Connect with us

tech news

லட்சத்துக்கு ஆயிரம் ரூபாய்… வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள்…

Published

on

தொழில்நுட்பம் அதிக அளவில் வளர்ந்து இருக்கும் இந்த காலத்தில் கூட ஆன்லைன் மோசடி கும்பலை கண்டறிவது பெரிய அளவில் காவல்துறைக்கு சிக்கலாகவே இருக்கிறது. விஞ்ஞானம் வளர வளர அவர்களும் தங்களுக்குள் இருக்கும் டெக்னிக்கை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பெரிய பண மோசடி நடந்த வழக்கில் கோவா காவல்துறைக்கு அதிர்ச்சியான சம்பவம் காத்திருந்தது. முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் கிட்ட வங்கி கணக்கை சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரித்தது. அவர் கணக்கிலிருந்து பெரிய அளவில் பணம் பரிமாறப்பட்டிருந்ததை குறித்து அவரிடம் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்தார்.

ஆனால் அந்த பரிமாற்றத்திற்கு அவர் சொன்ன காரணம் தான் காவல்துறையே மிரள வைத்திருக்கிறது. வேலையில்லாமல் நிதி சிக்கலில் இருக்கும் இளைஞர்களுக்கு வலை வீசும் இத்தகைய கும்பல் அவர்களின் வங்கி கணக்கை சில நாட்களுக்கோ, மணி நேரங்களுக்கோ வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் விஷயம் வெளியாகி இருக்கிறது. அவர்கள் வங்கி கணக்கிற்கு மாறும் பணத்தில் லட்சத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகை வாங்கிக் கொள்கின்றனர்.

தற்போது இத்தகைய மோசடி அதிகரித்து வருகிறது. சாதாரண இளைஞரின் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் மோசடி கும்பல் குறித்த மற்ற தகவல்கள் சைபர் கிரைம் காவல்துறையால் கண்டறிய முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. பொதுமக்கள் இத்தகைய விஷயங்களில் மேலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் காவல்துறை தரப்பிலிருந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…

google news

latest news

விரைவில் அமைச்சரவை கூட்டம்.. அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்.. புது அப்டேட்

Published

on

இந்தியாவில் பல லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அகவிலைப்படி உயர்வில் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில், விரைவில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும், ஒரிரு வாரங்களில் கூடும் மத்திய அமைச்சரவையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில், ஏழாவது ஊதியக்குழுவின்படி டிஏ, டிஆற் அதிகரிப்பது பற்றி முடிவு எடுக்கப்படலாம். ஒருவேளை அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டம் நடந்தால், நவராத்திரி நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி செய்தி வந்து சேரும்.

ஒருவேளை தாமதமாகும் பட்சத்தில் கூட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வந்துவிடும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொழில்துறை தொழிலாளர்களின் நுகர்வோர் விலை குறியீட்டின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஜூலை 2024-க்கான டிஏ மூன்று முதல் நான்கு சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை 53 முதல் 54 சதவீதமாக உயரும். அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியானாலும், ஜூலை மாதம் துவங்கி டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சேர்த்தே வழங்கப்படும்.

google news
Continue Reading

latest news

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

Published

on

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும். தற்போது இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை சுமார் 800 ரூபாயில் துவங்குகிறது.

தொடர்ச்சியாக கியாஸ் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு வருவதால், ஏழை எளியோரால் கியாஸ் வாங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. மேலும், பலர் கியாஸ் விலை உயர்வு காரணமாக மின்சார அடுப்பு, இதர மாற்று எரிசக்தியை சமையல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

இந்த நிலையில், ரூ. 500-க்கும் குறைந்த விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? நாட்டில் மெல்ல பயன்பாட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் புதிய வகை சிலிண்டர் ரூ. 500-க்கும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

குறைந்த விலையில் கிடைக்கும் இந்த சிலிண்டர்கள் ‘கம்போசிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. சாதாரண சமையல் கியாஸ் சிலிண்டர் எடை 14.2 கிலோ எடை கொண்டிருக்கும் நிலையில், கம்போசிட் சிலிண்டர்களின் எடை 10 கிலோவாக இருக்கும். குறைந்த விலை காரணமாக இதன் எடை குறைவாக இருக்கிறது. மேலும், இந்த சிலிண்டர்கள் மிக பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன.

மேலும், இதன் வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை காரணமாக இவற்றை எளிதில் தூக்க முடியும். இந்த சிலிண்டரில் கியாஸ் எவ்வளவு மீதம் இருக்கிறது. எப்போது கியாஸ் தீர்ந்து போகும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். கியாஸ் சிலிண்டர் தீர்ந்து போனாலும், இவற்றை உடனே பெற்றுக் கொள்ள முடியும்.

google news
Continue Reading

latest news

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

Published

on

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இந்த விஷயத்தில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தியாவில் ரூ. 10,000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ரூ. 10,000 நோட்டுக்கள் நாட்டில் புழக்கத்தில் இருந்தது. 1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன் முதலில் ரூ. 10,000 நோட்டை புழக்கத்திற்கு விட்டது. அன்றைய காலக்கட்டத்தில் புழக்கத்தில் விடப்பட்ட மிகப்பெரிய ரூபாய் நோட்டாக அது இருந்தது.

