Finance
எந்தெந்த வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கு எவ்வளவு வட்டி தறாங்கனு தெரிஞ்சிக்கணுமா?..அப்போ இத வாசிங்க..
நிலையான வைப்பு தொகை(Fixed Deposit) என்பது ஒரு நல்ல முதலீட்டு முறையாகும். இதன் மூலம் குறிப்பிட்ட காலத்திற்கு நாம் செலுத்தும் தொகையானது அந்த காலம் முடிந்தபின் வட்டியுடன் சேர்த்து நமக்கு திரும்ப வந்து சேரும். இதனை நாம் அனைத்து அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளிலும் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம். ஒவ்வொரு வங்கியும் தனக்கென சில வட்டிவிகிதத்தை வைத்துள்ளது. அது என்னென்ன என பார்க்கலாம்.
- எச்.டி.எஃப்.சி வங்கியானது தனது வங்கியில் நிலையான வைப்பு தொகைக்கு வட்டியாக 3% முதல் 7.3- வரை சாதாரண மக்களுக்கும் 7.55% வரை மூத்த குடிமக்களுக்கும் வழங்குகிறது.
- ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 3% முதல் 7.10% வரையும் மூத்த குடிமக்களுக்கு 7.6%ம் குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரையும் வட்டியினை வழங்குகிறது.
- ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 வருல் காலத்திற்கு குறைந்தபட்சம் 3%மும் அதிகபட்சமாக 7.71% வரையிலும் வைட்டியினை வழங்குகிறது.
- ஆக்ஸிஸ் வங்கி குறைந்தபட்சம் 3.55 முதல் அதிகபட்சமாக 7.00% வரையிலும்
- பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சமாக 7.55 வரையிலும்
- பஞ்சாப் நேஷனல் வங்கி 3.5% முதல் 7.25% வரையிலும்
- யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி 3% முதல் 6.7% வரையிலும்
- கனரா வங்கி 4% முதல் 7.4% வரையிலும்
- கோடக் மஹிந்திரா வங்கி 2.75% முதல் 6.20% வரையிலும்
- இந்தியன் வங்கியானது 7.10% வரையிலும்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியானது 4% முதல் 6.5% வரையிலும் வட்டியாக வழங்குகின்றன.
நாம் செலுத்தும் தொகையானது 2 கோடிக்கும் குறைவாக இருத்தல் அவசியம். மேலும் நிலையான வைப்பு தொகையானது 7 முதல் 10 ஆண்டுகள் எனும் கணக்கின் அடிப்படையில் வட்டியானது நிர்ணயிக்கப்படிகிறது. எனவே எந்த வங்கிகளிம் நாம் கணக்கினை வைத்துள்ளோமோ அந்த வங்கிகளிலேயே நாம் நிலையான வைப்பு தொகைக்கான கணக்கினை வைத்து கொண்டும் நமது பணத்தை நாம் நல்ல வழியில் சேமிக்கலாம்.
Finance
வட போச்சே..இருந்தாலும் ஆக்ஸிஸ் வங்கி இப்படி பண்ணிருக்க கூடாது..
இந்தியாவின் பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றுதான் ஆக்ஸிஸ் வங்கி. இந்த வங்கியானது இந்தியாவில் பல இடங்களில் தங்களின் கிளைகளை வைத்துள்ளது. ஒவ்வொரு வங்கியும் தனக்கென்று பலவகை கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கு வருவது இயல்பே. அதிலும் ஒவ்வொரு கார்டிற்கும் ஒவ்வொரு சலுகைகளை வழங்குவதும் நடைமுறையில் உள்ளதுதான். இவ்வாறு ஆக்ஸிஸ் வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தங்களது கிரெடிட் கார்டுகளின் மீது பல சலுகைகளை வழங்கியது.
தற்போது இந்த வங்கியானது தங்களது 5 கிரெடிட் கார்டு வகைகளை மதிப்பிழக்க செய்துள்ளது. இந்த செய்தி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆக்ஸிஸ் வங்கியின் கிரெட்டி கார்டில் Magnus வகை கிரெடிட் கார்டை மதிப்பிழக்க வைத்துள்ளதா என்பது இது வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மதிப்பிழப்பு என்றால் என்ன?:
மதிப்பிழப்பு என்பது ஒவ்வோரு வங்கியும் அவர்களின் கிரெடிட் கார்டுகளின் மேல் வழங்கும் சலுகைகளை நீக்குவது அல்லது குறைப்பது. இதுதான் மதிப்பிழப்பாகும்.
