Finance
உஷாரய்யா உஷாரு..யூபிஐ பயன்படுத்துறீங்களா?.. அதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சிகோங்க..
இன்று நாம் பண பரிமாற்றத்திற்கு என பல வகை யூபிஐ செயலிகள் உள்ளன. இவைகளை நாம் பாதுகாப்புடன் பயன்படுத்துவது மிகவும் அவசியம். நாம் இந்த செயலிகளை பயன்படுத்துவதில் ஏதேனும் கவனக் குறைவாக இருந்தால் இதன் மூலம் நாம் பணத்தினை இழக்கவும் நேரிடும். எனவே இந்த வகையான செயலிகளை உபயோகிக்கும் முன் கீழ்காணும் சில முன்னெச்சரிக்கைகளை செய்வது மிகவும் அவசியமாகும்.
1.UPI PIN-களை பாதுகாப்பாக வைத்தல்:
யூபிஐ PIN என்பது நமது ஒவ்வொரு பறிமாற்றத்திற்கும் நாம் உபயோகிக்க கூடிய 4 இலக்க எண்ணாகும். இதனை மற்றவர்கள் அறியும் வகையில் வைக்காமல் இருத்தல் முக்கியமானதாகும். ஏனெனில் உங்களின் அந்த எண்ணை அறித்தவர்கள் உங்களுக்கு தெரியாமலே உங்கள் கணக்கில் இருந்து பணத்தினை எடுக்க முயலலாம்.
2.அதிகாரப்பூர்வை UPI செயலிகளை பயன்படுத்துதல்:
ஒவ்வொரு வங்கியினாலும் அரசினாலும் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நமக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்.
3.பணம் செலுத்துபவர் பற்றிய தகவல்களை உறுதி செய்தல்:
நாம் ஒவ்வொரு பண பரிமாற்றத்தின் போதும் நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.
4.பணத்தினை சரிபார்த்தல்:
நாம் அனுப்பும் பணத்தினை அனுப்புவதற்கு முன் சரியான தொகையை தட்டச்சு செய்துள்ளோமா என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு 0 மிகுதியாக வந்தால் கூட நாம் நமது பணத்தினை இழக்க நேரிடலாம்.
5.பணபரிமாற்றத்திற்கான ஆதாரத்தினை வைத்து கொள்ளுதல்:
ஒவ்வொரு பணபறிமாற்றத்தின் போதும் அதற்கான ஆவணத்தை வைத்து கொள்ள வேண்டும்.
6.வங்கி ஸ்டேட்மெண்டை கண்காணிப்பது:
அவ்வப்போது நமது வங்கி கணக்கினையும் அதன் மாத ஸ்டேட்மெண்டையும் கண்காணித்து கொள்ள வேண்டும்.
மேலும் நமது யூபிஐ செயலிக்கென்று உள்ள லாக் வசதியினை உபயோகிக்க வேண்டும். இவ்வாறு செய்வதின் மூலம் நமது கணக்கில் உள்ள பணத்தினை பாதுகாத்து கொள்ளலாம்.
Finance
குறைந்தது விலை!…தாக்கம் கொடுத்த தங்கம்…இந்த நிலை நீடிக்குமா?…நகைப்பிரியர்கள் ஏக்கம்…
சர்வதேச பொருளாதார நிலை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பினைக் கொண்டே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனால் தான் தங்கத்தின் விற்பனை விலையில் நாள் தோறும் மாற்றங்கள் காணப்படும் நிலை இருந்து வருகிறது. தங்கம் என்பது இந்தியா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகறது. சடங்குகளில் வழங்கப்படும் முக்கியத்துவத்தின் காரணத்தால் இதற்கான மவுசு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த செப்டம்பர் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. கிராம் ஒன்று ஏழாயிரம் ரூபாய்க்கு (ரூ.7,000/-) விற்கப்பட்டு புதிய உச்சத்தை தொட்டது விலை. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலேயே காணப்பட்ட தங்கம் திங்கட்கிழமையான இன்று இறங்கு முகத்தை சந்தித்துள்ளது.
கிராம் ஒன்றுக்கு பதினைந்து ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது சென்னையில் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கம் இன்று.
ஒரு கிராம் ஏழாயிரத்து தொன்னூற்றி ஐந்து ரூபாய்க்கு (ரூ.7.095/-) விற்கப்பட்டு வந்த நிலையில் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து இன்று ஏழாயிரத்து என்பது ரூபாய்க்கு (ரூ.7,080/-)விற்பனையாகிறது. சவரன் ஒன்றின் விலை நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-)குறைந்து ஐம்பத்தி ஆறாயிரத்து அறனூற்றி நாற்பது ரூபாய்க்கு (ரூ. 56,640/-) விற்பனையாகி வருகிறது.
