cinema
சமரசத்துக்கு சம்மதம் சொன்ன திரிஷா!…வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்……
தமிழ் சினிமாவில் முன்னனி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் திரிஷா. இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான திரைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார் இவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.
விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் “தி கோட்” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் திரிஷா. மெகா ஹிட்டான இந்த பாடல், ரீல்சுக்காக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இப்போது. அஜீத்துடன் நடித்து இயக்கப்பட்டு வரும் “விடாமுயற்சி” படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு நடித்து வரும் “தக்-லைஃப்” படத்திலும் திரிஷா தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரிஷா குடியிருந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் மதில் சுவர் இடிக்கப்படுவது குறித்து திரிஷாவிற்கும் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மெய்யப்பன் என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தனது வீட்டின் கட்டமைப்பிற்கு தடையாக இருந்த பொது மதில் சுவரை அண்டை வீட்டுக்காரரான மெய்யப்பன் இடிக்க முயன்றுள்ளார். சுவரை இடிப்பதற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுவரை இடிக்க இடைகால தடை விதித்தது. இந்த சூழலில் இந்த வழக்கு விஷயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுடன் சமரசம் செய்து கொள்வதாக திரிஷா தெரிவித்த நிலையில், இந்த வழக்கு முடித்து வைத்துள்ளது நீதி மன்றம். பேச்சு வார்த்தை மூலமாக இருவரும் சுவர் குறித்து சமரசமாக செல்ல முடிவு எடுத்துள்ளதாக திரிஷா தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
cinema
அறிவுரை சொன்ன ஆந்திர துணை முதல்வர்…மன்னிப்பு கேட்ட கார்த்தி…
ஆந்திர மாநிலம் திருப்பதி கோவில் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் திருப்பதி பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. திரும்பும் திசை எல்லாம் திருப்பதி கோவில் லட்டு பற்றிய பேச்சுக்கள் இருக்கும் நிலையாகி விட்ட நேரத்தில் திரைப்பட விழா ஒன்றில் நடிகர் கார்த்தி பேசியதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண்.
சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள “மெய்யழகன்” திரைப்படம் இம்மாதம் இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளது . இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோ நிகழ்ச்சி ஆந்திராவில் நடக்க, அதில் படத்தின் நாயகனான கார்த்தி பங்கேற்றார்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா? என கேட்க, அது உணர்வுப்பூர்வமான விஷயம், லட்டு பற்றி பேச வேண்டாம் என கார்த்தி கூறியிருந்தார்.
கார்த்தியின் இந்த பேச்சிற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், சினிமா நிகழ்ச்சியில் லட்டுவை வைத்து நகைச்சுவை செய்யக்கூடாது என தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். சனாதன தர்மம் குறித்து பேசும் போது நூறு முறை யோசித்து விட்டு பேச வேண்டும் என சொல்லியிருந்தார்.
இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி. அதோடு வெங்கடேச பெருமானின் பக்தன் என்ற முறையில் நமது பண்பாட்டின் மீது பிடிப்புடன் இருந்து வருவதாகவும் தனது சார்பான விளக்கத்தை சொல்லியிருக்கிறார் கார்த்தி.
cinema
திருப்தி கொடுத்த லப்பர் பந்து!…ஆனந்தப்பட்ட அஷ்வின்…
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் வங்கதேச அணிக்கு எதிராக பேட்டிங்கில் சதமடித்து அசத்தினார். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
போட்டி துவங்கியதும் இந்திய அணியின் விக்கெட்டுகள் மலமலவென சரியத் துவங்கிய நிலையில் பொறுப்புடன் ஆடி டெஸ்ட் போட்டிகளில் சென்னையில் தனது இரண்டாவது சதத்தினை பூர்த்தி செய்தார் அஷ்வின். இவருக்கு துணையாக மறுமுனையில் பொறுமையுடன் ஆடிய மற்றொரு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவும் என்பத்தி ஆறு ரன்களை குவித்து அசத்தினார்.
