latest news
விரைவில் வெளியாகும் நத்திங் போன் (2) பற்றி இதெல்லாம் தெரியுமா?
![Nothing-Phone 2 - Cinereporters Info Nothing-Phone 2](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Nothing-Phone-1.jpg)
ஒன்பிளஸ் நிறுவனர் கார்ல் பெய் உருவாக்கிய நத்திங் நிறுவனம் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் என மெல்ல தொழில்நுட்ப சந்தையில் கால்தடம் பதிக்க துவங்கி இருக்கிறது. நத்திங் அறிமுகம் செய்த முதல் தலைமுறை இயர்பட்ஸ் மற்றும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில், நத்திங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. அதன்படி நத்திங் போன் 2 மாடல் ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் பற்றி தகவல்களை அவ்வப்போது நிறுவனம் சார்பில் கார்ல் பெய் தெரிவித்து வருகிறார். இதில் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் பிராசஸரில் துவங்கி, அதன் ஒ.எஸ். அம்சங்கள் வரையிலான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
![Nothing-Phone 2 - Cinereporters Info Nothing-Phone 2](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Nothing-Phone-2.jpg)
Nothing-Phone 2
இதுதவிர நத்திங் போன் (2) பற்றிய தகவல்கள் இணையத்திலும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) அதன் முந்தைய வெர்ஷனை விட ஹார்டுவேர் ரீதியிலான அப்டேட் கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் வெளிப்புறம் கவனிக்க கடினமாக்க செய்யும் அப்டேட்கள் செய்யப்படுகின்றன.
இத்துடன் நத்திங் போன் (2) மென்பொருளும் மாற்றங்களை எதிர்கொள்ள இருக்கிறது. புதிய நத்திங் போன் (2) அறிமுகமாக மேலும் சில காலம் உள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் மூன்று மிகமுக்கிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹார்டுவேர் :
நத்திங் போன் (2) மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்படும் என நத்திங் நிறுவனர் கார்ல் பெய் ஏற்கனவே தெரிவித்து விட்டார். இது முந்தைய நத்திங் போன் (1) மாடலில் உள்ள ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸரை விட பெருமளவு மேம்பட்ட பிராசஸர் ஆகும். நத்திங் போன் (1) மாடல் மல்டி டாஸ்கிங் மற்றும் மேலும் சில பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சீராக இயங்கியது.
இதுதவிர நத்திங் போன் (2) மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நத்திங் போன் (2) மாடல் பல்வேறு பயன்பாடுகளிலும் சக்திவாய்ந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
![Nothing-Phone- 2 - Cinereporters Info Nothing-Phone 2](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/06/Nothing-Phone-2-1.jpg)
Nothing-Phone 2
மென்பொருள் :
ஹார்டுவேரை தொடர்ந்து நத்திங் போன் (2) மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதில் உள்ள சாஃப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. புதிய நத்திங் போன் (2) மாடலில் நத்திங் ஒ.எஸ். 2.0 வழங்கப்படும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஒ.எஸ். ஸ்மார்ட்போனில் ஏராளமான புதிய அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
“2023 மென்பொருளுக்கான ஆண்டு. நத்திங் நிறுவனத்தின் உண்மையான தோற்றம் மற்றும் தனித்துவம் மிக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வெளிப்படுத்தச் செய்யும் வகையில் நத்திங் ஒ.எஸ். 2.0 இருக்கும்,” என்று நத்திங் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. வழக்கத்தை போன்றே நத்திங் போன் (2) மாடலுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களும் வழங்கப்பட இருக்கிறது. நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்க முயற்சித்து வருகிறது.
டிசைன் :
நத்திங் போன் (1) மாடல் அதன் டிசைன் அடிப்படையில் உலக சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதே நிலையை புதிய நத்திங் போன் (2) மாடலும் பெறும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) டிசைன் பற்றி அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், டிசைன் அடிப்படையில் புதிய போன் (2) மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் நத்திங் போன் (1) போன்றே காட்சியளிக்கும் என்று கூறப்படுகிறது.
டிசைன் தவிர நத்திங் போன் (2) மாடலின் க்லிம்ஃப் இன்டர்ஃபேசில் வித்தியாசமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நத்திங் போன் (2) மாடலில் எந்த அளவுக்கு மாற்றங்கள் வழங்கப்படும் என்ற யோசனை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
india
பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!
![sing - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/sing.jpg)
டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.
View this post on Instagram
அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.
கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.
latest news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!
![amstrang - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/amstrang.jpg)
தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.
அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்
india
சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!
![ananth - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/ananth.jpg)
அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.
கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.
மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.
latest news
அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!
![7 disticts - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/7-disticts.jpg)
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
india
2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!
![nirmala - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/nirmala.jpg)
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.
ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
latest news23 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news21 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
tech news5 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
latest news22 hours ago
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?
-
Cricket2 days ago
ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி