Finance
பான் – ஆதார் இணைத்துவிட்டீர்களா?.. இதோ மற்றுமொரு வாய்ப்பு..உடனே பயன்படுத்தி கொள்ளுங்க..
வருமானவரித்துறை தற்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தினை மறுபடியும் நீட்டித்துள்ளது. இதன்படி வருகின்ற ஜுன் 30 ஆம் தேதி வரை ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்க கெடு வைத்துள்ளது.
சட்டத்தின் பிரிவு எண் 139AA கீழ் அனைத்து இந்திய குடிமகனும் ஜுலை 1, 2017 ஆம் நாளுக்கு பிறகு பான் கார்டு வைத்திருந்தால் அவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருமான வரித்துறை விதியின் படி, எந்த ஒரு தனி நபரும் தங்களது ஆதார் எண்ணை சட்டபடி இணைக்காவிட்டால் அவர்களின் பான் எண்ணானது முடக்கப்படும். மேலும் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப்படும். அப்படி முடக்கப்பட்டால் எந்த நபரும் தங்களின் வருமான வரி விவர அறிக்கையில் பான் எண்ணை குறிப்பிட முடியாது. மேலும் நாம் வங்கிகளில் எந்த ஒரு பணபரிமாற்றத்தையும் செய்ய இயலாது.
ஆதார் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிவது எப்படி:
ஆதார் எண் பான் கார்டுடன் இணைந்து விட்டதை கண்டறிய கீழே உள்ள முறைப்படி நாம் தெரிந்து கொள்ளலாம்.
- முதலில் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.incometax.gov.in/iec/foportal என்ற முகவரிக்கு செல்ல வேண்டும்.
- பின்னர் அந்த பக்கத்தில் இடதுபுறம் உள்ள “Quick Link” என்ற பட்டனை அழுத்தவும்.
- லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ் என்ற பட்டனை அழுத்தவும்.
- அதனும் 10 இலக்க பான் எண் மற்றும் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.
- தேவையான தகவல்களை அளித்த பின் “View Link Aadhaar Status” என்ற பட்டனை அழுத்தவும்
- ஒருவேளை நமது ஆதார் எண் ஏற்கனவே இணைந்திருந்தால் நாம் நமது ஆதார் எண்ணை திரையில் காணலாம்.
ஆதார் பான் கார்டுடன் இணைந்திருப்பதை எஸ்.எம்.எஸ் மூலமாக எவ்வாறு அறிவது:
- 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு கீழ்காணும் முறைப்படி குறிஞ்செய்தியினை அனுப்பலாம். “UIDPAN<12 Digit Aadhaar number><10 digit PAN number>.
- நமது ஆதார் எண் பான் கார்டுடன் இணைந்திருப்பதை எஸ்.எம்.எஸ் வழியாக உறுதி செய்து கொள்ளலாம்.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது எவ்வாறு?:
- முதலில் http://www.incometaxindiaefilling.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- ”Quick Link” என்ற பட்டன் கீழ் உள்ள “லிங்க் ஆதார்” என்ற பட்டனை சொடுக்கவும்.
- பான் மற்றும் ஆதார் எண்ணை கொடுக்கவும்.
- தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின் “Link Now” என்ற பட்டனை அழுத்தவும்.
- பின்னர் ஆதார் எண் இணைந்ததற்கான பாப் அப் மெசேஜை காணலாம்.
Finance
உயர்வோ ரூபாய் பத்து…தங்கம் காட்டி வரும் கெத்து…
தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அடுத்தடுத்து உயர்வு பாதையிலேயே இருந்து வருகிறது தங்கத்தின் விற்பனை விலை. இந்த விலை உயர்வு நகைப் பிரியர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. விலையில் மாற்றம் காணாமல் இருந்த வெள்ளியும் இன்று உயரத் துவங்கியுள்ளது.
தங்கம் இப்போதெல்லாம் அடிக்கடி விலை உயர்வினை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென குறைந்த விற்பனை விலை ஆபரணப்பிரியர்களை ஆனந்ததில் ஆழ்த்தியது. ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. அடுத்தடுத்து விலை உயர்வை மட்டுமே சந்தித்து வந்து பேரதிர்ச்சியை கொடுத்து வந்தது தங்க நகை வாங்குவதில் விருப்பம் உள்ளவர்களுக்கு.
