latest news
உங்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுகிறதா? அப்போ இந்த தகவலை
இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது மாத சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத் தொகையை டிடிஎஸ்-ஆக வருமான வரித்துறையில் செலுத்தும் விதிமுறை அமலில் உள்ளது. இந்தத் தொகையை பணியை வழங்கும் நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் சார்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பிட்ட ஊழியரின் சம்பளம், அதில் எத்தனை சதவீதம் டிடிஎஸ்-ஆக பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் வருமான சான்றில் இடம்பெற்று இருக்கும். என்னும், நிறுவனங்கள் சார்பில் பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை முறையாக வருமான வரித்துறையில் செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான பிரச்சினைகள் சமீபத்தில் அரங்கேறியுள்ளன. இந்த நிலையில், உங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் தொகை வருமான வரித்துறையில் சரியாக செலுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஒரு பணியாளராக இருப்பவர்கள் எனில், 26AS-இல் வரி விலக்கை நீங்கள் சரிபார்க்க முடியும். இது மாதாந்திர வரி விலக்கைக் காட்டுகிறது. உங்களது பே ஸ்லிப்-இல் முதலாளி காட்டும் வரியை டெபாசிட் செய்கிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும். வருடத்தில் டிடிஎஸ் கழிக்கப்பட்டதா இல்லையா என்பதை சரிபார்க்கலாம்.
- ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் வலைதளம் செல்ல வேண்டும்
- யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு பதிவிட்டு இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்
- லாக்-இன் செய்ததும், நீங்கள் நீல நிற ரிப்பனுக்குச் சென்று, இ-ஃபைல் ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்கிரால் டவுன் மெனுவை இயக்கலாம்.
- ‘வருமான வரி ரிட்டர்ன்ஸ்’ ஆப்ஷனை க்ளிக் செய்து, ஸ்கிரால் டவுன் மெனுவில், ‘வியூ 26AS’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி தனி இணையப்பக்கம் திறக்கும்.
- அடுத்து, நீங்கள் ‘வரிக் கிரெடிட்டை பார்க்க (படிவம் 26AS/வருடாந்த வரி அறிக்கை)’ என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.
latest news
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மாலை நாலு மணிக்கு கோலாகலாமாக துவங்க உள்ளது. இதற்கு முன்னர் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி இந்த போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கன மாநில விளையாட்டு போட்டிகள் இன்று முதல் வருகிற இருபத்தி நான்காம் தேதி வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறுகிறது. முப்பத்தி ஆறு வகையான விளையாட்டுகள் நடத்தப்பட உள்ளது.
இந்தாண்டு தனி நபர் மற்றும் குழுப் போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகையை ரூபாய் முப்பத்தி ஏழு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த போட்டிகளுக்கான துவக்க விழா இன்று மாலை நாலு மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறுகிறது.
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துளசிமதி, டிரிபிள் ஜம்ப் பிரவீன் சித்ரவேல் ஆகியோர் துவக்க விழாவில் ஜோதியை ஏந்திச் செல்ல உள்ளனர். தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று போட்டிகளை துவக்கி வைக்க உள்ளார்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அணியினருடன் வரும் அலுவலர்களுக்கும் டி-ஷர்ட் வழங்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி, மாணவர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழக அரசு ஊழியர்கள் என ஐந்து வகை பிரிவாக நடத்தப்பட்ட போட்டிகளில் பதினொன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்.
மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகள் நிறைவடைந்திருந்த நிலையில் இதில் வெற்றி பெற்றுள்ள முப்பத்தி மூவாயிரம் வீரர், வீராங்கனைகள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட உள்ளனர்.
latest news
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. .
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் அடுத்த இருபத்தி நான் கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
latest news
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது. சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு பவன் கல்யாண் எதிர் கருத்து தெரிவித்திருந்த நிலையில், உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். இதனால் இரு மாநில துணை முதல்வர்களிடையே கருத்து மோதல் துவங்கியுள்ளது.
