டு முறை ஆட்சி அமைத்தார்கள் எடியூரப்பா வெற்றி பெற்றாரா? என  கேட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஹெச்.டி.குமாரசாமி இடம் பிடித்துள்ளார். மந்திரியாக உள்ள அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பிறகே அவர் ஜாமீன் பெற்றிருக்கிறார் என கூறியிருக்கும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தான் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்பதனையும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மூடா மோசடி தொடர்பான விஷயங்களுக்கு பிறகு கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு ஏற்படத் துவங்கியது.

 

google news
Continue Reading

latest news

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

Published

on

ops

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். அதோடு இரட்டை இலையை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியலில் அருவருக்கத்தக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரிந்திருக்கக் கூடிய சக்திகள் அனைவரும் தொண்டர்கள் தான் என்றார்.

Panneer selvam

Panneer selvam

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வாங்கி, ஏழு இடங்களில் டெபாசிட் பறிபோய் இருக்கிறது என்றார். அதோடு பதிமூன்று இடங்களில் மூன்றாவது இடத்தில் வந்திருக்கிறது, பிற பாராளுமன்ற தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொண்டர்களை பிரித்து வைத்திருக்கும் காரணத்தினாலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காமல் போனது, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய இந்த இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்றார்.

சுயேட்சையாக தான் போட்டியிட்டு முப்பத்தி மூன்று சதவீத வாக்குகளை பெற்றிருப்பதாகவும், இது தொண்டர்களும், பொது மக்களும் தங்கள் பக்கத்தில் இருப்பதையே இது காட்டியிருப்பதாகவும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்ட போது பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் களம் கண்டனர் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

google news
Continue Reading

Trending