அதோடு மட்டுமல்லாமல் அஷ்வினைப் போலவே பவுலிங்கிலும் அசத்தி வங்கதேசத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார். கடந்த வாரம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியான “லப்பர் பந்து” படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வின்.
படத்தின் இயக்குனரை வெகுவாகப் பாராட்டியதோடு மட்டுமல்லாது, படத்தில் நடித்துள்ள அத்துனை பேருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அஷ்வின் சொல்லியிருக்கிறார்.
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் பிரபலமான தினேஷ், ஹரிஷ் கல்யான், ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள “லப்பர் பந்து” படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் அஷ்வினும் “லப்பர் பந்து” படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
‘கெத்து’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள தினேசும், ஹரீஸ் கல்யானும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் நடித்திருக்கின்றனர். படத்தின் கதைக்களம் கிரிக்கெட் விளையாட்டை வைத்து இயக்கப்பட்டிருக்கிறது.
cinema
இத்தனை லட்சமா நடிகர் மோகனுக்கு?… நாக்-அவுட் செய்த ரீ-என்ட்ரீ!…
ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களாக உருவாகி வந்த நேரத்தில் இவர்களுக்கு போட்டியாளராக திடீரென திரைத் தளத்திற்கு வந்தவர் மோகன். மோகனின் வளர்ச்சிக்கும், அவரது படங்களின் வெற்றிக்கு அவரது படத்தில் வந்த பாடல்களே முக்கிய காரணம் என சொல்லப்பட்டு வந்தது. இதனால் இவரது பெயர் கூட சினிமாவில் ‘மைக்’ மோகனாக மாறியது.
அவரது அநேக வெற்றிப்பட பாடல்களுக்கு இசையமைத்தது இளையராஜா தான். வெள்ளி விழா நாயகன் என அப்போதைய நேரத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அழைக்கப்பட்டவர் மோகன், ஒரே வருடத்தில் இத்தனை படங்களா? என ஆச்சர்யப்படுத்தும் சாதனைகளை தனக்குள் கொண்டவர் இவர்.
அதிலும் இத்தனை வெற்றிகளா? எனவும் சிந்திக்க வைத்தவர் மோகன். திடீரென தமிழ் சினிமாவிலிருந்து மாயமானர் ‘மைக்’மோகன்.
பல காரணங்கள் சொல்லப்பட்டாலும். நோயின் காரணம் என்பதே காட்டுத் தீ போல பரவிய வதந்தியானது. மோகனை மீண்டும் திரையில் பார்க்க முடியாதா? என்ற ஏக்கமும் அவரது ரசிகர்களுக்கு எழுந்தது.
‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் தலை காட்டிய மோகன், விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள “தி கோட்” படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோவாக ஜொலித்து வந்த நேரத்தில் இவரது அதிகமான படங்களில் சண்டை காட்சிகள் இருந்தது கிடையாதாம்.
அப்படிப்பட்ட மோகன் தனது ரீ-என்ட்ரீயில் திடீரென வில்லன் அவதாரம் எடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். “தி கோட்” படத்தில் நடிக்க மோகனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் பற்றிய செய்தி இப்போது வைரலாகி வருகிறது. இதன் படி மோகனுக்கு நாற்பது லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லுகிறது அந்த வைரல் செய்தி.
cinema
தற்கொலை செய்து கொண்ட ஷாரூக்கான் பட நடிகையின் தந்தை…அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்…
நடிகர் ஷாரூக்கான் படத்தில் நடித்த வரும் மாடலிங்கில் புகழ்பெற்று விளங்கி வருபவருமான நடிகை மலைகாஅரோரா. பாலிவுட்டைச் சார்ந்த நடிகையான இவர் நாடு முழுவதும் மிகவும் பிரபலமானவர்.
