World News
என்னையவா வேலையை வீட்டு தூக்குறீங்க… சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியர்!
![lap - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/lap.jpg)
தன்னை வேலையை விட்டு நீக்கிய சிங்கப்பூர் நிறுவனத்தின் சர்வர் டேட்டாவை அழித்த இந்தியாவைச் சேர்ந்த 33 வயது ஊழியருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரைச் சேர்ந்த என்.சி.எஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கந்தூலா நாகராஜூ என்கிற இந்தியர் பணிபுரிந்து வந்தார். பணியில் அவரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றுகூறி கடந்த 2022 அக்டோபரில் அவரைப் பணியில் இருந்து நீக்கியது என்சிஎஸ் நிறுவனம்.
அதற்கு முந்தைய ஓராண்டாக என்சிஎஸ் நிறுவனத்தின் தர மேம்பாட்டுக் குழு உறுப்பினராக அவர் இருந்து வந்திருக்கிறார். நிறுவனம் சார்பில் உருவாக்கப்படும் புதிய சாப்ட்வேர்களை பரிசோதித்து, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது நாகராஜூ இருந்த குழுவின் மேற்பார்வையில் நடந்து வந்திருக்கிறது.
இவர்கள் என்சிஎஸ் நிறுவனத்தின் தகவல்கள் சேமிக்கப்பட்ட சுமார் 180 சர்வர்களையும் பராமரித்து வந்திருக்கிறார்கள். தன்னை வேலையை விட்டு நீக்கியதில் அதிருப்தி அடைந்த நாகராஜூ, அந்த 180 சர்வர்களிலும் இருந்த தகவல்களை முற்றிலுமாக அழித்திருக்கிறார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனம் அவர் மீது சிங்கப்பூர் போலீஸில் புகாரளித்திருக்கிறது.
இதை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் நாகராஜூவுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. நாகராஜூவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய என்சிஎஸ் நிறுவனத்துக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5.66 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
World News
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
![keir - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/keir.jpg)
இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் கன்சர்வேட்டிவ் கட்சியைத் தோற்கடித்து தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது.
இங்கிலாந்து பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் வரை உள்ள நிலையில், 6 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரிட்டனில் உள்ள 650 தொகுதிகளிலும் நேற்று பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் வாக்களித்தார். லேபர் கட்சி வேட்பாளர் ஸ்டார்மர் தனது மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டன் தொகுதியில் வாக்களித்தார். இங்கிலாந்து நேரப்படி நேற்றிரவு 10 மணி வரையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாரும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு எதிராக இருக்கின்றன. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின் தொழிலாளர் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று, ஆட்சியில் அமர இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த கீர் ஸ்டார்மர்?
லண்டனில் 1962-ம் ஆண்டு பிறந்த ஸ்டார்மர், சர்ரேவின் ஆக்ஸ்டட் நகரில் வளர்ந்தவர். இவரின் தந்தை மெக்கானிக் மற்றும் தாயார் தேசிய சுகாதாரத் திட்டத்தில் நர்ஸாகப் பணியாற்றியவர். இளம் வயதிலேயே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த ஸ்டார்மர், 16 வயதிலேயே தன்னை தொழிலாளர் கட்சியில் இணைத்துக் கொண்டு களப்பணியாற்றியவர்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டம் பயின்ற இவர் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலையில், சட்டத்துறையில் முதுகலை படிப்பை முடித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதலே மனித உரிமை ஆர்வலராக இருந்துவரும் ஸ்டார்மர், மனித உரிமைகளுக்காக நீதிமன்றங்கள் மட்டுமல்லாது பொதுவெளியிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறார்.
2008 – 2013 காலகட்டத்தில் இங்கிலாந்து அரசு வழக்கறிஞராக பல்வேறு வழக்குகளைத் திறம்பட கையாண்டவர். தொழிலாளர் கட்சியின் கோட்டையான செயிண்ட் பான்கராஸ் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2015-ல் முதல்முறையாக எம்.பியானார். கடந்த 2020-ல் ஜெர்மி கோர்பைனுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
latest news
ஓவர் வேலையால் தற்கொலை செய்துக்கொண்ட ரோபோ!… அடங்கம்மா… இது புதுக்கதையால இருக்கு!
