job news
NDMC வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்…உடனே விண்ணப்பிங்க.!!
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) நிர்வாகப் பொறியாளர் (எலக்ட்ரிக்) பதவிக்கு டெபுடேஷன் அடிப்படையில் தகுதியான இந்திய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைக்கிறது. NDMC ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 01 வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள், அது நீட்டிக்கப்படலாம். 17 காலியிடங்கள் உள்ளன. மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான தகுதி மற்றும் அனுபவம்
- விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனம் அல்லது அதற்கு இணையான மின் பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 11kv, 33kv மற்றும் 66kv டிரான்ஸ்மிஷன் ஓவர்ஹெட் மற்றும் நிலத்தடி விநியோக அமைப்புகளுடன் கூடிய பெரிய மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- பதவி உயர்வுக்கான நேரடி வரியில் உள்ள ஊட்டப்பிரிவு பிரிவில் உள்ள துறை அலுவலர்கள் டெப்டடேஷனில் பணியமர்த்துவதற்கு பரிசீலிக்க தகுதியற்றவர்கள். இதேபோல், பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான பரிசீலனைக்கு பிரதிநிதிகள் தகுதி பெற மாட்டார்கள்.
தகுதி அளவுகோல்கள்
- விண்ணப்பதாரர்கள் மத்திய/மாநில அரசு/யூனியன் பிரதேசங்கள்/பொது அலுவலர் நிறுவனம்/தன்னாட்சி அல்லது சட்டப்பூர்வ அமைப்புகளின் கீழ் அதிகாரிகளாக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டும் அல்லது 7வது CPC இன் படி நிலை 10 இல் வழக்கமான அடிப்படையில் அல்லது பெற்றோர் கேடர்/துறையில் அதற்கு சமமானதாக நியமனம் செய்யப்பட்ட பிறகு வழங்கப்பட்ட தரத்தில் 10 வருட சேவையுடன் இருக்க வேண்டும்.
சம்பளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 7வது CPC பே மேட்ரிக்ஸின் படி 12 ஆம் ஆண்டு சம்பள அளவுகோலில் மாதச் சம்பளத்தைப் பெறுவார்கள்.
வயது வரம்பு
மேலே குறிப்பிடப்பட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பதவிக்காலம்
NDMC ஆட்சேர்ப்பு 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 01 வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள், அது நீட்டிக்கப்படலாம்.
எப்படி விண்ணப்பிப்பது..?
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் கடைசி தேதி அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பதாரர்கள் உறையின் மீது ‘எக்ஸிகியூட்டிவ் இன்ஜினியர் (எலக்ட்ரிக்) பதவிக்கான விண்ணப்பம்’ என்று எழுத வேண்டும்.
முகவரி-Room No. 1617, Office of Director (Personnel), Palika Kendra, SansadMarg, New Delhi – 110001.
விண்ணப்பம் 23.06.2023 அல்லது அதற்கு முன் சென்றடைய வேண்டும். ஒரு முழுமையற்ற விண்ணப்பம் அல்லது கடைசி தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பம் சுருக்கமாக நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்த PDF-ஐ க்ளிக் செய்யுங்கள்.
job news
அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Cricket
சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…
இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.
இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.
இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.
automobile
வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.
சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.
மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
job news
மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.
விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.
job news
NIEPMD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு…மாதம் ரூ.36,000 சம்பளம்…உடனே விண்ணப்பிங்க.!!
சென்னை : பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனமான National Institute for Empowerment of Persons with Multiple Disabilities ( NIEPMD) தற்போது வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த நிறுவனத்தில் (Junior Lecturer ) இளநிலை விரிவுரையாளர் பணிக்கு வேலையில் சேர ஆள் வேண்டும் என அறிவித்துள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த Junior Lecturer பணிக்கு மொத்தமாக ஒரே ஒரு காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதால் இதில் வேலைக்கு சேர ஆர்வமும் தகுதியும் உங்களுக்கு இருந்தால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கல்வி தகுதி
இந்த பணியில் வேலைக்கு சேர நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/B.Tech, M.Sc, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பணியில் வேலைக்கு சேர எத்தனை வயது தான் இருக்க வேண்டும் என வயதுவரம்பு குறிப்பிடப்படவில்லை என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு சென்று அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெரிந்து கொண்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் தொடர்பு கொண்டு நீங்கள் வயது வரம்பு குறித்த தகவலை தெரிந்து கொள்ளுமாறு கூறப்படுகிறது.
சம்பளம்
இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தி முடித்த உடனே அதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் சம்பளமாக ரூபாய் 36,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியில் வேலை செய்கிற விண்ணப்பித்துள்ளீர்கள் என்றால் அவர்கள் நேரில் அழைக்கப்பட்டு நேர்காணல் அதாவது நேரடியாகவே தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்யும் முறை
இந்த பணியில் சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தால் நீங்கள் அதிகாரப்பூர்வமாக இணையதளமான இந்த இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும் அங்கு சென்று இந்த பணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் முழுவதுமாக படித்துவிட்டு பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்து முடித்தவுடன் அந்த விண்ணப்ப சான்றிதழ் ஒரு பிரிண்ட் மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு- pdf
முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியான தேதி ஜூலை 10
கடைசி தேதி ஜூலை 19 – ஆம் தேதி
-
latest news2 days ago
நண்பர்களிடையே தகராறு…குடிசைக்கு தீ வைத்த கொடூரம்…
-
Finance2 days ago
சரிவை சந்தித்த தங்கம் விலை…வீழ்ச்சியடைந்த வெள்ளியின் விலையும்…
-
Cricket2 days ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. முதல் இந்தியர் ஆகலாம்
-
latest news2 days ago
சிறுத்தை மாதிரி இருந்தவர்…சிறுத்துப் போய்விட்டார்…திருமாவளவன் மீதான தமிழிசையின் ரைமிங் விமர்சினம்……
-
latest news2 days ago
என் சர்வீஸ்ல இப்படி நடந்ததில்ல…கொஞ்சமா குடிச்சேன், அவ்ளோ தான்…அதிர வைத்த பஸ் டிரைவர்…
-
latest news2 days ago
யுபிஐ பேமெண்ட் உச்சவரம்பு அதிகரிப்பு.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?
-
latest news2 days ago
பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை…முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்தி…
-
Cricket2 days ago
அந்த ஒரு சாதனை மட்டும் போதுமாம்.. அஸ்வினின் ஆசை நிறைவேறுமா?