Connect with us

latest news

ஐஒஎஸ் 17 உடன் வரும் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் – இதெல்லாம் தெரியுமா?

Published

on

IOS-17-featured-img

ஆப்பிள் நிறுவனம் ஐஒஎஸ் 17 வெர்ஷன் மூலம் ஐபோன்களுக்கு புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கிறது. இதில் பெரும்பாலான அம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்தமான பிரவுசர் சஃபாரி-யில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் வழங்கப்பட்டு உள்ளன. ஐபோன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் முற்றிலும் புதிய ஐஒஎஸ் 17 தற்போது அதன் பீட்டா வெர்ஷனில் உள்ளது.

முதற்கட்டமாக ஐஒஎஸ் 17 வெர்ஷன் பீட்டா வடிவில் டெவலப்பர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவருக்குமான அப்டேட் இந்த ஆண்டு இறுதிக்குள், அதாவது செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத வாக்கில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாத வாக்கில் புதிய ஒஎஸ் ஸ்டேபில் வெர்ஷனை வெளியிடுவதை ஆப்பிள் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

அந்த வகையில், புதிய ஐஒஎஸ் 17-இல் ஆப்பிள் வழங்க இருக்கும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் எவை என்று தொடர்ந்து பார்ப்போம்.

கம்யூனிகேஷன் சேஃப்டி :

ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலான செயலிகளில் கம்யூனிகேஷன் சேஃப்டி (communication safety) வசதியை நீட்டிக்க இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் சட்ட விரோத புகைப்படம் அல்லது வீடியோக்களை ஏர்டிராப் அல்லது ஐமெசேஜ் மூலம் பெறாமல் இருக்க முடியும். நிர்வான புகைப்படம் அல்லது வீடியோக்களில் தானாக உள்ளாடை அணிவிக்கவும், உடலின் பிறப்பு உறுப்புகள் சென்சார் செய்யப்பட்டு விடும் என்று ஆப்பிள் அறிவித்து இருக்கிறது.

iOS-17-Communication-Safety

iOS-17-Communication-Safety

ஐஒஎஸ் 17, ஐபேட் ஒஎஸ் 17 மற்றும் மேக்ஒஎஸ் சொனோமாவில் புதிய கம்யூனிகேஷன் சேஃப்டி அம்சம் தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய, செட்டிங்ஸ் — ஸ்கிரீன் டைம் — கம்யூனிகேஷன் சேஃப்டி ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

ஆட்டோ டெலீட் வெரிஃபிகேஷன் கோட் :

ஒன்-டைம் பாஸ்வேர்டுகளை (ஒ.டி.பி.) தவறாக பயன்படுத்துவது பொதுவாகவே கடினமான காரியம் ஆகும். எனினும், முழுமையான பாதுகாப்பு வழங்க அவற்றை டெலீட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். எனினும், ஒ.டி.பி.-க்களை டெலிட் செய்வது சிக்கலான மற்றும் எரிச்சலான காரியம் ஆகும்.

iOS-auto-delete-otp

iOS-auto-delete-otp

இதற்கு முடிவு கட்டும் வகையில், ஆப்பிள் நிறுவனம் வெரிஃபிகேஷன் கோட்களை தானாக அழிந்து போக செய்யும் வசதியை வழங்குகிறது. தற்போதைய ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருப்பது அவசியம் ஆகும். இந்த அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் — பாஸ்வேர்டு — பாஸ்வேர்டு ஆப்ஷன் — கிளீன் அப் ஆட்டோமேடிக்கலி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்.

