Cricket
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
இரண்டரை நாளில் வங்கதேசத்தை வென்று டெஸ்ட் போட்டிகளில் பிரம்மிக்கத் தக்க வெற்றியை பெற்றுள்ளது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. கான்பூரில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் நான்காம், ஐந்தாம் நாட்களில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது இந்திய அணி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதை உறுதிபடுத்துவதை மனதில் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் அதிரடியை காட்டினர். இருபது ஓவர் போட்டியின் அனுகுமுறையை டெஸ்ட் போட்டியில் காட்டினர் ரோஹித் சர்மா தலைமையிலான வீரர்கள்.
இலங்கை மண்ணில் ஒரு நாள் தொடரில் சமீபத்தில் அடி வாங்கி வந்த இந்திய அணி பங்களாதேஷை பதம் பார்த்தது தனது சொந்த மண்ணில்.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று இருபது ஒவர் போட்டி தொடர் வருகிற ஆறாம் தேதி துவங்க உள்ளது.
முதல் போட்டி குவாலியரிலும், இரண்டாவது போட்டி ஒன்பதாம் தேதி டில்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத்தில் பன்னிரரெண்டாம் தேதியும் நடைபெற உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹார்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஸ் குமார் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிபிஷ்னய், வருன் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, மயங்க்யாதவ் ஆகியோர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற இருபது ஓவர் தொடரை கைப்பற்றியது போல வங்கதேசத்தையும் வென்று காட்டுவாரா? கேப்டன் சூர்ய குமார் யாதவ் என்ற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு இந்திய மண்ணில் வைத்து நடைபெற உள்ள முதல் தொடர் இதுவே என்பதனாலும் இந்த தொடர் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
Cricket
தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது கிட்டத்தட்ட இரண்டறை நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும், எஞ்சியிருந்த கொஞ்ச நேரத்தில் இந்திய அணி துரிதமாக செயல்பட்டதோடு, போட்டியில் மிக துரிதமாக செயல்பட்டு வெற்றியை தட்டித்தூக்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அதுவரை பார்த்திராத சம்பவங்கள் பல அரங்கேறின. நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். இதனால் அந்த அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸை ஆடியது. இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதைத் தொடர்ந்து நான்காம் நாளின் கடைசி செஷனில் 2-வது இன்னிங்ஸ் பேட் செய்ய வங்கதேசம் அணி களமிறங்கியது. அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் வங்கதேசம் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது போட்டியில் கமென்ட்ரி செய்து வந்த முன்னாள் வங்கதேச வீரர் அத்தர் அலி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் வங்கதேசம் பேட்டர்களுக்கு ஏதேம் அறிவுரை கூற விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் கமென்ட்ரியில் வைத்து மைக்கில், “ஒரு இந்தியராக், அவர்களிடம் விரைவில் அவுட் ஆக சொல்வேன்,” என்று பதில் அளித்தார்.
பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் வீரர்களுக்கு அறிவுரை கேட்டவருக்கு, சுனில் கவாஸ்கர் அளித்த பதில் அவர் மட்டுமின்றி அதனை கேட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுனில் கவாஸ்கரின் டைமிங் பதில் இந்திய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
Cricket
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்திய இந்தியா – வங்கதேசம் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது அவருக்கு பல சாதனைகளை பெற்றுக் கொடுத்ததோடு, இந்திய அணியும் தொடரை முழுமையாக கைப்பற்றவும் துணையாக இருந்தது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிய போது சதம் விளாசியது, பந்துவீச்சில் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியதை யாரும் மறக்க முடியாது.
சென்னை மற்றும் கான்பூர் டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் விளையாடிய விதம் அவர் பல சாதனைகளை படைக்கவும், சில சாதனைகளை தகர்க்கவும் செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் செய்த சம்பவத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
பந்துவீச்சில் இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் படடியலில் அஷ்வின் மற்றும் பும்ரா முதலிடம் பிடித்தனர். இருவரும் இந்த தொடரில் 11 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற அஷ்வின், முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இந்தத் தொடர் நாயகன் விருதை சேர்த்து அஷ்வின் இதுவரை 11 தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இலங்கை அணியின் ஜாம்பவான் வீரராக திகழ்ந்த முத்தையா முரளிதரனும் 11 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் 11 முறை வென்று முதலிடத்தில் உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஜாக்ஸ் காலிஸ் 9 முறை, இம்ரான் கான் 8 முறை, ரிச்சர்ட் ஹாட்லி 8 முறையும், ஷேன் வார்னே 8 முறையும் தொடர் நாயகன் விருது வென்றுள்ளனர்.
தொடர் நாயகன் விருது மட்டுமின்றி, இந்தத் தொடரில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25-இல் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஜோஷ் ஹாசில்வுட் 51 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடம்பிடித்துள்ளார்.
Cricket
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
கான்பூரில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றது. அதன்பிறகு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் டாஸ் வென்ற அணி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் விளையாடப்பட்ட 293 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 24 போட்டிகளில் தான் ஒரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1933 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்தியா வங்கதேசம் தொடரின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. அதாவது இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அணிகள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த சம்பவங்கள் எதுவும் இந்த மைதானங்களில் நடைபெறவில்லை. முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (6), மும்பை வான்கடே மைதானம் (5) மற்றும் மொகாலியில் உள்ள பிசிஏ மைதானம் (5) மைதனங்களில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளன.
சமீபத்திய டெஸ்ட் போட்டிகள் எதுவும் இந்த மூன்று மைதானங்களில் நடைபெறவில்லை. மேலும், இந்தத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானங்களில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்து, போட்டியிலும் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.
Cricket
92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இளம் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸில் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார்.
அதுவும், மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிக்கும் சூழல் உருவான நேரத்தில், இந்திய அணிக்கு தேவையான ரன்களை அதிரடியாக அடித்து அசத்தினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி இலக்கை துரத்தும் வேளையில், அற்புதமாக அரைசதம் கடந்து வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டியில் தனது அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கச் செய்யும் வகையில் ஆடியதோடு, குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- உள்நாட்டு போட்டிகளில் இந்திய வீரர் ஒரே ஆண்டில் அதிகபட்ச அரைசதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் எட்டு அரைசதங்களை விளாசியுள்ளார். முன்னதாக குண்டப்பா விஸ்வநாத் (1979), விரேந்திர சேவாக் (2010), சத்தேஷ்வர் புஜாரா (2016), கே.எல். ராகுல் (2017) ஆகியோர் ஒரே ஆண்டில் அதிகபட்சம் ஏழு அரைசதங்களை விளாசியுள்ளனர்.
- இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஜெய்ஸ்வால் பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே எடிஷனில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 32 சிக்சர்களை விளாசியுள்ளார்.
- முன்னதாக 2019-21 தொடரில் பென் ஸ்டோக்ஸ் 31 சிக்சர்களை அடித்தது, சாதனையாக இருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் ஒரு சீசனில் 30-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த இரண்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
Cricket
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.
போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.
ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.
நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.
-
Cricket1 day ago
கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்
-
Cricket6 hours ago
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
-
Cricket1 day ago
கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்
-
Cricket1 day ago
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
-
latest news1 day ago
ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?
-
Cricket5 hours ago
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
-
Cricket1 day ago
டெஸ்ட் போட்டியில் டி20 மோட்.. இந்தியா படைத்த சாதனைகள்.. முழு லிஸ்ட்..!
-
latest news1 day ago
உதயநிதியை சந்தித்த நடிகர் சிவகார்த்திக்கேயன்…துணை முதல்வருக்கு வாழ்த்து…