எந்தெந்த கார்டுகளின் மேல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?:
இந்த மதிப்பிழப்பு நடவடிக்கையானது வரும் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதம் 14 ஆம் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டுவரப்படலாம். இந்த வங்கி இவர்களின் Axis Bank Privilage, Axis Bank Reserve, Axis Bank Select, Axis Bank Flipkart, Axis Bank My Zone Credit Cards போன்ற 5 வகை கிரெடிட் கார்டிகளின் மேல் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உதாரணமாக வாடிக்கையாளர்கள் ஆக்ஸிஸ் வங்கியின் Axis Bank Flipkart கிரெடிட் கார்டினை உபயோகித்து பொருட்களை வாங்கும் பொழுது அவர்களுக்கு அதன் மீதான சலுகைகளை குறைக்க இயலும் அல்லது சலுகைகளை இல்லாமல் கூட செய்யலாம்.
இந்த தகவலானது ஆக்ஸிஸ் வங்கியில் திருத்தப்பட்ட கிரெடிட் கார்டு மீதான விதிமுறைகள் மற்றும் நிபந்தனகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட செய்தியாகும்.
Finance
உஷாரய்யா உஷாரு..யூபிஐ பயன்படுத்துறீங்களா?.. அதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிகோங்க..
இன்று நாம் பண பரிமாற்றத்திற்கு என பல வகை யூபிஐ செயலிகள் உள்ளன. இவைகளை நாம் பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். நாம் இந்த செயலிகளை பயன்படுத்துவதில் ஏதேனும் கவனக் குறைவாக இருந்தால் இதன் மூலம் நாம் பணத்தினை இழக்கவும் நேரிடும். எனவே இந்த வகையான செயலிகளை உபயோகிக்கும் முன் கீழ்காணும் சில முன்னெச்சரிக்கைகளை செய்வது மிகவும் அவசியமாகும்.
1.UPI PIN-களை பாதுகாப்பாக வைத்தல்:
யூபிஐ PIN என்பது நமது ஒவ்வொரு பறிமாற்றத்திற்கும் நாம் உபயோகிக்க கூடிய 4 இலக்க எண்ணாகும். இதனை மற்றவர்கள் அறியும் வகையில் வைக்காமல் இருத்தல் முக்கியமானதாகும். ஏனெனில் உங்களின் அந்த எண்ணை அறித்தவர்கள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க முயலலாம்.
2.அதிகாரப்பூர்வை UPI செயலிகளை பயன்படுத்துதல்:
ஒவ்வொரு வங்கியினாலும் அரசினாலும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
3.பணம் செலுத்துபவர் பற்றிய தகவல்களை உறுதி செய்தல்:
நாம் ஒவ்வொரு பண பரிமாற்றத்தின் போதும் நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.பணத்தினை சரிபார்த்தல்:
நாம் அனுப்பும் பணத்தினை அனுப்புவதற்கு முன் சரியான தொகையை தட்டச்சு செய்துள்ளோமா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு 0 மிகுதியாக வந்தால் கூட நாம் நமது பணத்தினை இழக்க நேரிடலாம்.
5.பணபரிமாற்றத்திற்கான ஆதாரத்தினை வைத்து கொள்ளுதல்:
ஒவ்வொரு பணபறிமாற்றத்தின் போதும் அதற்கான ஆவணத்தை வைத்து கொள்ள வேண்டும்.
6.வங்கி ஸ்டேட்மெண்டை கண்காணிப்பது:
அவ்வப்போது நமது வங்கி கணக்கினையும் அதன் மாத ஸ்டேட்மெண்டையும் கண்காணித்து கொள்ள வேண்டும்.
மேலும் நமது யூபிஐ செயலிக்கென்று உள்ள லாக் வசதியினை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் நமது கணக்கில் உள்ள பணத்தினை பாதுகாத்து கொள்ளலாம்.
Finance
அடி தூள்..இனி கவலையே இல்ல..எங்கு வேண்டுமானாலும் பே பண்ணிகலாம்..மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிட்ட தனியார் வங்கி..
உலகளவில் தற்போது வங்கி சேவை என்பது மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் நெட்பாங்கிங், யூபிஐ வசதிகள், மொபைல் பாங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் என நாம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய்அ அவசியமே இல்லை என்ற நிலை உண்டாகியுள்ளது. மிகவும் எளிமையான முறையில் UPI என்ற வசதியின் மூலம் நாம் எங்கு சென்றாலும் பணத்தினை செலுத்தி கொள்ளலாம்.
