Connect with us

Finance

இன்னைக்கு இருபது ரூபாயா ஹைக்கு?…தலையில் இடியை இறக்கும் தங்கம் விலை!…

Published

on

Gold

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது என்று தான் சொல்லியாக வேண்டும். இம்மாதம் பத்தாம் தேதியிலிருந்து துவங்கி கடந்த பத்து நாட்களில் ஐந்துக்கும் அதிகப்பட்ட முறை தங்கத்தின் விலை உயர்வுப் பாதையில் சென்றிருக்கிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சனிக்கிழமையன்று விற்கப்ப்ட்ட அதே விலையில் நேற்றும் விற்கப்பட்டது.

இன்று வாரத் துவக்கத்தில் இறங்குமுகத்திற்கு வந்து தங்கத்தின் விலை ஆறுதலை தரும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், இன்றும் உயர்வுப் பாதையிலேயே பயணித்து நகைப் பிரியர்களின் தலைகளில் இடியை இறக்கியுள்ளது. தங்கம் தான் அடிக்கடி உயர்வினை சந்தித்து கவலை கொள்ள வைக்கிறதே என்று பார்த்தால் வெள்ளியின் விலை உயர்வும் அதிர்ச்சியை அதிகரிக்கிறது.

ஏழாயிரத்து இருனூற்றி என்பது ரூபாய் (ரூ.7,280/-) என்ற நிலையில் இருந்த தங்கம், இன்று இருபது ரூபாய் அதிரடியாக உயர்ந்துள்ளது.

Silver

Silver

இன்று சென்னையில் விற்கபட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இருபது ரூபாய் உயர்ந்து ஏழாயிரத்து முன்னூறு ரூபாயாக (ரூ.7,300/-) உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஐம்பத்தி எட்டாயிரத்து இருனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.58240/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நூற்றி அறுபது ரூபாய் (ரூ.160/-) உயர்ந்து, ஐம்பத்தி எட்டாயிரத்து நானூறு ரூபாய்க்கு (ரூ.58,400/-) விற்பனை செய்ய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மெல்ல மெல்ல அறுபது ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதுன் ஆபரணப் பிரியர்களை கவல அடையச் செய்துள்ளது.

கிராம் ஒன்று நூற்றி ஏழு ரூபாய்க்கு (ரூ.107/-) விற்கப்பட்டு வந்த வெள்ளி, இன்று இரண்டு ரூபாய் (ரூ.2/-) உயர்ந்து நூற்றி ஒன்பது ரூபாய்க்கு (ரூ.109/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாயாக இருந்து வந்தது இன்று வெள்ளி கண்டுள்ள விலை உயர்வால் ரூபாய் இரண்டாயிரம் (ரூ.2000/-) அதிகரித்து ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாயாக (ரூ.1,09,000/-) உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைகள் அணிய விரும்புவோரின் மனதை பதபதைக்கச் செய்து வருகிறது.

 

google news