latest news
வேற லெவல் அம்சங்களுடன் பானசோனிக் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் அறிமுகம்!
பானசோனிக் இந்தியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களை மாற்றியமைத்து புதிதாக 23 புதிய மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. MX850, MX800, MX750, MX740, MX710, MX700, MS670 மற்றும் MS550 சீரிசில் புதிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்து ஸ்மார்ட் டிவிக்களிலும் கூகுள் டிவி பிளாட்ஃபார்ம் உள்ளது. இவை 32 இன்ச், 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவில் கிடைக்கின்றன.
புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களில் 4K கலர் எஞ்சின் உள்ளது. இது டிஸ்ப்ளேவின் டார்க் மற்றும் பிரைட் பகுதிகளுக்கு ஏற்ப ஆப்டிமைஸ் செய்துகொள்ளும். இதோடு HD/FHD தரவுகளுக்காக ஹை-ரெசல்யூஷன் அப்ஸ்கேலிங் செய்துகொள்ளும். MS680, MS670 மற்றும் MS550 மாடல்கள் FHD/HD ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றன. இவற்றில் விவிட் டிஜிட்டல் பிராசஸர், 2K HDR சப்போர்ட் உள்ளது.
பானசோனிக் ஸ்மார்ட் டிவி மாடல்களில் MirAle எனும் பிளாட்ஃபார்ம் உள்ளது. இது ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹப் போன்று செயல்படும் பானசோனிக் நிறுவனத்தின் சொந்தமான IoT பிளாட்பார்ம் ஆகும். இத்துடன் ப்ளூடூத் ஆடியோ லின்க் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது டிவியில் இருப்பதை தவிர இதர கூடுதல் ஸ்பீக்கர்களுக்கு ப்ளூடூத் தொழில்நுட்பத்தில் சீரான வயர்லெஸ் ஆடியோ கனெக்டிவிட்டியை வழங்குகிறது.
அனைத்து டிவி மாடல்களிலும் டால்பி ஆடியோ தொழில்நுட்பத்தின் ஆடியோ பூஸ்டர் பிளஸ், ஆண்ட்ராய்டு டிவி ஒஎஸ் மற்றும் கூகுள் டிவி, கேம் மோட், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் அலெக்சா சப்போர்ட், கேம் மோட், அதிகபட்சம் 2 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் HDMI கனெக்டர்கள், eARC வசதி, HDMI 2.1, USB 2.0 போர்ட்கள், 3.5mm ஆடியோ ஜாக், வைபை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
பானசோனிக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் 32 இன்ச், 43 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் என்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இவற்றின் துவக்க விலை ரூ. 19 ஆயிரத்து 990 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 19 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றின் விற்பனை அருகாமையில் உள்ள பானசோனிக் விற்பனையாளர்கள், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் நடைபெறுகிறது.
latest news
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வாங்கிக் கொள்ள முடியும். இதுதவிர, அரசு சார்பில் அறிவிக்கப்பட்டும் சிறப்பு திட்டங்கள் மற்றும் திட்டப் பலன்களை பெறவும் ரேஷன் அட்டை மிகவும் அவசியமான ஆவணமாக உள்ளது.
இந்த நிலையில், ரேஷன் அட்டை வைத்திருப்போர் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை இணைக்க வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்றுவகை ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. லைட் கிரீன் ரேஷன் அட்டை வைத்திருப்போர் அரிசி மற்றும் இதர பொருட்களை அருகாமையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
அநந்யோதயா அன்ன யோஜனா கார்டு மற்றும் காக்கி நிற கார்டு காவல் துறையினருக்காக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வெள்ளை கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 கிலோ வரை சர்க்கரை கூடுதலாக வழங்கப்படுகிறது.