இவரது தந்தை தனது வீட்டின் மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் பாலிவுட் வட்டாரத்தையே மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மாடலிங் கலைஞராகவும், நடிகராகவும் நாடு முழுவதும் அறியப்பட்டவர் மலைகா அரோரா.
நடிகர் சல்மான்கானின் “தபாங்” பட சீரயல்களில் நடித்திருக்கிறார். ஷாரூக்கான் நடித்து வசூல் சாதனை படைத்த “தில் சே ரே” படத்தின் ஹிட் பாடலான ‘சைய்ய சைய்ய சைய்யா’ பாடலுக்கு நடனமாடியவர்.
இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு இவர் மிகவும் பிரபலமடைந்தார். மலைகா அரோரா தனது குடும்பத்தினருடன் மும்பை பாந்த்ரா பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை அனில் அரோரா கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் மலைகா அரோரா வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது தந்தை அனில் அரோரா தனது வீட்டின் ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
ஓய்வு பெற்ற கடற்படை வீரரான அனில் அரோராவின் தற்கொலை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் பதினொன்றாம் தேதி இந்த தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.
மும்மையின் பிரபல நடிகையான மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் திரைத் துறையினரையும், சினிமா ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
cinema
எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை…கெரளவ குறைச்சலே இது…அறிக்கை வெளியிட்ட ஜெயம் ரவி மனைவி…
“ஜெயம்” ரவியும், அவரது காதல் மனைவி ஆர்த்தியும் பிரியப் போகிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகவே செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த நடிகர் “ஜெயம்”ரவி, விவாகரத்து மனுவை சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் வழங்கியுள்ளார்.
இதன் மீதான விசாரணை அடுத்த மாதம் பத்தாம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார் “ஜெயம்”ரவியின் மனைவி ஆர்த்தி.
அந்த அறிக்கையில் தனது திருமண வாழ்க்கை குறித்த செய்திகள் ஊடகங்களில் அறிக்கை வெளியானதை பார்த்து தான் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும்.
இது முழுக்க, முழுக்க தனக்கு தெரியாமலும், தனது ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று எனவும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் நம்பிக்கையில் கடந்த பதினெட்டு ஆண்டுகள் “ஜெயம்”ரவியுடன் வாழ்ந்து வந்த வாழ்க்கை இந்த அறிக்கையால் கெளரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக தான் உணர்வதாக சொல்லியிருக்கிறார்.
தனது கணவர் “ஜெயம்”ரவியை சந்தித்து,மனம் விட்டு கடந்த சில நாட்களாக முயற்சி செய்ததாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும், ஆர்த்தியும் அவரது இரண்டு மகன் களும் என்ன நடக்கிறது என்று புரியாமல் தவித்து வருவதாகவும், திருமண பந்தத்தில் இருந்து விலகுவது குறித்த முடிவு முழுக்க, முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்தே”ஜெயம்”ரவி எடுத்துள்ளதாரே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை எனவும் நடிகர் “ஜெயம்”ரவியின் மனைவி ஆர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
-
Cricket1 day ago
களத்தில் சண்டை.. பவுலருக்கு சோக்-ஸ்லாம் போட்ட பேட்டர்.. வீடியோ வைரல்
-
Cricket1 day ago
147 ஆண்டுகளில் முதல்முறை.. இலங்கை வீரர் மிரட்டல்.. கவாஸ்கர் கூட இந்த சாதனை படைக்கல
-
Cricket22 hours ago
நான் கிளம்புறேன்…ரிடையர்மென்ட் சொன்ன பிராவோ…
-
latest news1 day ago
வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்
-
Cricket1 day ago
INDvsBAN 2வது டெஸ்ட்: கான்பூரில் பாதுகாப்பு குளறுபடி, UPCA கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?
-
Finance22 hours ago
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
-
Cricket21 hours ago
இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…
-
latest news2 days ago
பாஜக பொறுப்பேற்காது…செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்…வானதி சீனிவாசன் விளக்கம்…