நேற்று கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து நூற்றி பத்தாகவும்(ரூ.7,110/-), சவரன் ஒன்றின் விலை ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூற்றி என்பதாகவும் (ரூ.56,880/-) இருந்த நிலையில் இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
நேற்றை விட கிராம் ஒன்றிற்கு பத்து ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூற்றி இருபது (ரூ.7,120/-) ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது (ரூ.56,960/-) ஒரு சவரன் ஆபரணத் தங்கம். கடந்த இரண்டு நாட்களாக விலையில் மாற்றம் காட்டாத வெள்ளியின் விலை இன்று உயரத்துவங்கியிருக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று நூற்றி மூன்று ரூபாய்க்கு (ரூ.103/-) விற்பனையாகி வருகிறது சென்னையில் விலை அடிப்படையில்.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி மூவாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,03,000/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்றை விட கிராமிற்கு இரண்டு ரூபாயும் (ரூ.2/-) , கிலோவிற்கு ஆயிரம் ரூபாயும் (ரூ.1000/-) அதிகரித்துள்ளது வெள்ளி.
Finance
கூடியது ரூபாய் பத்து…உயர்வு திசையில் வீசுது தங்கத்தின் காற்று..
தங்கத்தின் மீதான மோகமும், அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் சக்திகளாக இருந்து வருவது சர்வதேச பொருளாதார நிலையும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இறக்கத்தை சந்தித்து வந்த தங்கதத்தின் விற்பனை விலை, நேற்று முதல் தடாலடியாக உயரத்துவங்கி வருகிறது.
நேற்று ஒர நாளில் கிராமுக்கு ஐம்பது ரூபாய் அதிகரித்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்கப்பட்டது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம்.
ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாயாக இருந்தது(ரூ.56,800/-). நேற்றைப் போலவே இன்றும் தங்கத்தின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றை விட இன்று கிராமிற்கு பத்து ரூபாய் உயர்ந்துள்ளது.
கிராம் ஒன்றின் விலை இன்று ஏழாயிரத்து நூற்றி பத்து ரூபாயாக (ரூ.7,110/-) உள்ளது. சவரன் ஒன்றின் விலை இன்று என்பது ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி எட்டாயிரத்து என்னூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,880/-) விற்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டது. தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை உயர்வுப் பாதையிலேயே இருந்து வருவது நகைப் பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வெள்ளி கடந்த இரண்டு நாட்களாகவே அதே விலையில் விற்கப்பட்டு வருகிறது. நேற்று நூற்றி ஓரு ருபாயாக (ரூ.101/-) இருந்த ஒரு கிராம் இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்தி ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) உள்ளது.
Finance
ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…
நேற்று சென்னையில் விற்கப்பட்ட இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையை விட இன்றைய விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்றைய முன்தினம் கிராம் ஒன்றின் விலை ஏழாயிரத்து ஐம்பது ரூபாய்க்கு (ரூ.7,050/-) விற்கப்பட்டது, ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ.56,640/-) விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இருநூற்றி நாற்பது ரூபாய் (ரூ.240/-)குறைந்து, ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாயக்கு (ரூ.56,400/-) விற்கப்பட்டது நேற்று.
கடந்த இரண்டு நாட்களாக இறங்கு முகத்தில் இருந்து வந்த தங்கத்தின் சென்னை விற்பனை விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
விலை குறைவு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது, ஏற்றத்தில் சென்றுள்ள விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். நேற்றை விட கிராம் ஒன்றிற்கு இன்று ஐம்பது ரூபாய் (ரூ.50/-) உயர்ந்து, ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு சவரன் நேற்று ஐம்பத்தி ஆறாயிரத்து நானூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் (ரூ.56,400/-) இன்று நானூறு ரூபாய் உயர்ந்து ஐம்பத்தி ஆறாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.56,800/-) விற்கப்பட்டு வருகிறது. தங்கம் ஒரே நாளில் ஓரவஞ்சனை காட்டி உயர்வை நோக்கி சென்றாலும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை.
நேற்று கிராம் ஒன்று நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்றும் அதே விலையில் தான் இருந்து வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருக்கிறது இன்று. உயர்வினை நோக்கி தங்கம் விலை சென்றுள்ளது நகைப்பிரியர்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது.
Finance
குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…
சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.
கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.
ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.
வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.
கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.
Finance
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.
நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
Cricket7 hours ago
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
-
Cricket6 hours ago
WT20 உலகக் கோப்பை: முதல் ஓவரிலேயே முகத்தில் காயம்.. வந்த வேகத்தில் வெளியேறிய வீராங்கனை
-
latest news22 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
latest news21 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news1 day ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
latest news1 day ago
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…