அனைத்து வங்கிகளும் தங்களுக்கென்று ஒரு யூபிஐ ஐடியை வைத்திருக்கும். அதனை போல் பிரபல தனியார் வங்கியான YES Bank தற்போது தனது வங்கியில் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் BHIM என்ற Payment செயலியில் தங்களது ருபே கிரெடிட் கார்டினை பதிவு செய்து வைத்து கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். இதனால் நாம் இந்த செயலியை பயன்படுத்தி எந்த வணிக நிறுவனங்களிலும் QR கோடினை ஸ்கேன் செய்து பணத்தினை செலுத்தி கொள்ளலாம்.
ஆனால் இதில் P2P வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. BHIM செயலியை தவிர பல வகை செயலிகளான Google Pay, Paytm, Phonepay, PayZapp, Freecharge போன்ற யூபிஐ செயலிகளிலும் இந்த வசதியினை நாம் உபயோகப்படுத்தலாம். ஆனால் தற்சமயம் YES வங்கியானது BHIM செயலியில் தங்கள் கிரெடிட் கார்டினை பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ளும்படி வசதியினை கொண்டு வந்துள்ளது.
BHIM செயலியில் இதனை எவ்வாறு பயன்படுத்துவது?:
- முதலில் நாம் BHIM செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- இப்போது அதனுள் ‘Link Bank Account‘ என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
- + என்ற குறியீட்டினை கிளிக் செய்த பின் அதில் Add Account-ல் Bank Account மற்றும் Credit card என்ற இரு Option வரும்.
- பின் கிரெடிட் கார்டு பட்டனை அழுத்திய பின் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை கொடுக்க வேண்டும்.
- நமது கிரெடிட் கார்டின் கடைசி 6 இலக்க எண் மற்றும் கிரெடிட் கார்டின் வேலிடிட்டியை கொடுக்கவும்.
- பின் நமது மொபைலுக்கு வரும் OTP-யினை கொடுக்கவும்.
- பின் நமக்கென்று யூபிஐ பின் எண்ணை உருவாக்கி கொள்ளவும்.
இவ்வாறு நாம் நமது கிரெடிட் கார்டினை பதுவி செய்து கொள்ளலாம். இதனை நாம் தேவைப்படும் இடங்களில் ஸ்கேன் செய்து பணத்தினை மாற்றி கொள்ளலாம்.
Finance
உஷார் மக்களே!..போலி செயலியின் மூலம் 8 லட்சத்தை இழந்த மனிதர்..தகவல்கள் உள்ளே..
இண்டெர்நெட் என்பது மனிதனின் அன்றாட வாழ்வில் மிக இன்றியமையாததாக அமைந்துள்ளது. என்னதான் இண்டெர்நெட்டின் வளர்ச்சி மிக அதிக அளவில் இருந்தாலும் அதற்கு ஏற்றாற்போல் சில தேவையில்லாத விஷயங்களும் வளர்ந்து கொண்டுதான் உள்ளது. சமீப ஆண்டுகளாய் இண்டெர்நெட் மூலமாக மனிதர்களை ஏமாற்றும் கும்பல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் முக்கியமாக நமது வங்கி கணக்கின் மூலம் பலர் ஏமாறுகிறார்கள். இவர்களுக்காகவே ரிசர்வ் வங்கியானது அவ்வப்போது நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல செய்திகளை அறிவித்து கொண்டுதான் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரபல வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் YONO என்ற செயலியை போன்று போலியான செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.8 லட்சத்தை சில கும்பல் ஏமாற்றியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்காநகர் என்ற ஊரை சேர்ந்தவர் பவன் குமார் சோனி. 55 வயதான இவரின் மகன் டெல்லியில் உள்ள துவராக என்ற ஊரில் வசித்து வருகிறார். தனது தந்தை வங்கி கணக்கிற்கு தனது மகனின் மொபைல் எண்ணையே பதிவு செய்துள்ளார். ஏனென்றால் தனக்கு வரும் தகவல்கள் அனைத்தையும் தனது மகனே கையாள வேண்டும் எனும் எண்ணத்தில் அவ்வாறு செய்துள்ளார். ஒரு நாள் KYC-ஐ அப்டேட் செய்யுமாறு ஒரு தகவலும் அதில் ஒரு லிங்கும் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்யும் பொழுது அது எஸ்.பி.ஐ வங்கியின் YONO செயலியை பதிவிறக்கம் செய்துள்ளது.
உபயோகிப்பாளர் ஏற்கனவே அந்த செயலியை அவரது மொபைலில் வைத்துள்ளார். பின் இந்த போலியான செயலியிலும் தனது வங்கி பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார். சில நிமிடங்களுக்குள் அவரது கணக்கில் இருந்து பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் இவர் கணக்கில் இருந்து 8 லட்சம் ரூபாய் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது. பின் இதனை பற்றி மாவட்ட சைபர் செல்லில் புகார் அளித்து பின் அவர்களின் உதவியோடு ரூ.6.24 லட்சம் பணம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் மீதமுள்ள இரண்டு லட்சம் ரூபாயை திரும்ப பெற முடியவில்லை.
