job news
ஆசிரியர் பணிக்கு ஆர்வம் இருக்கா..? உங்களுக்கான பொன்னான வாய்ப்பு…’BPSC’ அசத்தல் அறிவிப்பு.!!
நீங்கள் அரசு ஆசிரியர் பணிக்கான ஆர்வலராக இருந்தால், உங்களுக்கு இங்கே ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது. ஆம், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 1,70,461 பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை அழைத்துள்ளது. BPSC பள்ளி ஆசிரியர் ஆட்சேர்ப்பு இயக்கத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கநிலை, இடைநிலை மற்றும் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 1,70,461 காலி இடங்கள் நிரப்பப்படும்.
மாநிலம் முழுவதும் முதன்மை, இடைநிலை மற்றும் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் உட்பட 1,70,461 ஆசிரியர் பணியிடங்களுக்கு பிபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. BPSC ஆசிரியர் ஆட்சேர்ப்பு 2023 மாவட்ட வாரியான காலியிடங்கள், விண்ணப்ப செயல்முறை, வயது வரம்பு, தகுதி மற்றும் பிற விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்
- முதன்மை ஆசிரியர் (வகுப்பு 1-5)
- இடைநிலை ஆசிரியர் (வகுப்பு 9-10)
- முதுகலை ஆசிரியர் (வகுப்பு 11)
உள்ளிட்ட பதவிக்கு மொத்தமாக 1,70,461 காலியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கான வயது வரம்புகள் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் 18 மற்றும் 21 வயது , ஆண்களுக்கு அதிகபட்சம் 37 வயது மற்றும் பெண்களுக்கு அதிகபட்சம் 40 வயது .
தேவையான தகுதி
- முதன்மை ஆசிரியர் பதவிக்கு தேவையான கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பதவிக்குத் தேவையான கல்வித் தகுதி கல்வியில் இளங்கலைப் பட்டம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- முதுகலை ஆசிரியர் பதவிக்கு தேவையான கல்வித் தகுதி கல்வியில் முதுகலைப் பட்டம் மற்றும் பிஎச்.டி. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம்.
முதன்மை ஆசிரியர் பதவிக்கு (வகுப்பு 1-5) :
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தொடக்கக் கல்வியில் டிப்ளமோவுடன் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 இடைநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் தொடக்கக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது சிறப்பு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் (2002 விதிமுறைகளின்படி) 10+2 இடைநிலைப் படிப்பை முடித்து, தொடக்கக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 இடைநிலையை முடித்து 4 வருட BLEd பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.Ed-Med 3 ஆண்டு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக, நீங்கள் CTET தாள் I அல்லது BTET தாள் I தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் :
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.Ed பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் (2002 விதிமுறைகளின்படி) தொடர்புடைய பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.Ed பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
- BAEd (கல்வியில் இளங்கலை) அல்லது BSc (கல்வியில் இளங்கலை அறிவியல்) இல் 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
- STET (மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு) தாள் I தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை ஆசிரியர் (வகுப்பு 11-12) :
- விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.Ed பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (2002 விதிமுறைகளின்படி) மேலும் B.Ed பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (2002 விதிமுறைகளின்படி) மேலும் B.Ed பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.32000 பிளஸ் அனுமதிக்கப்படும் படிகள் (புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி நிரந்தரமானது) வரை வழங்கப்படும். அதாவது…
- முதன்மை ஆசிரியர் (வகுப்பு 1-5) மாதம் ரூ 25,000
- இடைநிலை ஆசிரியர் (வகுப்பு 9-10) மாதம் ரூ 31,000
- முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வகுப்பு 11-12) மாதம் ரூ 32,000
எப்படி விண்ணப்பிப்பது.?
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://bpsc.bih.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று இந்தப் பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் தாவலில் தேர்வுக் கட்டணம் உட்பட உங்களின் அனைத்து அத்தியாவசிய சான்றுகளையும் வழங்க வேண்டும். நீங்கள் https://bpsc.bih.nic.in/ இந்த இணையதளத்திற்கு சென்றாலே அதற்கான விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள இந்த pdf-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
job news
ஸ்டேட் பேங்க்ல வேலை பார்க்க சான்ஸ்?…வெளியாகியுள்ள அறிவிப்பு…
படித்து முடித்த இளைஞர்களாக இருந்தாலும் சரி, படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களாகவே இருந்தாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவதையே அதிகம் விரும்புபவர்களாகவே இருந்து வருகிறார்கள். இது போன்ற வாய்ப்பு பற்றிய அறிவுப்புகள் எப்போது வரும் என காத்திருக்கும் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது போன்ற வாய்ப்புகள் வரும் போது அதனை எப்படி எதிர் கொள்வது என்பதனை உணர்ந்து அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்களும் அதிகரித்தே வருகின்றனர்.
பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள என்னூறு இடங்களை (800) நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் தேர்வதற்கு குரிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியம் இணைய தள முகவரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியும், வயது வரம்பு குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி கல்வி கற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கான ஊதியமாக ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரத்து நானூற்றி என்பது ரூபாய் (ரூ.48,480/-) முதல் தொன்னூற்றி மூனாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்(ரூ.93,960/-) எனவும் சொல்லப்படுகிறது.
இந்த பணிகள் தேர்வுக்கு sbi.co.in/web/careers என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வழங்க கடைசி தேதி குறித்தும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதியே கடைசி எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
job news
அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Cricket
சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…
இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.
இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.
இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.
automobile
வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.
சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.
மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
job news
மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.
விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
latest news20 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news19 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news22 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
-
latest news21 hours ago
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்…கோலகலமான துவகத்திற்கு தயாராகும் வீரர்கள்…