வெள்ளி கிராம் ஒன்றிற்க்கு பத்து காசுகள் குறைந்து நூறு ரூபாய் தொன்னூறு காசுகளுக்கு (ரூ0.90/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து தொல்லாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,00,900/-) விற்கப்படுகிறது இன்று.
கடந்த சில நாட்களாகவே விலை உயர்வை சந்தித்து அதிர்ச்சியளித்து வந்த தங்கத்தின் விலை இன்று இறங்கமுகத்திற்கு வந்து ஆறுதல் அடையச் செய்துள்ளது. இந்த விலை குறைவு தொடருமா? என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது ஆபரணப்பிரியர்கள் மத்தியில்.
Finance
ஹைப்பர் டென்ஷன் கொடுக்குதா ஹைக்?…தலைவலியாக மாறுகிறதா தங்கம்?…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் தங்கத்திற்கு என தனி மவுசு இருந்தே வருகிறது. நாளுக்கு நாள் அதன் மீதான மோகமும், அதன் தேவையும் அதிகரித்தே வரும் நிலையே இருக்கிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை அடுத்தடுத்து உயர்வை சந்தித்து வருவது நகை பிரியர்களுக்கு தலைவலி தரக்கூடிய விஷயமகவே மாறி வருகிறது.
நேற்று மாற்றம் ஏதும் தென்படாமல் இருந்த தங்கத்தின் விற்பனை விலை இன்று ஒரே நாளில் அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஏழாயிரத்து அறுபது ரூபாய்க்கு (ரூ.7,060/-) விற்பனையாகி வந்த நிலையில் இன்று நாற்பது ரூபாய் (ரூ.40/-) உயர்ந்து ஏழாயிரத்து நூறு ரூபாய்க்கு (ரூ.7,100/-)விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனின் விலை நேற்று ஐம்பத்தி ஆராயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரு சவரனின் விலை ஐம்பத்தி ஆராயிரத்து என்னூறு ரூபாயாக (ரூ.56,800/-)உள்ளது. சவரன் ஒன்றுக்கு இன்று முன்னூற்றி இருபது ரூபாய் (320/-)உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று தங்கத்தைப் போலவே ஏறுமுகத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி நூற்றி ஓரு ரூபாய்க்கு (ரூ.101/-) விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு ரூபாய் உயர்ந்து (ரூ.1/-) நூற்றி இரண்டு ரூபாய்க்கு (ரூ.102/-) விற்கப்பட்டு வருகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளி நேற்று ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-) இருந்து வந்த நிலையில் இன்று ஆயிரம் ரூபாய் (ரூ.1,000/-) உயர்ந்து ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு (ரூ.1,02,000/-) விற்கப்படுகிறது. தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையால் ஆபரணப்பிரியர்கள் அதிகமான கவலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
Finance
எகிறி அடிக்கும் கோல்ட் ரேட்…ஆசையெல்லாம் ஆகிவிடுமா க்ளீன் போல்டு?…
செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் காணப்பட்டே வருகிறது. நாளுக்கு நாள் விற்பனை விலையில் ஏற்ற, இறக்கங்களோடு இருந்து வருகிறது. அதிலும் தமிழ் மாதமான புரட்டாசி துவங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலை ஏறு முகத்திலேயே இருந்து வருகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானித்து வருகிறது. இன்று சென்னையில் விற்கப்படும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது, வெள்ளியின் விலையிலும் ஏற்றம் காணப்பட்டது நகை பிரியர்களை அதிர வைத்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஏழாயிரம் ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை அடைந்துள்ளது ஆபரணப்பிரியர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் இன்று விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்த்தின் ஒரு கிராம் விலை ஏழாயிரத்து அறுபது ரூபாயாக (ரூ.7,060/-)உள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ஐம்பத்தி ஆறாயிரத்து நானூற்றி என்பது ரூபாய்க்கு (ரூ.56,480/-) விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே எகிறியடித்து வரும் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ஏழாயிரம் ரூபாயையும் (ரூ.7,000/-) கடந்து சென்றுள்ளது தங்கம் வாங்க நினைப்பவர்களின் கவலையை அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளி கிராம் ஒன்றின் விலை இன்று நூற்றி ஓரு ரூபாயாக இருக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயாக (ரூ.1,01,000/-)உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது நகை பிரியர்களுக்கு பேரிடியாக உணரப்படுகிறது.