தற்போது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அத்துடன் தங்களது மொபைல் நம்பரை ஆன்லைன் மூலம் இணைத்துக் கொள்ளும் வழிமுறை நடைமுறையில் உள்ளது. ஆன்லைனில், இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
தமிழக அரசின் tnpds.gov.in என்ற வலைதளம் சென்று மொபைல் நம்பரை ரேஷன் அட்டையுடன் பதிவு செய்து கொள்ளலாம். இதுதவிர 1967 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு மொபைல் நம்பரை மாற்றுவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் மற்றும் மொபைல் வழியே மொபைல் நம்பரை இணைக்க முடியாதவர்கள் அருகில் உள்ள தாலுகா அலுவலகம் சென்று ரேஷன் கார்டு உதவி மையங்களில் நேரடியாக மொபைல் நம்பர் இணைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளலாம். இதற்கு குடும்ப தலைவரின் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை உடன் எடுத்து செல்வது அவசியம் ஆகும்.
latest news
நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்துள்ளது. வட-கிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த திடீர் மழை தமிழக மக்களை ஆனந்தப்படுத்தியிருந்தது.
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நாளை வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை புதிதாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லியிருக்கிறது ஆராய்ச்சி மையம்.
வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது.
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு தென்-மேற்கு பருவமழையின் பொழிவு அதிகமாக இருந்த நிலையில், வட-கிழக்கு பருவ மழையை அதிகமாக எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் விவசாயிகள்.
latest news
பி.எஃப் பணத்தை எடுக்கப் போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப். தொகையை முன்கூட்டியே தனிப்பட்ட காரணங்களுக்காக எடுப்பவர்கள் இனி ரூ. 1 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அறிவித்து இருக்கிறது.
முன்னதாக ஊழியர்கள் தங்களது EPFO கணக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளும் தொகை ரூ. 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தத் தொகை இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இதுகுறித்து பேசும் போது, “EPFO பங்களிப்பாளராக இருப்பவர்கள், தங்களது குடும்பத்தில் ஏற்படும் அவசரநிலையை கருத்தில் கொண்டு முன்பை விட அதிக தொகையை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஒருமுறை எடுத்துக் கொள்ளும் பி.எஃப். தொகைக்கான வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
ஊழியர்கள் பி.எஃப். திட்டத்தில் பங்களிப்பாளராக இருக்கும் போது, ஒருமுறை பி.எஃப். திரும்பப் பெறப்படும். எனினும், சில வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுவதற்கான விதிகளில், தனிநபர் தனிப்பட்ட அவசர தேவைகளுக்கு பணத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கின்றன.
மேலும், புதிய பணியில் இணைந்த முதல் ஆறு மாதங்களுக்குள் பி.எஃப். பணத்தை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப அரசு சட்டத்தை எளிமையாக்கியுள்ளது என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
இது குறித்தும் பேசிய அவர், “முன்பு, நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பி.எஃப். பங்களிப்பாளர்கள் வேலையில் இணைந்த முதல் ஆறு மாதங்களில் கூட பி.எஃப். பணத்தை திரும்பப் பெற முடியும். அது அவர்களின் பணம்,” என்று கூறினார்.
Cricket
தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.
latest news
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து நவராத்திரி விரத்தை கடைபிடிப்பவர்களும் இருந்து வருகிறார்கள். தமிழகத்தில் தசரா பண்டிகை துவங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற குலசேகரப்பட்டிணம் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது நவராத்திரி விழா. குலசேகரப்படடிணம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் தசரா பண்டிகை கொண்டாட்டங்களும், நவராத்திரி விரதமும் உலகப் பிரசித்தி பெற்றது.
இந்த நாட்களில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு விரதமிருந்தும், வேடங்கள் அணிந்தும் வந்து முத்தாரம்மனை வழிபட்டுச் செல்வார்கள்.
மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இக்கோவின் தசரா கொண்டாட்டங்கள் அதிகமாக உற்று நோக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு அம்மனுக்குகாப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோயிலுக்கே வந்தடைந்தது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்று அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டிணத்தில் குவிந்திருந்தனர். கொடி ஏற்றம் நடத்தப்பட்ட பிறகு பக்தர்களுக்கு காப்பு கட்டி விடப்பட்டது.
இன்று இரவு துர்க்கை அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி வலம் வரும் வைபவம் நடை பெற உள்ளது. குலசேகரப்பட்டிண தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது.
10-ம் நாள் திருவிழாவின் போது இரவு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்றைய தினம் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
-
Cricket1 day ago
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
-
Cricket1 day ago
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
-
Cricket1 day ago
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
-
Finance1 day ago
ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…
-
india23 hours ago
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
-
Cricket5 hours ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
latest news3 hours ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
Cricket1 day ago
92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!