Connect with us

latest news

சமரசம் வேண்டாம்.. ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்கள்..!

Published

on

best mobile

ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா? தலைசிறந்த அம்சங்களுடன், அசத்தலான அம்சங்கள் மற்றும் சிறப்பான ஸ்டைலிங் கொண்ட மிட் ரேன்ஜ் மாடல்கள் பட்டியலை தொகுத்து இருக்கிறோம். இதில் கூகுள் பிக்சல் 6a, மோட்டோரோலா எட்ஜ் 40, நத்திங் போன் என ஒவ்வொருத்தருக்கு ஏற்ற வகையில் பல்வேறு மாடல்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன.

அதிக சிறப்பான கேமரா, அசத்தலான டிஸ்ப்ளே அனுபவம், சீரான கேமிங் என எல்லாவற்றுக்கும் ஏற்ற அம்சங்களுடன் ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களை கொண்டிருப்பதோடு, அழகிய தோற்றம் கொண்டுள்ளன.

இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களில் மோட்டோரோலா எட்ஜ் 40, ஒப்போ ரெனோ 8டி மற்றும் நத்திங் உள்ளிட்டவை மிக அழகிய மற்றும் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ரூ. 30 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் பிக்சல் 6a விலை | ரூ. 28 ஆயிரத்து 999 :

google pixal 6a

google pixal 6a

சமீபத்திய விலை குறைப்பு காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 6a விலை குறைந்துள்ளது. அசத்தலான டிசைன், மிக குறைந்த எடை உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இதில் கூகுள் டென்சார் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. எவ்வித கலப்பும் இல்லாத ஆண்ட்ராய்டு அனுபவம் கூகுள் ஸ்மார்ட்போனின் தனித்துவ அம்சம் ஆகும். இத்துடன் தலைசிறந்த கேமரா, மேஜிக் இரேசர் போன்று சூப்பரான கேமரா அம்சங்கள் இதனை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

மோட்டோரோலா எட்ஜ் 40 | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :

170 கிராம் என்ற மிக குறைந்த எடை இந்த ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்க சிறந்த சாதனம் என்ற உணர்வை கொடுக்கிறது. இத்துடன் 6.55 இன்ச் அளவில் pOLED HDR10+ டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி அட்மோஸ் டியூனிங் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

moto edge 40

moto edge 40

முற்றிலும் புதிய மீடியாடெக் டிமென்சிட்டி 8020 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று. புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, OIS, 2.0μm அல்ட்ரா பிக்சல் வழங்கப்பட்டு இருக்கிறது. இது தலைசிறந்த புகைப்படங்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

நத்திங் போன் (1) | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :

nothing phone

nothing phone

வழக்கமான ஸ்மார்ட்போன் டிசைனிங்கில் இருந்து தனிப்பட்டு நிற்கும் நத்திங் போன் (1) டிரான்ஸ்பேரன்ட் டிசைன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 பிளஸ் பிராசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 50MP டூயல் பிரைமரி கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 2400×1800 பிக்சல் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் நார்டு 2T | விலை ரூ. 28 ஆயிரத்து 999 :

one plus nord 2t

one plus nord 2t

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு 2T மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1300 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மோனோ லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 80 வாட் சூப்பர்வூக் சார்ஜர் வழங்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 8T | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :

oppo reno 8t

oppo reno 8t

ஒப்போ நிறுவனத்தின் ரெனோ 8T ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு நிறத்தில் கிடைக்கிறது. இது வெவ்வேறு கோணங்களில் ஸ்மார்ட்போனை வேறு நிறங்களில் காண்பிக்கிறது. 170 கிராம் எடை கொண்டிருக்கும் ரெனோ 8T ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மிக மெல்லிய டிசைன் இந்த ஸ்மார்ட்போன் கைகளில் வைத்திருக்க சிறப்பான அனுபவம் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி M53 5ஜி | விலை ரூ. 27 ஆயிரத்து 999 :

samsung m53

samsung m53

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக மாடல் கேலக்ஸி M53 5ஜி 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.7 இன்ச் சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 108MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி | விலை ரூ. 29 ஆயிரத்து 999 :

redmi note 12 pro+

redmi note 12 pro+

இந்திய சந்தையில் 200MP பிரைமரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை இந்த மாடல் பெற்றது. இத்துடன் 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4980 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் ஹைப்பர் சார்ஜ் அடாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 19 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!

Published

on

டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.  சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.

கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

Published

on

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.

அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்

google news
Continue Reading

india

சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!

Published

on

அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

google news
Continue Reading

Trending