Connect with us

Cricket

ஐபிஎல் மெகா ஏலம்.. ஹர்திக் பாண்டியாவை மற்ற அணிகள் வாங்குவது சந்தேகம் தான்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்

Published

on

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிர நிலையை எட்டியுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற அணியை உருவாக்குவது தொடர்பான திட்டமிடல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த முறை மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் முறை அமலில் உள்ளது.

மேலும், அன்கேப்டு வீரருக்கான விதிமுறை மற்றும் ஆர்டிஎம் கார்டு உள்ளிட்டவை மெகா ஏலத்தை சுவாரஸ்யத்தில் வைத்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த நிலையில், ஒவ்வொரு அணியில் எந்தெந்த வீரர் தக்க வைக்கப்படலாம் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை தக்கவைக்கக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார். மாறாக அவரை ஆர்டிஎம் கார்டு மூலம் பெற முயற்சிக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

“ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மூன்று வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவர்களை மீண்டும் அணியில் எடுப்பது சவாலான காரியம் ஆகிவிடும். மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஆர்டிஎம் கார்டு மூலம் அணியில் சேர்த்துக் கொள்ளலாம்.”

“ஹர்திக் பாண்டியாவையும் ஏலத்தில் எடுக்க முடியாது என்ற சூழல்தான் நிலவுகிறது. எனினும், அவர் அடிக்கடி காயத்தால் அவதியுறும் காரணத்தால், மற்ற அணிகள் அவரை எடுக்க ஆர்வம் செலுத்துவார்களா என்பது கேள்விக்குறியான விஷயம் தான். ஆர்டிஎம் இருக்கும் பட்சத்தில், அதனை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். பும்ரா, பாண்டியா போன்ற வீரர்கள் ஏலத்திற்கு வரும்பட்சத்தில் அவர்களை மீண்டும் அணியில் சேர்ப்பது கடினமாகிவிடும்,” என்று அஜய் ஜடேஜா தெரிவித்தார்.

google news

Cricket

துவங்கியது நான்காம் நாள் ஆட்டம்…வங்கதேசம் தடுமாற்றம்…

Published

on

Ind vs Ban

இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேச ஆடவர் கிரிக்கெட் அணி. முதல் போட்டியில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில், இரண்டாவது போட்டியை எதிர்கொண்டு வருகிறது இந்த அணி.

முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில்  பாதியில் நிறுத்தப்பட்டது முதல் நாள் ஆட்டம். ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையில் காரணமாக தடைபட்டது இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்கள். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது.

இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மலமலவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது வங்கதேச அணி.

Ind Bowling

Ind Bowling

நிறுத்தப்பட்ட முதல் நாள் ஆட்டத்தின் போது நூற்றி ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி நான்காம் நாளான இன்று அறுபத்தி ஆறு ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் இருநூற்றி ஐந்து ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.

உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய அணியின் பந்து வீச்சில் அதிரடி காணப்படும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.  இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப், ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

வங்கதேச அணியின் மொனிமுல் ஹக் நூற்றி இரண்டு ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று விளையாடி வருகிறார். அவருடன் மெஹதி ஹசன் மிராஸ் ஆறு ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்து வருகிறார் உணவு இடைவேளையின் போது.

google news
Continue Reading

Cricket

சூப்பர் மேனாக ரோகித்.. சூப்பர் கேட்ச் பிடித்து அசத்தல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Published

on

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. மழை மற்றும் மோசமான ஆடுகளம் காரணமாக இந்த ஆட்டத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (செப்டம்பர் 30) காலை துவங்கியது. இன்றைய ஆட்டத்தின் துவக்கத்திலேயே மேஜிக் செய்த பும்ரா வங்கதேசம் அணியின் முஷ்பிகுர் ரஹிம் விக்கெட்டை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

அந்த வரிசையில், வங்கதேசம் அணியின் ஐந்தாவது விக்கெட்டாக லிட்டன் தாஸ்-ஐ முகமது சிராஜ் கைப்பற்றினார். ஆனால், இந்த விக்கெட் ரோகித் சர்மாவின் துரித செயல்பாட்டால் மட்டுமே சாத்தியமானது. குறிப்பிட்ட பந்தை சிராஜ் வீசும் போது 30-யார்டு வட்டத்தில் ரோகித் சர்மா நின்றுக் கொண்டிருந்தார். பந்து உற்று நோக்கிய லிட்டன் தாஸ் அதனை ஓங்கி அடிக்க முயன்றார்.

எனினும், அவரது டைமிங் மிஸ் ஆக லிட்டன் தாஸ் அடித்த பந்து நேரடியாக ரோகித் சர்மாவின் தலைக்கு மேல் சென்றது. இதனை சரியாக சுதாரித்துக் கொண்ட ரோகித் சர்மா தரையில் இருந்து ஒற்றை ஜம்ப் செய்து ஒரே கையில் பந்தை லாவகமாக பிடித்துக் கொள்ள களத்தில் இருந்த இந்திய வீரர்கள், பந்தை அடித்த லிட்டன் தாஸ் வரை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இறுதியில் அந்த கேட்ச் விக்கெட்டாக மாற லிட்டன் தாஸ் நடையை கட்டினார்.

ரோகித் சர்மா தரையில் இருந்து காற்றில் மிதந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியில் இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் ஆட்டம் கூட மீதியில்லாத சூழலில், இந்திய அணி இந்த போட்டியில் முடிவை எதிர்நோக்கி விளையாடி வருகிறது.

google news
Continue Reading

Cricket

ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!

