Cricket
மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறை.. மாஸ் காட்டிய ஷஃபாலி வெர்மா
![Shafali Verma Pic - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/06/Shafali-Verma-Pic.png)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷஃபாலி வெர்மா. இவர் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷஃபாலி இந்த சாதனையை படைத்தார்.
இன்றைய (ஜூன் 28) ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி 194 பந்துகளில் இரட்டை சதம் விளாசினார். இதுதவிர இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ்-க்கு அடுத்தப்படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த சாதனை கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
முன்னதாக மித்தாலி ராஜ் 407 பந்துகளை எதிர்கண்டு 214 ரன்களை குவித்தார். இந்த சாதனையை 2022 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மித்தாலி ராஜ் படைத்தார். இன்றைய போட்டியில் டெஸ்ட் போட்டியில் அதிவேக இரட்டை சதம் அடித்த ஷஃபாலி வெர்மா 23 பவுண்டரிகளையும், 6 சிக்சர்களையும் விளாசினார்.
தென் ஆப்பிரிக்கா வீரர் டெல்மி டக்கர் வீசிய ஓவரை எதிர்கொண்ட ஷஃபாலி வெர்மா அடுத்தடுத்த சிக்சர்கள் மற்றும் சிங்கில் அடித்து இரட்டை சதத்தை கடந்தார். 197 பந்துகளை எதிர்கொண்ட ஷஃபாலி வெர்மா 205 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் களத்தில் இருந்து வெளியேறினார்.
இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 149 ரன்களை விளாசினார். இதில் 27 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 52 ஓவர்களிலேயே 292 ரன்கள் என்ற வலுவான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக் கொண்டது.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் ரிச்சா கோஷ் முறையே 42 மற்றும் 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளையும், டி கிலெர்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.
![](https://info.cinereporters.com/wp-content/uploads/2023/05/info-4.png)
Cricket
அந்த ஏழு நொடிகளை மறக்கவே மாட்டேன்.. சூப்பர் கேட்ச் பிடித்த சூர்யகுமார் யாதவ்
![Suryakumar Yadav Catch speech - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/Suryakumar-Yadav-Catch-speech.jpg)
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகவும், போட்டியை மாற்றி அமைத்த தருணமாகவும் அமைந்தது, சூர்யகுமார் யாதவ் எல்லைக் கோட்டில் பிடித்த கேட்ச் என்று கூறலாம்.
இந்த கேட்ச் போட்டியின் நிலைமையை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றியது. இதன் காரணமாக இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. போட்டிக்கு பிறகு, இந்த கேட்ச் பல்வேறு சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. இந்த நிலையில், இறுதிப் போட்டியில் பிடித்த கேட்ச் குறித்து சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது, போட்டியின் அந்த சூழலில் நான் ஓட துவங்கும் போது கேட்ச் பிடிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. என் முழு பலத்தையும் கால்களுக்கு செலுத்தி, முடிந்தவரை பவுண்டரியை தடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். அதன்பிறகு, பந்தை களத்திற்குள் தள்ளிவிட்டு, அணிக்காக இரண்டு, மூன்று ரன்களை சேமிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
பந்தை அடையும் போது, அது என் கைகளுக்கு வந்துவிட்டது. அப்போது அதனை கேட்ச் ஆக மாற்றி, பந்தை மீண்டும் களத்திற்குள் வீச முடிவு செய்தேன். பிறகு களத்திற்கு வெளியே சென்று, மீண்டும் உள்ளே வந்து கேட்ச்-ஐ முடிக்க முடியும் என்று நம்பினேன்.
இந்த முடிவை எடுப்பதற்கு எனக்கு 5 முதல் 7 நொடிகள் வரை நேரம் இருந்தது. இந்த 7 நொடிகளை என் வாழ்நாள் முழுக்க நான் மறக்கவே மாட்டேன். நான் அப்போது எடுத்த முடிவு எங்களுக்கு சாதகமாக மாறியது, என்று தெரிவித்தார்.
Cricket
ஜூலை 4, மாலை 5 மணி.. எல்லாரும் வாங்க.. ஒன்றாக கொண்டாடுவோம்.. ரோகித் சர்மா
![Rohit Sharma - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/Rohit-Sharma.jpg)
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் ரோடுஷோவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக மும்பையில் பிரத்யேக பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பேரணியில் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தின் மூலம் நகரில் வலம் வருவர்.