சனாதானம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசியிருந்தார். அப்போது சனாதனம் என்பது வைரஸ் போன்றது என சொல்லியிருந்தார். இதற்கு ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது கருத்தினை சொல்லியிருந்தார்.
சனாதன தர்மத்தை யாரேனும் அழிக்க முயன்றால், ஏழுமலையானின் பாதத்தில் இருந்து சொல்கிறேன், நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களைப் போலவே நிறைய பேர் வந்து போய் விட்டார்கள். ஆனால் சனாதன தர்மம் அப்படியே தான் நிலைத்திருக்கிறது என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் கருத்து குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் தமிழக துணை முதல்வர் உதயநிதி. பவன் கல்யாண் கருத்து குறித்து பொறுதிருந்து பார்க்கலாம் ‘LET’S WAIT AND SEE’ என தனது காரில் அமர்ந்து சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.
திருப்பதி கோவில் லட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்த நேரத்தில் திரைப்பட நடிகர் கார்த்தி பட விழா ஒன்றில் பேசியிருந்ததற்கு கார்த்தியை கடுமையாக கண்டித்து தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தார் பவன் கல்யாண்.
தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டால் அதற்கு தான் மன்னிப்பு கோருவதாக கார்த்தி பதிலளித்திருந்தார். இந்நிலையில் சனாதனம் குறித்து துணை முதல்வர்கள் இருவரும் பேசியுள்ள காரணத்தினால அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Finance
உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…
தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.
தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.
நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி என்பதாகவும் (ரூ.56,880/-) இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.
latest news
வேகம் முக்கியமில்ல பிகிலு…விவேகம் தான் முக்கியம்…தவெக தலைவர் விஜய் அறிவுரை…
தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்தே வருகிறது. அண்ணாத்துரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என அரசியலின் ஆளுமைகள் கோலிவுட்டிலிருந்து வந்தவர்களே. இவர்களுக்கு அடுத்த படியாக இயக்குனரும், நடிகருமான சீமான், மன்சூர் அலிகான் ஆகியோர் தீவிர அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
உலக நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மையம்’ என்ற கட்சியை துவங்கி தேர்தலில் களம் கண்டார். தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் உச்சபட்ச நடிகராக இருந்து வருபவர் விஜய்.வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடித்த “தி கோட்” படம் கடந்த மாதம் ஐந்தாம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அப்படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் விஜய்.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ளார். தொடர்ந்து தனது கட்சிக் கொடியையும் அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் வெளியிட்டார். விஜய் கட்சியின் முதல் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டிற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் விஜய்.
அதில் அரசியலில் வேகமாக இருப்பதை விட விவேகமாக தான் முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் என்றால் என்ன என்ற கேள்விக்கு தவெகவின் மாநாடு பதிலளிக்கும் என தெரிவித்துள்ள விஜய். அரசியலில் எதாத்தமாக இருப்பதை விட எச்சரிக்கைய்யுடன் களமாட வேண்டும் என்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கு இயக்கமாக தவெக மாறிவிட்டதாகவும் விஜய் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.
மாநாட்டிற்கான கால்கோள் விழா மட்டுமல்ல இது அரசியல் பணிகளுக்கான கால்கோள் விழா என்றும், நமது ஒற்றுமையே நமது வலிமை என்பதை நாட்டிற்கு உண்ர்த்தும் வகையில் மாநாட்டுப் பணிகளை தொடர வேண்டும் எனவும், வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.
அறிக்கையில் “தோழர்களே” என அறிக்கையில் விஜய் குறிப்பிட்டிருப்பது விஜய் கட்சியின் கொள்கை மீதான அதிக எதிர்பார்ப்பை கொடுக்கும் வார்த்தையாக அமைந்துள்ளது.
-
Cricket1 day ago
டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்
-
india2 days ago
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
-
Cricket1 day ago
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC
-
latest news1 day ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
Cricket1 day ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
Cricket7 hours ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…
-
latest news1 day ago
நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…