Connect with us

latest news

ஒன்பிளஸ் முதல் சாம்சங் வரை.. ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்!

Published

on

best phone under 40000

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அடிக்கடி புது ஸ்மார்ட்போன்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் சீரான இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருவதை அடுத்து வாடிக்கையாளர்கள் எந்த மாடலை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அந்த வகையில், சிறந்த மொபைல்கள் பட்டியலை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சந்தையில் ரூ. 45 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

ஒன்பிளஸ் 11R | விலை ரூ. 44 ஆயிரத்து 999 :

one plus 11r

one plus 11r

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய மிட்-ரேன்ஜ் மாடல் தான் ஒன்பிளஸ் 11R. இதில் 6.74 இன்ச் 1240×2772 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP+2MP லென்ஸ், எல்.இ.டி. ஃபிலாஷ், 16MP செல்ஃபி கேமரா உள்ளது. 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 11R, 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

ஐகூ 9 ப்ரோ 5ஜி | ரூ. 44 ஆயிரத்து 999 :

iqoo 9 pro

iqoo 9 pro

ஐகூ நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் தர ஐகூ 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.78 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 4700 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 50MP+ 16MP லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

சியோமி 12 ப்ரோ 5ஜி | ரூ. 42 ஆயிரத்து 390 :

xiaomi 12 pro

xiaomi 12 pro

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 6.73 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த MIUI ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 50MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் 6 ப்ரோ | விலை ரூ. 41 ஆயிரத்து 640 :

google pixel 6 pro

google pixel 6 pro

கூகுள் நிறுவனம் 2021 அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த டாப் என்ட் ஃபிளாக்‌ஷிப் மாடல் தான் பிக்சல் 6 ப்ரோ. தற்போது ரூ. 41 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் பிக்சல் 6 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் P-OLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 5003 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி S20 FE 5ஜி | விலை ரூ. 29 ஆயிரத்து 990 :

samsung galaxy s20 fe

samsung galaxy s20 fe

குவால்காம் நிறுவனத்தின் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S20 FE 5ஜி 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 4500 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆப்டிக்கல் கைரேகை சென்சார், டூயல் சிம் 5ஜி வசதி, 12MP வைடு ஆங்கில் பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!

Published

on

டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.  சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.

கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

Published

on

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.

அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்

google news
Continue Reading

india

சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!

Published

on

அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

google news
Continue Reading

Trending