![robo - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/robo.jpg)
ஓவர் வேலை, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னையால் பெரிய பெரிய வேலையில் இருப்பவர்கள் கூட தற்கொலை செய்து கொள்ளும் சேதிகளை தான் நாம் கேட்டு இருக்கிறோம். ஆனால் உலகில் முதல் முறையாக ரோபோ தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வு பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகள் மனிதர்களுக்கு மாற்றாக ஏஐ பயன்படுத்துவதை அதிகப்படுத்தி இருக்கிறது. பல இடங்களில் மனிதர்கள் செய்யும் வேலையை ரோபோ கையில் எடுத்துக் கொண்டது. மனிதர்களுக்கு சம்பளம் என பல முதலீடுகள் கொடுக்க வேண்டுமே என நினைக்கும் முதலாளிகள் ரோபோவை மாற்றாக பயன்படுத்துவதை எளிது என நினைக்கின்றனர்.
எவ்வளவு வேலை கொடுத்தாலும் அசால்ட்டாக பார்ப்பது, தேவையே இல்லாத விடுமுறை என எதுவும் இருக்காது என்பதால் மேலை நாடுகளில் ரோபோ பயன்பாடு தற்போது மிக அதிகமாகி இருக்கிறது. ஆனால் இந்த கூற்றே தற்போது பொய்யாகி இருக்கிறது.
அதாவது, தென் கொரியா அரசாங்கத்துக்கு கீழ் ரோபோ ஒன்று வேலை செய்து வந்து இருக்கிறது. திடீரென அந்த ரோபோ வேலை செய்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தான் உலகின் முதல் ரோபோ தற்கொலை என தகவல்கள் தெரிவிக்கிறது..
குறிப்பிட்ட ரோபோ தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னர் ஒரு இடத்தினையே சுற்றி சுற்றி வந்ததாகவும், குழப்பத்துடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ரோபோவின் உடைந்த பாகங்களை கைப்பற்றி இருக்கும் குழு தீர ஆராய்ந்த பின்னரே தற்கொலை காண காரணம் தெரியும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
latest news
என்ன கொடுமடா இது…! ஊதிய உயர்வு கொடுத்ததால் அரெஸ்ட்டான ஓனர்… எதுக்காக தெரியுமா…?
![arrest - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/arrest.jpg)
மியான்மர் நாட்டில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்திற்காக முதலாளியை கைது செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மியான்மர் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் கைவிடப்பட்டு தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகின்றது. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ராணுவ தளபதி மின் ஆங்க் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நாட்டில் இருக்கும் மக்கள் பலரும் வேலையில்லாமல் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் மியான்மர் நாட்டில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய கடைக்காரரை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது.
அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அந்த கடைக்காரரின் மூன்று செல்போன் கடைகளையும் அந்த நாட்டு அரசு மூடி இருக்கின்றது. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்த காரணத்தால் இதுவரை 10 முதலாளிகளை அந்நாட்டு அரசு கைது செய்து அவர்களின் கடைகளை மூடி இருக்கின்றது.
தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் கைதா? இது என்ன விசித்திரமாக இருக்கின்றது என்று நீங்கள் கேட்கலாம். மியான்மர் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் விலைவாசி விண்ணை தொடும் அளவிற்கு இருக்கின்றது. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்தால் அந்த நாட்டில் பணவீக்கம் இருக்கின்றது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
இது அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவாக இருக்கும். இது ஆட்சிக்கு எதிராக தூண்டும் வகை என்று அந்த நாட்டு அரசு நம்புகின்றது. இதனால் அந்த நாட்டில் யாருக்குமே ஊதிய உயர்வு என்பது இல்லாமல் இருந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இப்படி அந்த நாட்டு அரசு தொடர்ந்து கடைகளை மூடுவதால் பலரும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
latest news
டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சுட்டிக்காட்டிய சிறுமி… எலான் மஸ்க் சொன்ன பதில் என்ன தெரியுமா…?