முன்னதாக நாளை அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தடையும் இந்திய வீரர்கள் அங்கேயே தங்கி இருந்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். சந்திப்பின் போது பிரதமர் மோடி இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழுவை பாராட்டுகிறார். பிறகு இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவினர் பிரதமர் மோடியுடன் காலை உணவில் கலந்து கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பிரத்யேக சார்டர் விமானம் மூலம் இந்திய வீரர்கள் மும்பைக்கு வரவுள்ளனர். பிறகு, இந்திய வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானத்திற்கு செல்கின்றனர். இதையொட்டி இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்த சிறப்பான தருணத்தை உங்கள் அனைவருடன் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம். இதனால் ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெரைன் டிரைவ் மற்றும் வான்கடேவில் வெற்றி பேரணியை கொண்டாடுவோம். உலகக் கோப்பை வீட்டிற்கு வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டி20 உலகக் கோப்பை வெற்றி பேரணியில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றியை கொண்டாடும் பேரணியில் எங்களுடன் இணையுங்கள். ஜூலை 4 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்து எங்களுடன் கொண்டாடுங்கள். இந்த தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், என்று குறிப்பிட்டிருந்தார்.
Cricket
உலகக் கோப்பையுடன் நாடு திரும்பும் இந்திய அணி – மோடியுடன் சந்திப்பு, ரோடுஷோ.. களைகட்டப்போகும் கொண்டாட்டம்
![Team India champions - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/Team-India-champions.jpg)
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி பார்படோஸில் இருந்து புறப்பட்டுள்ளது. சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்கள் நாளை காலை டெல்லி விமான நிலையம் வரவுள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு இந்திய அணியினர் தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். எனினும், பார்படோஸில் ஏற்பட்டு இருந்த புயல் காரணமாக இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் இந்திய ஊடகத்தினர் அடங்கிய குழு பார்படோஸில் இருந்து இந்தியா வருகிறது. இதற்காக ஏர் இந்தியாவின் விசேஷ சார்டர் விமானம் AIC24WC (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) விமானம் அந்நாட்டு உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் நாளை (வியாழன் கிழமை) காலை 6.20 மணி அளவில் டெல்லியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தரையிறங்கியதும், இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு நாளை காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய அணியை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இதை முடித்துக் கொண்டு டெல்லியில் இருந்து சார்டர் விமானம் மூலம் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு மும்பை வரவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்திற்கு செல்லும் இந்திய அணியினர் அங்கிருந்து திறந்தவெளி பேருந்து மூலம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகன பேரணி செல்வர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து வான்கடே மைதானத்தில் வைத்து மற்றொரு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் வழங்க உள்ளார். இதன் பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி20 உலகக் கோப்பை பிசிசிஐ தலைமையகத்தில் வைக்கப்பட்டு இருக்கும்.
Cricket
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
![hardik3 - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/hardik3.jpg)
கடந்த ஐபிஎல் தொடக்கத்தில் குஜராத்தில் இருந்து மும்பைக்கு வாங்கப்பட்டார் ஹர்திக் பாண்டியா. ஆனால் அவரை அணி நிர்வாகம் கேப்டனாக அறிவிக்க ரோஹித் ரசிகர்கள் கொதிதெழுந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸுக்கு மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா மீதும் துவேசங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.
இந்த நெகட்டிவிட்டியுடன் தான் ஹர்திக் பாண்டியா உலக கோப்பையில் களமிறங்கினார். எதையும் கணக்கில் கொள்ளாமல் தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காக அமைந்தார்.
இதையடுத்து, ஹார்திக் பாண்டியா டி20 ஆல் ரவுண்டர் ரேங்கிங்கில் இரண்டு இடம் முன்னேறி ஸ்ரீலங்காவின் வானிண்டு ஹசரங்காவுடன் முதல் இடத்தினை பிடித்து இருக்கிறார். இறுதிப்போட்டியில் க்ளாசன் மற்றும் மில்லர் விக்கெட்களை வீழ்த்தியது இதற்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.
