Connect with us

tech news

9 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் ரீசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்

Published

on

ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு மலிவு விலையில் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் விசேஷ அம்சம் இது அன்லிமிட்டெட் இண்டர்நெட் தவிர வேறு எந்த பலன்களையும் வழங்கவில்லை என்பது தான்.

இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. பயனர்கள் ஏர்டெல் ரூ. 9 விலை கொண்ட பிரீபெயிட் சலுகையை அந்நிறுவன வலைதளத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அப்படி இந்த சலுகையில் என்ன பலன்கள் வழங்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.

ஏர்டெல் ரூ. 9 சலுகை பலன்கள்:

  • ரூ. 9 ஏர்டெல் பிரீபெயிட் ரீசார்ஜ் அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.
  • இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்-இன் வேலிடிட்டி ஒரு மணி நேரத்திற்கானது ஆகும்.
  • ரீசார்ஜ் செய்ததில் இருந்து 60 நிமிடங்களுக்கு வரம்பற்ற இண்டர்நெட் பயன்படுத்தலாம்.

எனினும், பயனர்கள் அதிவேக இணைய வசதியை ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 10GB வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக சரிந்துவிடும்.

ஏற்கனவே ரீசார்ஜ் செய்த சலுகையில் டேட்டா பற்றாகுறை ஏற்படும் போதோ அல்லது, அவசர டவுன்லோட் தேவைக்காக அதிக டேட்டா வேண்டும் என்றாலோ ஏர்டெல் ரூ. 9 சலுகையை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ரூ. 129 விலையில் வழங்கும் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையில் 10GB டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது.

google news

latest news

ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?

Published

on

இந்தியாவில் அரசு சார்பில் ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் மிகமுக்கிய திட்டங்களில் ஒன்றாக ரேஷன் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலக்கட்டத்தில், இந்தத் திட்டத்தில் பொது மக்களுக்கு பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டன,

மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதோடு, அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறவும் ரேஷன் அட்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரேஷன் அட்டை இல்லாதவர்கள் அரசு திட்டங்களில் பயன்பெற முடியாது. ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. சரிபார்ப்பை முடித்த வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தான் ரேஷன் திட்ட பலன்கள் கிடைக்கும். இதற்காக ரேஷன் கார்டில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (செப்டம்பர் 30) நிறைவடைந்தது.

ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. அப்டேட் செய்யதாவர்களுக்கு ரேஷன் திட்ட பலன்கள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்றுடன் இதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், இவ்வாறு செய்ய தவறியவர்களுக்கு ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனினும், அரசு தரப்பில் பொது மக்கள் ரேஷன் கார்டுடன் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொது மக்கள் கவலையின்றி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் ரேஷன் அட்டையில் கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்து கொள்ளலாம். மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் எவ்வித தடையும் இன்றி ரேஷன் திட்ட பலன்களை தொடர்ந்து பெற முடியும்.

google news
Continue Reading

latest news

கொஞ்சம் முதலீடு, அதிக லாபம்.. எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..

Published

on

உலகளவில் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. மேலும், சமீப காலங்களில் நுகர்வோரும் அதிகளவு நிதி மேலாண்மை மற்றும் நிதித்துறை சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பொது மக்களில் பலர், தங்களது சொத்துக்களை சேகரிக்கும் விதம், அதில் இருந்து கிடைக்கும் லாபம் உள்ளிட்டவைகளில் சிறந்த திட்டங்களில் தேர்வு செய்ய தனி கவனம் செலுத்துகின்றனர்.

இந்த மாற்றம் காரணமாக பலத்தரப்பட்ட முதலீடு திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபம் பற்றியும் அறிந்து கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் பயனர்கள் ஏராளமான முதலீட்டு விருப்பங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்வதோடு தங்களது பொருளாதாரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த வரிசையில், எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய மற்றும் புதுமையான நிதி சார்ந்த சேவைகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இவற்றில் பலவகை ரிக்கரிங் டெபாசிட் மற்றும் SIP எனப்படும் சிஸ்டமடிக் இன்வஸ்ட்மென்ட் பிளான்களை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டு வருகிறது. இது குறித்த விவரங்களை எஸ்.பி.ஐ. வங்கியின் தலைவர் சி.எஸ். ஷெட்டி சமீபத்திய நேர்காணலில் தெரிவித்தார்.

“இன்றைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது முதலீடுகள் அனைத்தையும் அதிக ரிஸ்க் நிறைந்த முதலீட்டு திட்டங்ளில் முதலீடு செய்ய அதிகம் விரும்புவதில்லை. வங்கி சார்ந்த சேவைகள் எப்போதும் தொடர்ந்து வழங்கப்படும். இதனால், நாங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான புதிய சேவைகளை கொணடுவர முயற்சித்து வருகிறோம்.”

