Connect with us

latest news

தோல்வியடைந்த திமுக அரசு…பலமான கூட்டணி அமையும் தமிழிசை நம்பிகை..

Published

on

Tamilisai

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக தமிழக அரசை கடுமையாக வசைபாடியுள்ளார்.

தமிழகத்தின் முப்பத்தி ஆறு மருத்துவக் கல்லூரிகளில் பதினோறு கல்லூரிகளில் டீன் கிடையாது , பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் கிடையாது, துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை, மாறாக துணை முதல்வர் நியமனத்தில் அவசரத்தினை தமிழக அரசு காட்டியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

பதினோறு மருத்துவக் கல்லூரிகளில் டீன் தேர்வு நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படும் நேரத்தில், சிறையிலிருந்து வெளியே வந்தவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

udhayanidhi Stalin

udhayanidhi Stalin

தமிழக அரசு பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சித்திருந்தார். அமைச்சர் ரகுபதி முதல்வர் ஸ்டாலினை மூலவர் என்றும், உதயநிதியை உற்சவர் என சொல்லியிருந்ததை சுட்டிக்காட்டி பேசிய தமிழிசை தமிழகத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கெல்லாம் மூலவர் ஸ்டாலின் என்றும், துணை முதல்வர் பதவி கிடைத்து உற்சாகமாக இருப்பதால் உதயநிதி உற்சவர் என விமர்சித்தார்.

அதே போல் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பல இடங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது, பல கட்சிகள் சேரும், பலமான கூட்டணி அமையும் வரும் காலங்களில், அது பாஜகவிற்கு ஏற்றமாக அமையும் என்றும் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றத்தையே சந்திக்கும் என்றும் சொல்லியிருந்தார்.

google news
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா பாதையில் செல்கிறதா?…பாஜக எச்.ராஜா கேள்வி?…

Published

on

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்வி கற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். இதனால் கட்சிப்பணிகளை கவனிக்க பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அக்கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். தனது இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கூட தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் நியமனத்தில் அவசரம் காட்டாத தமிழக அரசு துணை முதல்வர் நியமனத்தில் அவசரம் காட்டியது என விமர்சித்து பேசியிருந்தார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது எனவும் விமர்சித்திருந்தார்.

hraja

hraja

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தின் எதிர்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் அதிமுக பதினைந்து சதவீத வாக்குகளை இழந்துள்ளது என விமர்சித்திருந்தார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாதையில் அதிமுக செல்கிறதா? என அக்கட்சித் தொண்டர்கள் நினைத்திருக்கலாம் என சொல்லியிருந்தார். அதே போல அறநிலையத்துறை புனரமைப்பு செய்த கோவில்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்தவர்கள் தான் மூட வேண்டுமே தவிர மத்திய அரசு மூடாது எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு, மக்களை ஏமாற்றும் மோசடி எனவும் சொல்லியிருந்தார் எச்.ராஜா.

google news
Continue Reading

india

மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

Published

on

இந்திய நாடு சுதந்திரம் அடைவதில் முக்கிய பங்கு வகித்தவர் காந்தியடிகள். இவரது தியாகத்தை நினைவு கூறும் விதமாக “மகாத்மா” என அழைக்கபடுகிறார். தேசப்பிதா காந்தியடிகளின் அஹிம்சை கொள்கையின் மூலமாக இந்திய நாடு பிரிட்டீஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு தங்களது மரியாதையை செலுத்தி வருகின்றனர். இன்று காலை முதலே அவரது நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு சென்று தலைவர்கள் பலரும் தங்களது மரியாதையை மலர் தூவி செய்து வருகின்றனர். நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவு மரியாதையை செலுத்தினார்.

டெல்லி முதல்வர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரும் மகாத்மாவின் நினைவிடத்தில் மலர் தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.

CM Pays Respect to Mahatma Gandhi

CM Pays Respect to Mahatma Gandhi

தமிழக அரசின் சார்பில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தியின் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் அருகே மகாத்மாவின் உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று காந்தியின்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அப்போது உடனிருந்தார்.

சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மாவின் உருவப்படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் எல்.முருகனும் ஆளுநருடன் சென்று மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.

google news
Continue Reading

cinema

நண்பர் நலமடைய விழைகிறேன்…ரஜினிக்கு கமல் விடுத்துள்ள செய்தி…

Published

on

Kamal

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், நடிகர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் ரஜினி பூரண நலமடைய வாழ்த்தி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினி நலன் பெற வாழ்த்தியிருக்கிறார்.