Finance
தடுமாறும் தங்கம் விலை…புரட்டிப் போடும் புரட்டாசி?…
சர்வதேச பொருளாதார சூழலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தங்கத்தின் விற்பனை விலையை தீர்மானித்து வருகிறது. சடங்கு சம்பர்தாயங்கள் அதிகமாக கடைபிடிக்கப்படும் நாடுகளில் இந்தியா முக்கியத்துவம் பெற்று விளங்குவதால், தங்கத்திற்கான தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் வருகிறது.
செப்டம்பர் மாதத் துவக்கத்திலிருந்தே ஏற்ற, இறங்களை அதிலும் குறிப்பாக விலை உயர்வை பல முறை
சந்தித்து வந்த இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத்தங்கத்தின் சென்னை விலையின் நிலைமை தமிழ் மாதமான புரட்டாசி பிறந்ததிலிருந்து தலை கீழாக மாறியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சிப் பாதையிலேயே காணப்படுகிறது புரட்டாசி மாதம் துவங்கியதிலிருந்து. நேற்று ஐம்பத்தின் நாலாயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலையில் இன்றும் தடாலடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
நேற்றை விட இன்று சவரனுக்கு இருனூறு ரூபாய் (ரூ.200/-) வீழ்ச்சியை சந்தித்து ஐம்பத்தி இரண்டாயிரத்து அறனூறு ரூபாய்க்கு (ரூ.52,600/-) விற்கப்படுகிறது.
கிராம் ஒன்றின் விலை இன்று ஆராயிரத்து என்னூற்றி இருபத்தி ஐந்து ரூபாயாக (ரூ.6,825/-)உள்ளது. தங்கத்தின் விலை இன்று இறங்கு முகத்தில் இருந்தாலும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. நேற்று கிராம் ஒன்றுக்கு தொன்னூற்றி ஆறு (ரூ.96/-) ரூபாய்க்கு விற்கப்பட்ட அதே விலையில் இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.
ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை தொன்னூற்றி ஆறாயம் ரூபாய்க்கும் (ரூ.96,000/-) விற்பனையாகிறது. தொடர்ச்சியாக இறங்கு முகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகை பிரியர்கள் மகிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Finance
தொடரும் விலை குறைவு…ஆபரணப் பிரியர்கள் திடீர் உற்சாகம்!.
சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலையில் இந்த மாதத் துவக்கத்திலிருதே ஏற்ற, இறக்கங்கள் இருந்தே காணப்படுகிறது. உயர்வை நோக்கி செல்லும் இவைகளின் விலை திடீரென வீழத்துவங்கும். இப்படி நிலை இல்லாதத் தன்மையோடு தான் இந்த மாதம் நகர்ந்து வருகிறது.
நேற்றைப் போலவே இன்றும் சென்னையில் விற்கப்பட்டு வரும் இருபத்தி இரண்டு கேரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விற்பனை விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ஆறாயிரத்து என்னூற்றி அறுபத்தி ஐந்து ரூபாய்க்கு (ரூ.6865/-) விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று கிராமிற்கு நேற்றைப் போலவே இன்றும் பதினைந்து ரூபாய் (ரூ.15/-) குறைந்து.
நேற்று முன் தினத்தை விட சவரனுக்கு நூற்றி இருபது ரூபாய் குறைந்து விற்பனையானதைப் போலவே இன்றும் சவரன் ஒன்றிற்கு நூற்றி இருபது ரூபாய் (ரூ.120/-) குறைந்துள்ளது.
ஐம்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரத்து இருபது ரூபாய்க்கு (ரூ. 54,920/-) நேற்று விற்பனையாகி வந்த தங்கம் இன்று ஐம்பத்தி நான் காயிரத்து என்னூறு ரூபாய்க்கு (ரூ.54,800/-) விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை குறைவைப் போலவே தான் வெள்ளியின் விற்பனை விலையிலும் மாற்றம் காணப்படுகிறது.
நேற்று தொன்னூற்றி ஏழு (ரூ.97/-) ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி இன்று ஒரு ரூபாய் குறைந்து தொன்னூற்றி ஆறு ரூபாய்க்கு (ரூ.96/-) விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று தொன்னூற்றி ஆறாயிரம் ரூபாயாக (ரூ.96,000/-) உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவை சந்தித்து வரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையால் ஆபரணப் பிரியர்களுக்கு திடீர் உற்சாகம் பிறந்துள்ளது.
-
Cricket2 days ago
ஓய்வு பற்றி கேள்வி.. டோனியுடன் ஒப்பிட்டு ஷாருக் சொன்ன பதில்.. யாரும் எதிர்பார்க்கல
-
latest news2 days ago
வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!
-
Cricket2 days ago
ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!
-
Cricket22 hours ago
கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்
-
latest news2 days ago
பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…
-
Cricket23 hours ago
கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்
-
latest news20 hours ago
ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?
-
Cricket18 hours ago
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…