போட்டோ பிரைவசி பெர்மிஷன் :

ஐபோன் பயனர்கள் புகைப்படம் அல்லது வீடியோக்களை செயலிகள் முழுமையாகவோ அல்லது ஒருபகுதியாகவோ இயக்குவதற்கு அனுமதி வழங்க முடியும். ஐஒஎஸ் 17 மூலம், பயனர்கள் இதே அம்சத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். கூடுதலாக எந்தெந்த செயலிகளுக்கு முழுமையான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் ரிமைன்டர் வழங்க செய்யலாம்.

iOS-Photos-privacy-permissions

iOS-Photos-privacy-permissions

இந்த அம்சத்தை செயல்படுத்தவும், நீக்குவதற்கும் எந்த வழிமுறைகளும் வழங்கப்படவில்லை. இந்த அம்சம் ஐஒஎஸ் 17-இல் தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

சஃபாரி பிரைவேட் பிரவுசிங் :

ஆப்பிள் சஃபாரி பிரவுசர் ‘பிரைவேட்’ பிரவுசிங் வசதியை வழங்குகிறது. இது கூகுள் க்ரோம் பிரவுசரில் உள்ள இன்காக்னிட்டோ மோட் போன்ற அம்சம் ஆகும். புதிய ஐஒஎஸ் 17-இல் பிரைவேட் பிரவுசிங்கில் உள்ள டேப்கள் தானாக லாக் செய்யப்பட்டு விடும்.

iOS-Safari-Private-browsing

iOS-Safari-Private-browsing

இதன் மூலம் மற்றவர்கள் பயனர் ஐபோன் பயன்படுத்தும் போது, பயனர்களுக்கு ஏற்படும் சங்கடத்தை போக்க முடியும். இந்த அம்சம் மேக் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சத்தை பயனர்கள் செட்டிங்ஸ் — சஃபாரி — பிரைவேட் பிரவுசிங்கை அன்லாக் செய்ய ஃபேஸ் ஐடி-ஐ செயல்படுத்தக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

சஃபாரி அட்வான்ஸ்டு டிராக்கிங் :

சஃபாரி பிரவுசரில் வழங்கப்படும் மற்றொரு பாதுகாப்பு அம்சம் அட்வான்ஸ்டு டிராக்கிங். இதை கொண்டு பயனர்கள் யு.ஆர்.எல்.-களில் உள்ள டிராக்கர்களை தவிர்க்க செய்கிறது. இந்த டிராக்கர்கள் பயனர் லொகேஷன் அல்லது சாதனத்தின் விவரங்களை அம்பலப்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.

 

இந்த அம்சத்தை செயல்படுத்த செட்டிங்ஸ் — அட்வான்ஸ்டு — அட்வான்ஸ்டு டிராக்கிங் அன்ட் ஃபிங்கர்-ப்ரின்ட் ப்ரோடெக்‌ஷன் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இந்த செட்டிங்கை பிரைவேட் பிரவுசிங் மற்றும் ஆல் பிரவுசிங் உள்ளிட்டவைகளில் செயல்படுத்த முடியும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

ஹத்ராஸ் விபத்து நடந்தது எப்படி?!. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி!..

Published

on

yogi

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் இந்த விழாவை நடத்தினார். அந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கானோர் சிக்கினர். தற்போது வரை 122 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவில் 80 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது தெரியவந்திருக்கிறது. ஆன்மிக சொற்பொழிவு முடிந்தவுடன் பாபா காரில் ஏறி புறப்பட்டபோது அவரை பின் தொடர்ந்து பலரும் போயிருக்கிறார்கள். அவரின் கார் புறப்பட்டபோது அதன்பின்னால் பலரும் ஓடி இருக்கிறார்கள்.

அதில் பலரும் பாபாவின் காலடி மண்ணை எடுக்க கீழே குனிந்துள்ளனர். அப்போதுதான் கீழே குனிந்தவர்கள் மீது பலரும் ஏறி நடந்துள்ளனர். இதில் சிக்கிய பலரும் மூச்சி முட்டி இறந்திருக்கிறார்கள். மேலும், நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடை ஓட்டிக்கொண்டிருந்தது. பக்தர்கள் வேகமாக வெளியேறிய போது பலரும் அதில் விழுந்தார்கள். இப்படித்தான் 121 பேர் இறந்து போயிருக்கிறார்கள். குறிப்பாக இறந்து போனவர்களில் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதிதய்நாத் பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘சொற்பொழிவு முடிந்ததும் போலே பாபாவை நோக்கி மக்கள் முண்டியடித்து சென்றதால் விபத்து ஏற்பட்டது. அவரை நோக்கி மக்கள் சென்றபோது நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். உயிரிழந்த 121 பேரில் 6 பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள்’ என அவர் கூறினார்.

google news
Continue Reading

india

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் ராஜினாமா!. ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்..