எனவே இவ்வாறான பொய்யான தகவல்கள் மூலம் நாம் நமது பணத்தினை இழக்காமல் இருக்க ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். மேலும் நமது OTP எண்ணை எந்த காரணம் கொண்டும் யாருக்கும் தெரியப்படுத்த கூடாது
Finance
fast tag wallet-ல் இருந்து பணத்தினை திரும்ப பெற வேண்டுமா?.. அப்போ இத ஃபாலோவ் பண்ணுங்க..
கார் உபயோகிப்பவர்கள் அனைவருமே தற்போது ஃபாஸ்ட் டேக் ஐடியை வைத்துள்ளனர். இந்த ஃபாஸ்ட் டேக் RFIDயானது நமது காரின் முன்புறம் ஒரு ஸ்டிக்கர் வடிவில் ஒட்டப்பட்டிருக்கும். டோல் பூத்களில் பணத்தினை கட்டுவதற்கு இது உதவுகிறது. இதற்கென்று தனி கணக்கு இருக்கும். இதனை அவ்வப்போது தேவைப்படும் நேரத்தில் நாம் ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம். இந்த கணக்கினை எந்த வங்கியின் மூலமாக வேண்டுமானலும் நாம் ஆரம்பித்து கொள்ளலாம். இந்த கணக்கானது ஃபாஸ்ட் டேக் சர்வீஸ் ப்ரொவைடர் (FASTag Service Provider) மற்றும் பல செயலிகள் மூலமாக நாம் பராமரித்து கொள்ளலாம். இவ்வாறான கணக்கினை ஒரு வேளை நாம் நீக்க நினைத்தால் அதனை அந்தந்த வங்கிகளில் உள்ள சர்வீஸ் ப்ரொவைடரின் மூலம் நாம் நீக்கி கொள்ளலாம். எந்தெந்த வங்கிக்கு எவ்வாறான முறையில் நாம் இந்த கணக்கினை நீக்கலாம் என பார்ப்போம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி:
இந்த வங்கியின் வாடிக்கையாளர் மையத்தினை அனுக வேண்டும் அல்லது வங்கியின் கிளைக்கு சென்று நீக்கி கொள்ளலாம்.
வாடிக்கையாளர் எண்: 1800 2100 104
எச்.டி.எஃப்.சி வங்கி:
- Fast tag portal-> user ID மற்றும் password
- service Request-> Generate Service Request
- select closure request to RFID Tag or Wallet
வாடிக்கையாளர் எண்: 1800 120 1248
ஆக்ஸிஸ் வங்கி:
வாடிக்கையாளர் எண்: 1800 419 8585 அல்லது [email protected] என்ற முகவரிக்கும் சென்று நாம் பணத்தினை திரும்ப பெற்று கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ வங்கி:
- Fast tag portal-> user ID மற்றும் password
- service Request-> Generate Service Request
- select closure request to RFID Tag or Wallet
வாடிக்கையாளர் எண்: 1800 120 4210
அமேசான்:
வாடிக்கையாளர் எண்: 1800 266 1515
செயலி வழியாக பெற: Amazon pay> Help & FAQs> Contact us> Email or Phone
ஏர்டெல்:
வாடிக்கையாளர் எண்: 400 981 6101
தேசிய நெடுஞ்சாலை ஆணையம்:
http://www.nhai.gov.in என்ற இணையதளத்திற்கும் சென்று நமது கணக்கினை நீக்கலாம்.
பேடிஎம் செயலி:
- இதன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபை எண்ணின் மூலமாக லாகின் செய்யவும்
- search bar> Manage FASTag> கிளிக் செய்யவும்
- எந்த கணக்கினை மூட வேண்டுமோ தன் மீது கிளிக் செய்யவும்.
- பின் கணக்கினை நிறுத்துவதை உறுதி செய்தபின் நமது கணக்கில் உள்ள தொகையானது நமது வங்கிக்கு மாறி கொள்ளும்.
-
Cricket2 days ago
கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
-
Cricket15 hours ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..
-
tech news1 day ago
இனி பேட்டரி மாற்ற சிரமம் வேண்டாம்.. ஐபோனில் அறிமுகமாகும் புது வசதி
-
tech news1 day ago
போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு
-
latest news12 hours ago
முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது மாநில கல்வி கொள்கை… இதற்கெல்லாம் இனி தடா தான்!…
-
Cricket1 day ago
கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – ஓ.டி.டி. வியூஸ் இத்தனை கோடிகளா?