ரூ. 10,000 நோட்டு வியாபாரிகள் மற்றும் வர்த்தகம் செய்வோர் அதிக தொகை கொண்ட பரிவர்த்தனைகளை செய்வதற்காக கொண்டுவரப்பட்டது. இந்த நோட்டுக்களை ஏழை எளியோர் பலரும் பார்த்திருக்க வாய்ப்புகள் குறைவு ஆகும். இந்த நோட்டுக்களை பெரிய அளவில் வியாபாரம் செய்து வந்த சிலர் மத்தியிலேயே புழக்கத்தில் இருந்தது.

எனினும், 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரிடிஷ் அரசாங்கம் ரூ. 10,000 நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து உத்தரவிட்டது. அன்றைய காலக்கட்டத்தில் கருப்பு பணம் அதிகளவில் புழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கையை அன்றைய பிரிடிஷ் அரசு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு 1954 ஆம் ஆண்டு ரூ. 10,000 நோட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது. இத்துடன் ரூ. 5000 நோட்டும் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், 1978 ஆம் ஆண்டு இந்திய அரசு ரூ. 10,000 மற்றும் ரூ. 5000 நோட்டுக்களை மீண்டும் மதிப்பிழக்க செய்தது.

google news
Continue Reading

latest news

தேதி குறிச்சிக்கோங்க.. வங்கிக் கணக்கில் ரூ. 2000 வரப்போகுது..!

Published

on

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு வழங்குகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ரூ. 2000 வீதம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுக்க அதிகபட்சம் 2 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.

விவசாயிகள் இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதி இருப்பதையும், ஏற்கனவே திட்டத்தில் இணைந்திருப்பதை கீழே கொடுக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ள முடியும்..

பிஎம் கிசான் வலைதளம் செல்ல வேண்டும்.

வலைப்பக்கத்தில் பயன்பெறுவோர் பட்டியலை (Beneficiary List) இயக்கலாம்.

இனி மாநிலம், மாவட்டம், மற்றும் முகவரியை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியில் அறிக்கையை வழங்கக் கோரும் (Get Report) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பெயர் இடம்பெற்று இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு: வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கில் பயனாளிகள் பட்டியல் பஞ்சாயத்து அலவலகங்களிலும் ஒட்டப்படுகிறது.

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 ஆவது தவணை கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ரூ. 2000 பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்திய பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றதும் பிரதமர் மோடி இந்த தவணையை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

latest news

வட்டியே இல்ல.. பெண்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்கும் வேற லெவல் அரசு திட்டம்

Published

on

ஆண்களுக்கு பெண்கள் குறைந்தவர்கள் இல்லை என்ற பேச்சு எப்போதோ காலம்கடந்துவிட்டது. இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் பலதுறைகளில் சாதனை படைத்து, கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஏராளமான திட்டங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்றன.

அந்த வகையில், மத்திய அரசு துவங்கி, செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்று உத்யோகினி. இந்த திட்டம் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு ரூ. 3,00,000 வரையிலான கடன் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகைக்கு பெண்கள் வட்டி ஏதும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேலும், கடன் தொகையை அதிகபட்சம் 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

உத்யோகினி திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியானவர்கள் யார் யார்?

  • உத்யோகினி திட்டத்தில் பயன்பெறுபவர் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • கடன் பெறும் பெண்ணின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 1,50,000 மற்றும் அதைவிட குறைவாக இருக்க வேண்டும். விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இந்த கட்டுப்பாட்டில் விலக்கு உள்ளது.
  • கடன் பெறும் பெண்ணின் வயது 18 முதல் 55 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • உத்யோகினி திட்டத்தில் கடன் பெறுவோர் அதற்கு முன் நிதி நிறுவன கடன் பாக்கி வைத்திருத்தல், கடன் செலுத்த தவறி இருத்தல் கூடாது.

உத்யோகினி திட்டத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

சுயதொழில் தொடங்க விரும்பும் பெண்கள் அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். விண்ணப்பங்கள் துணை இயக்குநர் / CDPO அலுவலகங்கள் மற்றும் கடன் வழங்கும் வங்கிகளின் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து அருகாமையில் உள்ள வங்கியில் சமர்பிக்க வேண்டும். இனி விண்ணப்பம், ஆவணங்கள் சரியாக இருப்பின் குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் வழங்கும் நடைமுறை துவங்கப்படும்.

கடன் கோரும் பெண் சமர்பிக்கும் விண்ணப்பப்படிவம் மற்றும் உரிய ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை வங்கி அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். ஒருவேளை அனைத்தும் சரியாக இருப்பின், கடன் வழங்க நிதி ஒதுக்குமாறு வங்கி சார்பில் கார்ப்பரேஷனுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்படும். இதன் பிறகு குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு கடன் தொகை விடுவிக்கப்படும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், விண்ணப்பதாரரின் வங்கி கணக்கிற்கே நேரடியாக கடன் தொகை செலுத்தப்பட்டு விடும். இதை கொண்டு விண்ணப்பதாரர் வியாபாரத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இதர செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

google news
Continue Reading

Trending