“எங்களிடம் அதற்கான திறன் கட்டாயம் உள்ளது. நாங்கள் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் கோடி நிகர லாபம் என்ற மைல்கல்லை அடையும் முதல் இந்திய நிறுவனமாக வர விரும்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக 2024 நிதியாண்டில் எஸ்.பி.ஐ. வங்கி ரூ. 61,077 கோடி நிகிர லாபம் எட்டியது. இதில் அந்நிறுவனம் 21.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. தனியார் துறையில் கடன் வழங்குவதில் எஸ்.பி.ஐ. முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் இதுவரை ரூ. 4 லட்சம் கோடி கடன் தொகையை வெளியில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

பிஎம் ஜெய் திட்டம்.. மோடிக்கு பறந்த கடிதம்.. முக்கிய ஹைலைட்ஸ்

Published

on

மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS) மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆகியவற்றின் கீழ், மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை கூடுதல் விருப்பமாக வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வெளியான தகவல்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கவுன்சில்) கூட்டு ஆலோசனை அமைப்பின் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியிடம் முறைப்படி இந்த திட்டத்தை அமல்படுத்த முன்மொழிந்துள்ளார்.

அதன்படி மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கலின் பங்களிப்பு சுகாதார திட்டம் போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து பயன்பெற்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பிரதான் மந்திரி ஆரோக்கிய யோஜ்னா நன்மைகளை மையம் விரிவுபடுத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நடவடிக்கையானது, கிட்டத்தட்ட 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அவர்களுக்கு ஒரு தனித்துவமான அட்டை மற்றும் கூடுதல் கவரேஜ் விருப்பங்களை தற்போதைய பயனாளிகளுக்கு வழங்குகிறது.

பயனாளிகள் தங்களுக்கு இருக்கும் பலன்கள் அல்லது PM-JAY ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். தனியார் மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட மூத்த குடிமக்கள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுத் திட்டத்தின் (ESIS) கீழ் வருபவர்களும் PM-JAY திட்டத்தின் பலன்களுக்குத் தகுதி பெற முடியும்.

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் (CPC) ஊதிய கணக்கீடு அடிப்படையில் பங்களிப்புத் தொகை ஒன்று முதல் ஐந்து நிலைகளில் ரூ. 30,000, ஏழு முதல் 11 நிலைகளில் ரூ. 78,000 மற்றும் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலைகளில் ரூ. 1,20,000 ஆகும்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிஸ்ரா எழுதியிருக்கும் கடிதத்தில், ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு CGHS நன்மைகளைப் பெறுவதற்கு ஒரு முறை பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டியிருக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சுமையை மேற்கோள் காட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும், மூத்த குடிமக்கள் CGHS மற்றும் AB PM-JAY இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்ய வைப்பது நியாயமற்றது என்றும் PM-JAY மூத்த குடிமக்களுக்கு அவர்களின் நிதி நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் உதவ உருவாக்கப்பட்டது என்று மிஸ்ரா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மிஸ்ரா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டும் என்றும், இதற்காக தேசிய கவுன்சிலான JCM-இன் ஊழியர்கள் தரப்புடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

google news
Continue Reading

latest news

வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!

Published

on

தமிழ்நாட்டில் நில உரிமையாளர்களுக்கு வருவாய் துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. பட்டா எனப்படும் இந்த ஆவணத்தில் குறிப்பிட்ட இடத்தின் சர்வே எண், நில உரிமையாளரின் பெயர், நிலத்தின் வகை, நிலம் எங்கு அமைந்துள்ளது உள்பட முக்கிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும்.

தமிழகத்தில் வருவாய் துறை சார்ந்த ஆவணங்களை பெற அதிக கால தாமதம் ஏற்டுவது, வருவாய் துறைக்கு மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சேவைகளும் தாமதமாகிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காணும் வகையில், வருவாய் துறை சார்ந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறும் போது, “தமிழ்நாடு அரசின் வருவாய் துறை இயக்குநரின் உத்தரவுப்படி வருவாய்த் துறை சார்ந்த பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். இதனை நிறைவேற்ற கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.”

“உத்தரவின் படி ஆன்லைனில் விண்ணப்பம் அப்லோடு செய்த நாளில் இருந்து சரியாக 15 நாட்களுக்குள் அது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, மக்களுக்கு ஆவணங்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவேளை காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு உரிய காரணம் மற்றும் அதற்கு தேவையான ஆவணங்களை இணைக்க வலியுறுத்த வேண்டும். இதன் காரணமாக வருவாய் துறை சார்ந்த பட்டா மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை 15 நாட்களுக்குள் செய்து முடிக்கலாம்,” என்று தெரிவித்தார்.

புதிய உத்தரவு காரணமாக வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் 26 வகையான ஆவணங்கள், சான்றிதழ்கள் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேணஅடும். இதனால், மக்களுக்கு வருவாய் துறை சார்ந்த ஆவணங்கள் எளிதில் கிடைப்பதோடு, உடனடி தீர்வும் கிடைக்கும்.

google news
Continue Reading

latest news

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

Published

on

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.

google news
Continue Reading

Trending