இந்த பிரிவில் முதலிடத்தினை பிடித்த முதல் இந்திய வீரராக மாறி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. உலக கோப்பை தொடர் முழுவதும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் முக்கிய பங்காற்றி இருக்கிறார். 144 ரன்களை அடித்த ஹர்திக் பாண்டியா ஸ்ட்ரைக் ரேட்டாக 150 வைத்து இருக்கிறார். 11 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
இறுதி போட்டியில் 16 ரன்கள் எடுத்தால் தென்னாப்பிரிக்கா வெற்றி என்ற கடுமையான நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு வழி காட்டியவர் ஹர்திக். மார்கஸ் ஸ்டோனிஸ், சிக்கந்தர் ராசா, ஷகிப் அல் ஹசன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு இடம் முன்னேறி ஹர்திக் பாண்டியாவினை தொடர்ந்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Cricket
மலையாளி இருந்தா தான் ஐசிசி உலக கோப்பை கிடைக்குமா? இது என்னங்கப்பா புது லாஜிக்கா இருக்கு…
![sunil - Cinereporters Info](https://info.cinereporters.com/wp-content/uploads/2024/07/sunil.jpg)
11 வருட ஏக்கத்தினை போக்கும் பொருட்டு இந்தியா டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் ஆக மாறி இருக்கிறது. ஆனால் இந்த உலக கோப்பைக்கும் மற்ற கோப்பைகள் இந்தியாவுக்கு கிடைத்ததற்கும் ஒரு ஆச்சரிய தகவலும் தற்போது கசிந்துள்ளது.
17 வருடங்களுக்கு பின்னர் இந்தியாவின் முதல் டி20 உலக கோப்பை, 13 வருடங்களுக்கு பிறகு முதல் உலக கோப்பை சாம்பியன்ஷிப். தென்னாப்பிரிக்காவினை வீழ்த்தி வெற்றி காண்பதற்கு முன்னர் இந்தியாவிற்கு நிறைய ஏமாற்ற தருணங்கள் நடந்து இருக்கிறது.
2023ம் ஆண்டின் ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் தோல்வி, 2021 மற்றும் 2023ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வி, 2014 டி20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் தோல்வி, 2017ம் ஆண்டின் சாம்பியன்ஸ் டிராப்பி இறுதி போட்டியில் தோல்வி உள்ளிட்ட பல மிகப்பெரிய தோல்வி இந்திய அணிக்கு கிடைத்தது.
டி20 உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் கப்பை வென்ற முதல் அணியாக மாறி இருக்கிறது இந்தியா. இது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றாலும் சில ஆச்சரிய விஷயங்களும் இந்த வெற்றிக்கு பின்னால் இருக்கிறது. அதாவது இந்தியா இதுவரை வென்ற எல்லா உலக கோப்பை டீமிலும் ஒரு கேரள வீரர் இருக்க வேண்டும்.
1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கப்பை வென்ற போது சுனில் வால்சன். இடது கை வேகப்பந்து வீச்சாளரான சுனில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. வேக பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணியின் இரண்டு வெற்றிகளான 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பைகளிலும் இருந்தார்.
2024 உலக கோப்பை டீமில் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் இருந்தாலும் அவரும் சுனில் மாதிரி ஒரு போட்டியில் கூட களமிறங்கவே இல்லை. இதை தவிர்த்து உலக கோப்பை தோல்வி கண்ட எந்த டீமில் மலையாளி ஒருவர் கூட இல்லை. இதனாலே இந்த கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் ரூ.1000 லஞ்சம்… வருவாய் ஆய்வாளரை தொக்காக தூக்கிய காவல்துறை…
-
Cricket1 day ago
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூர்யகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை – உண்மை இதுதான்!
-
india2 days ago
தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள்….? சுப்ரீம் கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!
-
latest news2 days ago
மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
-
tech news2 days ago
ஓவராகும் ஓடிடி மோகம்… சப்ஸ்கிரிப்ஷனில் பெத்த தொகையை சேமிக்க சூப்பர் டிப்ஸ்…
-
Cricket13 hours ago
என்னையவா கலாய்ச்சீங்க… டி20ல் முதல் இந்திய வீரராக ஹர்திக் பாண்டியா செய்த சாதனை…
-
Cricket2 days ago
உலகிலேயே அதிகம் பகிரப்பட்ட இன்ஸ்டா போஸ்ட்… இது கோலி கில்லா!..
-
tech news1 day ago
ரூ. 1000 கோடி பட்ஜெட்.. சென்னையில் கேப்ஜெமினியின் புது ஆஃபீஸ்
-
latest news20 hours ago
வார இறுதி நாட்கள்… தமிழக முழுவதும் 5-ம் தேதி முதல் சிறப்பு பேருந்து… வெளியான அறிவிப்பு…!