Connect with us

govt update news

ஒருமுறை முதலீடு செஞ்சா போதும்… மாதம் 3000 வருமானம் கிடைக்கும்… போஸ்ட் ஆபீஸின் அசத்தல் திட்டம்…!

Published

on

போஸ்ட் ஆபீஸில் ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் 3000 கிடைக்கும் ஒரு சிறந்த திட்டத்தை குறித்து தான் இதில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு நிம்மதியான எதிர்கால வாழ்வுக்கு சரியான திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். பிறகு யாருடைய கையும் எதிர்பார்க்காமல் நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் தற்போது இருந்தே பணத்தை சேமிக்க வேண்டும். அதற்காக அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றது. அதிலும் அஞ்சல் திட்டங்களில் அதிக வட்டிகள் தரக்கூடிய சிறந்த திட்டங்கள் இருக்கின்றன.

அதன்படி அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். அஞ்சல் அலுவலகம் மாதாந்திர வருமான திட்டம் மாதம் வருமானம் தரக்கூடிய ஒரு சிறந்த திட்டம். மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனிநபர் அல்லது கூட்டாக கணக்கு திறக்க முடியும். வெறும் 1000 ரூபாயில் முதலீட்டாளர்கள் கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.

முதலீடு செய்வதற்கு 9 லட்சம் ரூபாய் அதிகபட்ச வரமாக உள்ளது. கூட்டுக் கணக்காக முதலீடு செய்யும் போது அதிகபட்சமாக 15 லட்சம் வரை நாம் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். முதலில் ஐந்து ஆண்டுகள் முதலீடு செய்த பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுக்கு மாதம் தோறும் வருமானம் கிடைக்கும். இதில் ஒரு நிதியாண்டிற்கு 1.5 லட்சம் வரையில் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் 5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 3083 ரூபாய் வருமானமாக பெற முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த வட்டி வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5500 வருமானம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு இந்த வருமானம் கிடைக்கும். கூட்டு கணக்கில் ஒருமுறை 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 9,250 ரூபாய் மாத வட்டி வருமானம் 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து மக்கள் பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *