latest news
பயனர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா – உடனே பெறுவது எப்படி?
![vodaphone - Cinereporters Info vodaphone](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/vodaphone.jpg)
இந்திய டெலிகாம் சந்தையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாக வி (வோடபோன் ஐடியா) நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. மேலும் டெலிகாம் சந்தையில் வி நிறுவனத்தின் 5ஜி சேவைகளை வெளியீட்டு பணிகளும் தொட்ரந்து தாமதமாகிறது.
பயனர் எண்ணிக்கை குறைவதை நிறுத்தும் நோக்கில் வி நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் தான், தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் திட்டங்களை, பயனர்கள் வி செயலியின் மூலம் ரிசார்ஜ் செய்யும் போது எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி கூடுதல் டேட்டா வழங்கியது. தற்போது இதே திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும்.
![vodaphone 02 - Cinereporters Info vodaphone](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/vodaphone-02-1024x576.jpg)
vodaphone
“மஹா ரிசார்ஜ் திட்டம்” என்று அழைக்கப்படும் இந்த திட்டம் குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. மேலும் பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும்.
வி கூடுதல் டேட்டா வழங்கும் ரிசார்ஜ் திட்டங்கள்:
புதிய திட்டம் குறித்து வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ. 199 முதல் ரூ. 299 வரையிலான தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது மூன்று நாட்களுக்கு 2 ஜிபி வரையிலான டேட்டா வழங்கப்படும். ரூ. 299 மற்றும் அதிக விலை கொண்ட பிரீபெயிட் திட்டங்களை தேர்வு செய்யும் போது 5 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும். இத்துடன் வி மூவிஸ், டிவி, வி மியூசிக் மற்றும் வி கேம்ஸ் உள்ளிட்டவைகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. வி கேம்ஸ் செயலியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஹெச்டிஎம்எல் 5 சார்ந்து உருவாக்கப்பட்ட 1200-க்கும் அதிக மொபைல் கேம்கள் உள்ளன.
முன்னதாக வி நிறுவனம் அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு ஆப்ஷன்களை எதிர்பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய பிரீபெயிட் திட்டங்களை அறிவித்தது. இந்த திட்டங்களின் விலை ரூ. 368 மற்றும் ரூ. 369 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டு திட்டங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலன்களை வழங்குகின்றன. அதன்படி இரு பிரீபெயிட் திட்டங்களிலும் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி அன்ற அடிப்படையில் மொத்தம் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
![Vi-5GB-Extra-Data - Cinereporters Info vodaphone](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/Vi-5GB-Extra-Data-1024x614.jpg)
vodaphone
30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரு திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் மற்றும் டிவி செயலிக்கான சந்தா வழங்கப்படுகிறது. இரு திட்டங்களை வித்தியாசப்படுத்துவது வாய்ஸ் காலிங் மற்றும் ஒடிடி பலன்கள் தான் எனலாம். ரூ. 368 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சேவை மற்றும் சன் நெக்ஸ்ட் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 369 திட்டத்தில் சோனிலிவ் சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் தவிர வி நிறுவனம் ரூ. 181 விலையில் மற்றொரு பிரீபெயிட் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இதில் தினமும் 1 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. தினசரி டேட்டாவை விரைந்து பயன்படுத்துவோர் இந்த திட்டத்தின் மூலம் கூடுதல் டேட்டா பெற்றுக் கொள்ள முடியும். இது ஆட் ஆன் டேட்டா திட்டம் ஆகும்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
Cricket
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
![virat - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/virat.jpg)
சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி மீண்டும் ஒரு சாதனையை செய்து இருக்கிறார். ஆனால் இந்த முறை சாதனை கிரிக்கெட்டில் இல்லை என்பது தான் ஆச்சரியமே. ஐசிசி உலக கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படமாக மாறி இருக்கிறது.
இந்திய அணி வீரர்கள் இணைந்து கோப்பையை கொண்டாடும் தருணத்தின் புகைப்படத்தினை வெளியிட்டு எமோஷனலாக ரைட்டப் எழுதி இருந்தார் விராட் கோலி. அந்த போஸ்ட் தற்போது இந்த பதிவை எழுதும் வரை 19 மில்லியன் லைக்குகளை பெற்று உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த பதிவில் விராட் கோலி, இதை விட ஒரு ஆச்சரிய நாள் குறித்து கனவு காண முடியாது. என் நன்றியால் தலைவணங்குகிறேன். கடைசியில் சாதித்துவிட்டோம். ஜெய் ஹிந்த் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு முன்னர் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை வாங்கிய புகைப்படம் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் கல்யாண புகைப்படம் தான். அந்த புகைப்படத்தின் சாதனையை விராட் கோலி முறியடித்து இருக்கிறார்.
விராட் புகைப்படத்தில் இண்டர்சேஷனல் ஸ்போர்ட்ஸ் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். ஐசிசி டி20 உலக கோப்பையை வாங்கிய கையோடு தன்னுடைய ஓய்வை அறிவித்தார் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
latest news
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்! – திமுக – பாமக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு…
![vikkiravandi - Cinereporters Info vikkira](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/vikkiravandi.jpg)
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுக்கிறார்.
மேலும், நம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் போட்டியிடுவார்கள் என எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். தேர்தல் முறையாக நடக்காது என்பதால் அதிமுக போட்டியிடவில்லை எனவும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
ஜூலை 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களை கட்டியிருக்கிறது. இந்நிலையில், அங்கு திமுக – பாமக கட்சியினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. சாணிமேடு என்கிற பகுதியில் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சாரம் செய்ய வரவிருக்கிறார். ஆனால், அதில் கலந்துகொள்ள விடாமல் மக்களை திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக கூறி பாமக தொண்டர்கள் கூறுகின்றனர்.
மக்களை வெளியே விடுமாறு கூறி திமுகவினரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
latest news
நான் முதல்வன் திட்டம்.. இதுவரை 25,000 மாணவர்களுக்கு வேலை.. 8 லட்சம் வரை சம்பளம்..!
![muthalvan 1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/muthalvan-1.jpg)
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக பாலிடெக்னிக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களுக்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுப்பதற்கு அரசு உதவி செய்து வருகின்றது. கடந்த ஜூன் 18ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல துறைகளில் வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பாக ஓலோ எலக்ட்ரிக் நிறுவனம் மற்றும் எலக்ட்ரிக் வாகன ஆலைகளில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து Accenture, Amazon, Ashok Leyland, BOSCH, Caterpiller India, Daikin, போர்டு, ஹெச்.சி.எல் டெக் மற்றும் எல் அண்ட் டி போன்ற நிறுவனங்களும் பாலிடெக்னிக் மாணவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 8 லட்சம் வரை சம்பளமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 252 கல்லூரிகளில் நான் முதல்வன் வேலை வாய்ப்பு திட்டத்தில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக இந்த ஆண்டில் இறுதி ஆண்டு படித்து வரும் 58 ஆயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான நடைமுறை தொடரும் என்று கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.
latest news
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!
![train - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/train.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.
இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
india
இந்தியர்கள் ஆண்டு வருமானத்தினை விட மூன்று மடங்கு இதுக்கு தான் அதிக செலவு செய்றாங்களாம்!
![money - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/money.jpg)
அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிகம் செலவு செய்வது என்னவோ கல்விக்கு இல்லாமல் திருமணத்துக்கு தான் என்ற ஆய்வு முடிவுகள் பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய குடிமகன்கள் தங்கள் வருமானத்தில் இருந்து உணவு, மளிகை பொருட்களை விட திருமணத்துக்கு தான் அதிக செலவு செய்கின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி திருமணத்துக்கு மட்டுமே செலவு செய்யப்படுகிறது. மேலும், இது கல்விக்கு ஆகும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.
நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட ஜெப்ரீஸ் நிறுவனம் இந்தியர்கள் செய்யும் செலவுகள் குறித்து ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அந்த ஆராய்ச்சி முடிவுகள் கூறுகையில், இந்தியாவில் திருமணத்துக்கு மட்டுமே 10 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
ஒவ்வொரு திருமணத்திற்கும் 12.5 லட்சம் வரை சராசரியாக செலவு செய்யப்படுகிறது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 4 லட்சமாக இருக்க அவர்கள் மூன்று மடங்கு அதிகமாக ஒரு திருமணத்திற்கு செலவு செய்கின்றனர். தனி நபரின் ஆண்டு வருமானத்தினை கணக்கிடும் போது இது ஐந்து மடங்காக இருப்பதாக கூறப்படுகிறது.
திருமண செலவில் 30 சதவீதம் ஆடைகள் மற்றும் நகைகள் வாங்க செலவாகிறது. உணவு பொருட்களுக்கு 20 சதவீதம் செலவு செய்யப்படுகிறது. இதை விட போட்டோகிராபி, மேக்கப் உள்ளிட்ட ஆடம்பரங்களுக்கே அதிக அளவு இந்திய திருமணங்களில் செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு உலக கோப்பைகள் கொடுத்த முக்கிய கேட்சுகள்… கபில்தேவ் முதல் சூர்யகுமார் வரை…
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடி.. பி.சி.சி.ஐ. அதிரடி
-
Cricket24 hours ago
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள் மீண்டும் தினேஷ் கார்த்திக்… வெளியான ஆச்சரிய அறிவிப்பு..
-
tech news2 days ago
இனி பேட்டரி மாற்ற சிரமம் வேண்டாம்.. ஐபோனில் அறிமுகமாகும் புது வசதி
-
latest news21 hours ago
முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது மாநில கல்வி கொள்கை… இதற்கெல்லாம் இனி தடா தான்!…
-
tech news2 days ago
போக்கோ போனுக்கு ரூ. 5,000 விலை குறைப்பு – அமேசான் அறிவிப்பு
-
Cricket2 days ago
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – ஓ.டி.டி. வியூஸ் இத்தனை கோடிகளா?
-
Cricket2 days ago
கோலி, ரோகித் வரிசையில் ஜடேஜா.. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு..!
-
latest news18 hours ago
அடப்பாவி..! பசியால் அழுத 5 மாத குழந்தை.. தூக்கம் கெட்டதால் ஆத்திரத்தில் தந்தை செய்த செயல்…!