ரஜினி போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வலிப்பதாக அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்க அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

அதில் அடி வயிற்றில் வீக்கம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதற்கான தீவிர சிகீட்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்குள்ளேயும் அவர் சூப்பர் ஸ்டாராகத் தான் இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்ததாக செய்திகள் வந்தது.

Kamal Rajini

Kamal Rajini

இந்நிலையில் ரஜினி குணமடைந்து வருகிறார், அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லியிருந்தது.

அவர் விரைவில் நலன் பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினியின் உற்ற நண்பரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் தனது  எக்ஸ் பக்கத்தில் ரஜினி பூரண நலனடைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில் “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

latest news

சொந்த வீடு வாங்க ரூ. 9 லட்சம் வரை கடன்.. இந்தத் திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

பிரமதர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா. சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்கள், நலிவடைந்த நிலையில் உள்ளவர்களுக்கு வீடு கட்ட உதவுவதே, இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டம் அறிவிக்கப்பட சமயத்தில், மார்ச் 31, 2022 ஆண்டிற்குள் நாடு முழுக்க 20 மில்லியன் வீடுகளை மலிவு விலையில் கட்டிக் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பிறகு, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான காலக்கெடு டிசம்பர் 2024 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், 2.95 கோடி வீடுகளை இந்தத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் போது, வீடு கட்டம் செலவு கணிசமான அளவு குறைந்துவிடும்.

இந்தத் திட்டத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்கள், எஸ்.சி./எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர். மேலும், தெருவோர வியாபாரம் செய்வோர், கைவினை கலைஞர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சேரியில் வசிப்பவர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நலிவடைந்த பிரிவினர் (EWS), குறைவான வருமானம் கொண்டவர்கள் (LIG) மற்றும் நடுத்தர வருமானம் (MIG) பிரிவினரும் பயன்பெற முடியும். இதில் EWS பிரிவில் இருப்பவர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலும், LIG பிரிவில் உள்ளவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. MIG பிரிவில் வருபவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

google news
Continue Reading

latest news

சொந்த தொழில் தொடங்க ரூ. 50,000 கடன்.. ஈசியா வாங்குவது எப்படி?

Published

on

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுதவிர சுயதொழில் செய்பவர்களுக்கு எளிய முறையில் கடன் வழங்கும் நோக்கில் முத்ரா யோஜனா கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சொந்த தொழில் தொடங்குவோருக்கு எளிய முறையில் கடன் வழங்கப்படுகிறது.

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் பெறும் கடன் தொகைக்கு எந்த வித அடமானமும் தேவையில்லை. மேலும், விரைவில் பணம் வழங்கப்பட்டு விடும். முத்ரா திட்டத்தில் மொத்தம் மூன்று பிரிவுகள் உள்ளன. அதில் விஷூ பிரிவில் தான் சிறு குறு வணிகங்களுக்கு கடன் வழங்கப்படும். இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

பாரத ஸ்டேட் வங்கியில் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ. 50,000 வரை கடன் பெறலாம். இந்த கடன் தொகைக்கு உத்தரவாதம் மற்றும் பிணை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு தொழில் தொடங்கவோ அல்லது ஏற்கனவே செய்துவரும் சிறுதொழில்களை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும்.

தொழில் தொடங்குவோர் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 வரை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு வங்கிகள் சார்பில் மிகக் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். இந்த கடன் தொகையை அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கடன் பெறுவதற்கு உத்தரவாதம், பாதுகாப்பு எதுவும் சமர்பிக்க வேண்டாம்.

மேலும், கடன் பெற இதர கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திட்டத்தில் கடன் பெற ஆன்லைன் மற்றும் நேரடியாக வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:

இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பதாரர் சிறு தொழில்முனைவோராக இருப்பது அவசியம்.

விண்ணப்பதாரர் நிலையான வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது 18 முதல் 65-க்குள் இருப்பது அவசியம் ஆகும்.

கடன் கோரும் வியாபாரம் விவசாயம் அல்லாத துறையுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. செலுத்தும் பட்சத்தில் அதற்கான பதிவு செய்திருப்பது அவசியம்.

மேற்கூறிய நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள் தங்களின் அடையாள அட்டை, முகவரிச் சான்று, சுய புகைப்படம், வங்கி கணக்கு விவரங்கள், வணிகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. விவரங்கள் அடங்கிய ஆவணங்களுடன் கடன் கோரி விண்ணப்பிக்கலாம்.

google news
Continue Reading

Trending