Published

on

hemanth

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் பதவியில் இருந்தவர் சம்பாய் சோரன். இவர் ராஞ்சியில் உள்ள ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து இன்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் ஹேமந்த் சோரன்.

சட்ட விரோத பணிவர்த்தனை வழக்கில் சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தார் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராக மாறவிருக்கிறார். தலைநகர் ராஞ்சியில் ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஹேமந்த் சோரனை முதல்வர் பதவியில் அமர வைப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய சம்பயி சோரன் ‘ கடந்த சில நாட்கள் முதல்வர் பதவியில் இருந்ததால் மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்பி வந்திருப்பதால் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எனவே, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்’ என கூறினார்.

google news
Continue Reading

india

மேற்கூறையில் இருந்து பிச்சுகிட்டு கொட்டும் தண்ணீர்… ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணிகள் அவதி… வைரல் வீடியோ…!

Published

on

வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. ட்ரெயினில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ ஒன்றை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் பகிர்ந்த பயணி இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு ரயில்வே தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது. அதில் குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இருந்து இந்த நீர்க்கரசிவு ஏற்பட்டு இருக்கலாம். பயணிகள் சிரமப்பட்டதற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் இதனை சரி செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று பதிவிட்டு இருந்தது.

இருப்பினும் ரயிலில் இருந்து நீர் ஒழுகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இதை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் ரயில்வே துறையின் அலட்சியத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!

Published

on

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெரம்பலூர், கடலூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நாமக்கல், மதுரை, விழுப்புரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மேற்கு திசை காட்டின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் வரும் ஏழாம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசம்” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

google news
Continue Reading

latest news

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து… கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா… என்னதான் நடக்குது..

Published

on

கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்திருக்கின்றார்.

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியை தொடர்ந்து பெரிய மாநகராட்சியாக விளங்குவது கோவை. இந்த மாநகராட்சியில் மொத்தம் 100 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இதில் 97 பேர் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள். மூன்று பேர் மட்டுமே அதிமுகவை சேர்ந்தவர்கள். கோவை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த கல்பனா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் மாநகராட்சி 19வது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனவர்.

இவரது கணவர் ஆனந்தகுமார் திமுகவில் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகின்றார். மேயர் கல்பனா பொறுப்பேற்றது முதல் அவர் மீது பல புகார்கள் எழுந்தது. அது மட்டும் இல்லாமல் கல்பனாவின் அதிகாரத்தில் அவரின் கணவர் ஆனந்தகுமார் தலையிட்டு வருகின்றார். இதன் காரணமாக திமுக கவுன்சிலர் மட்டத்திலும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரிய அளவுக்கு நம்பிக்கை பெறாததால் திமுக கவுன்சிலர்களே தங்களது எதிர்ப்பை காட்டி வந்தார்கள்.

இதனால் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக கூறியிருந்தார் கல்பனா. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியிருக்கின்றார். இந்த கடிதத்தை ஆணையரும் ஏற்றுக்கொண்டார். மேயர் கல்பனா ராஜினாமா செய்தது மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

இப்படி இருக்க அடுத்த சிறிது நேரத்தில் நெல்லை மேயர் சரவணனும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றார். நெல்லை மாநகராட்சியில் திமுக மேயராக இருந்து வருபவர் பி எம் சரவணன். இவரது தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் பல பிரச்சினைகள் நிலவிய வந்துள்ளது. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் அதில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களே வராத காரணத்தினால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை பெயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இன்று கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி இருக்கின்றார் சரவணன். முதல்வர் மு க ஸ்டாலின்  அறிவுறுத்தலின் பெயரில் தான் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

Trending