Published

on

ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. முன்னதாக ஐபிஎல் 2025 குறித்த ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட 2025 ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தக்கவைக்கும் விதிகள் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

தற்போது ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இதனால், ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்வது என்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது குறித்த இறுதி முடிவு அடங்கிய விவரங்களை ஐபிஎல் அணிகள் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், ஆர்சிபி அணி அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆர்சிபி அணி எதையாவது செய்து ரோகித் சர்மா தங்களது அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் ரோகித் சர்மாவை பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க சம்மதிக்க செய்ய வேண்டும்.”

“ரோகித் சர்மாவுக்கு ஆடும் லெவனை எப்படி செட் செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும். அவரை அணியில் சேர்த்துக் கொண்டால் அந்த அணியின் நீண்ட கால கோப்பையை வெல்லும் கனவை நிறைவேற்றிக் கொள்ளவும் வாய்ப்பு உண்டு.”

இதுதவிர, மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த பேசும் போது, “ரோகித் சர்மா கேப்டனாக மட்டுமே விளையாட வேண்டும். அவர் மிகப்பெரிய வீரர், அவர் சமீபத்தில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல காரணமாக விளங்கினார். அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்க நிறைய ஆஃபர்கள் இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.”

“நிறைய பேர் கேப்டன் பொறுப்புடன் அவருக்கு அழைப்பு விடுப்பார்கள். ஆனால், என்னை பொருத்தவரை அவர் எந்த அணிக்கு சென்றாலும், கேப்டன் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகி விட வேண்டும். அவர் இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அதனை அவர் கேப்டனாகவே கழிக்க வேண்டும். களத்தில் அவரைப் போன்று கேப்டன்சி செய்பவர்கள் மிகவும் குறைவு,” என்று முகமது கைஃப் தெரிவித்தார்.

google news
Continue Reading

Cricket

ஓய்வு பற்றி கேள்வி.. டோனியுடன் ஒப்பிட்டு ஷாருக் சொன்ன பதில்.. யாரும் எதிர்பார்க்கல

Published

on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பான விதிகளை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்.

இதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் அன்-கேப்டு வீரராக கருதப்படுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதி மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. சிஎஸ்கே அணி எம்.எஸ். டோனியை ரூ. 4 கோடி என்ற தொகைக்கு தக்க வைத்துக் கொள்ளலாம்.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ​​பாலிவுட் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஷாருக் கானிடம் ஓய்வு பற்றி நக்கலாக பேசினார், ஆனால் அதற்கு ஷாருக் கொடுத்த பதில் தற்போது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நானும், தோனியும் ஒரே மாதிரியான ஜாம்பவான்கள். தோனி தான் ஓய்வு பெறுவதாக கூறிய பிறகும் 10 ஆண்டுகள் விளையாடினார் என்று ஷாருக் தெரிவித்தார்.

“லெஜண்டுகளைப் பொருத்தவரையில் மிகப் பெரிய விஷயம்… அவர்களுக்கு எப்போது நிறுத்த வேண்டும், எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று தெரியும். சச்சின் டெண்டுல்கர், சுனில் சேத்ரி – கால்பந்து வீரர், ரோஜர் பெடரர் – சிறந்த டென்னிஸ் நட்சத்திரம் வரை, எப்போது ஓய்வு பெறுவது என்பது அவர்களுக்குத் தெரியும். நீங்களும் செய்ய வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறேன். எனவே தயவுசெய்து திரும்பிச் செல்லுங்கள். மிக்க நன்றி” என்று ஷாருக் கான் கரண் ஜோஹரிடம் கூறினார்.

“அந்த வகையில் நீங்கள் எப்போது ஓய்வு பெறப் போகின்றீர்கள்” என்று ஜோஹர் பதிலளித்தார். “உண்மையில் நான் வித்தியாசமான லெஜண்ட். தோனியும் நானும் ஒரே மாதிரியான லெஜண்டுகள். முடியாது என கூறிய பிறகும் பத்து ஐபிஎல்களில் நாங்கள் விளையாடுவோம்,” என்று ஷாருக் டைமிங்கில் பதிலளித்தார். ஷாருக் கானின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

google news
Continue Reading

Cricket

விராட் கோலிக்கு வந்த சோதனை…தள்ளிப்போகும் சாதனை?…

Published

on

Virat Kohli

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.  இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று முன்தினம் துவங்கியது. மழையால் டாஸ் தாமதமான நிலையில் வங்கதேசம் முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் முப்பத்தி ஐந்து ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால்  போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று கைவிடப்பட்டது தொடர் மழை காரணமாக, இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்று நிறுத்தப்பட்டது. இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி புதிய சாதனையை இந்த தொடரில் படைப்பார் என அதிகம் எதிர்பார்க்கபடுகிறது.

Kohli

Kohli

இன்னும் நூற்றி இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்தால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகி விடுவார் இவர். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்பதனாயிரம் ரன்களைக் கடக்கும் நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை மிக்க இலக்கை அடைவதற்கான வாய்ப்பும் வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் நடந்துவிடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இரண்டு நாள் ஆட்டங்கள் ஒரு பந்து கூட வீசப்படாமல் நிறுத்தப்பட்ட நிலை நீடித்தால் விராட் கோலியின் இந்த சாதனை தள்ளிப்போகும் நிலையும் உருவாகி உள்ளது. அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்கள் இருந்தாலும் மீதமுள்ள இரண்டு நாள் விளையாட்டும் தடை இல்லாமல் நடக்க வேண்டும், கோலி சாதனையை இந்த தொடரிலேயே நிகழ்த்த வேண்டும் என்பதுவே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

google news
Continue Reading

Trending