![elan mask 1 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/elan-mask-1.jpg)
டெஸ்லா ஸ்கிரீனில் உள்ள பிழையை சரி செய்து கொடுக்கும்படி சிறுமி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அதற்கு எலான் மஸ்க் பதிலளித்து இருக்கின்றார்.
உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மாஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான இவர் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருகின்றார். இவரிடம் சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரு கோரிக்கையை வைத்திருக்கின்றார். அதாவது சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பிய படம் ஒன்றை வரைந்து இருக்கின்றார்.
அப்போது திடீர் திடீரென்று அந்த படங்கள் காணாமல் போனது. இதனால் கவலையடைந்த சிறுமி இது ஒரு பிழை, இதனை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தன்னுடைய செயலை ஒரு வீடியோவாக எடுத்து எக்ஸ் தளத்தில் எலான் மஸ்கை டேக் செய்து பதிவு செய்தார்.
Molly decided to report an important bug to Mr. Musk @elonmusk #Tesla $tsla pic.twitter.com/LgqFEPh7qw
— DriveGreenLiveGreen (@DriveGreen80167) June 30, 2024
அதில் அவர் கூறியிருந்ததாவது “ஹலோ மிஸ்டர் மஸ்க். நான் சீனா மாகாணம் மோலியிலுள்ள பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியதுதான். நான் வரையும் படமானது சில நேரங்களில் மறைந்து விடுகின்றது. பின்னர் இதுபோன்று ஒரு கோடு வருகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எலான் மஸ்க் நிச்சயமாக என்று கூறி இருக்கின்றார். இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றது.
latest news
அடேங்கப்பா… இவ்வளவு பெருசா..? உலகின் மிக நீளமான சைக்கிள்.. கின்னஸ் சாதனை படைத்த பொறியாளர்கள்..!
![cycle - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/cycle.jpg)
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்கள் 8 டச்சு பொறியாளர்கள்.
உலகிலேயே மிக நீளமான சைக்கிளை 8 டச்சு பொறியாளர்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 180 அடி நீளம் உள்ள இந்த சைக்கிள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றது. இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெர்னீ ரியான் என்பவர் 155 அடி நீளம் இருக்கும் சைக்கிளை தயாரித்திருந்தார், இதுதான் உலகிலேயே நீளமான சைக்கிள் என்ற சாதனையை படைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த சாதனையை முறியடித்து 180 அடி நீளம் உள்ள சைக்கிள் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. டச்சு பொறியாளர்கள் குழுவில் இருந்த யுவான் ஷால் என்ற 39 வயதான பொறியாளர் சிறு வயது முதலே மிக நீளமான சைக்கிளை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் கனவை நினைவாக்கும் விதமாக தன் நண்பர்களுடன் இணைந்து இந்த சைக்கிளை தயாரித்து இருக்கின்றார்.
இது தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் மிக நீளமான சைக்கிள் என்ற சாதனை படைத்திருக்கின்றது. உலகின் நீளமான சைக்கிள் என்ற சாதனையை கடந்த 60 வருடங்களில் பலமுறை முறியடிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு ஜெர்மனியில் 26 அடி நீளத்தில் உலகின் மிக நீளமான சைக்கிள் தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சாதனைகள் முறியடிக்கப்பட்டு தற்போது 180 அடி உயரத்திற்கு வளர்ந்து இருக்கின்றது.
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
tech news1 day ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
World News1 day ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
latest news23 hours ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
latest news21 hours ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
tech news5 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
latest news23 hours ago
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?
-
Cricket2 days ago
ஐசிசி-யின் டி20 ஆல்ரவுண்டர் பட்டியல்: ஜடேஜாவை பின்தள்ளிய விராட் கோலி