latest news
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. 5 நிமிடத்தில் காலியான டிக்கெட்டுகள்.. பயணிகள் ஏமாற்றம்..!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு அதிகளவு ரயில் பயணத்தை விரும்புவார்கள். ஏனென்றால் பஸ் கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் குறைவு என்பதாலும், குறித்த நேரத்திற்கு பயணம் என்பதாலும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஆசைப்படுவார்கள். அவர்கள் பண்டிகைக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 28, 29, 30 தேதிகளில் சொந்த ஊர் செல்வதற்கு திட்டமிடுவார்கள் என்பதால் ரயில்களில் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருக்கின்றது. அதன்படி பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அக்டோபர் 29ஆம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு திங்கட்கிழமை காலை தொடங்கி விரைவாக விற்றுதீர்ந்து விட்டது.
இந்நிலையில் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் 5 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகிவிட்டன. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தன. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், பொதிகை விரைவு ரயில் போன்றவற்றில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் இரண்டு நிமிடத்திலேயே முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோபர் 31ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
india
மளமளவென சரிந்த 6 மாடி கட்டிடம்… பலர் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்…!
குஜராத்தில் ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் சச்சின் பாலி என்ற கிராமத்தில் 6 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. இந்த கட்டிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
மேலும் அந்த கட்டிடத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறும்படி சூரத் நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுக்குள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கிய இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
இடிப்பாடுகளில் இருந்து மீட்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இந்த கட்டிடம் கட்டப்பட்ட ஆறு ஆண்டுகளில் சிதைவடைந்து விட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
latest news
காலால் மிதிச்சு தயாரிக்கும் ஒயின்… இது இவ்வளவு காஸ்டிலியா…? விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
மிகப்பெரிய மாடல் கால்களால் மிதித்து தயாரிக்கப்படும் ஒயின் விலை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உலகம் எங்கும் மது பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பானமாக இருப்பது ஒயின். மது அருந்துபவர்கள் ஒயின் சுவைக்காக எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒயின் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இங்கிலாந்தை சேர்ந்தவர் எமிலி ரேஸ்.
30 வயதான இவர் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால் செய்யப்பட்ட ஒயினை பலரும் விரும்பி சாப்பிடுவதாக கூறியிருக்கின்றார். எமிலி கால் மாடலாக புகழ்பெற்றவர், இவர் தனது வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதிலிருந்து ஒயினை தயாரிக்கின்றார். மேலும் அதனை ஒரு ஒயின் பிராண்டாக ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்று பெயரிட்டு இருக்கின்றார்.
இந்நிலையில் அவர் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகம் செய்தார். தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால் தயாரிக்கப்படும் அந்த ஒயின் பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் என்று தெரிவித்துள்ளார். அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 10,662 ரூபாய் ஆகும். ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் சிறிய பகுதி உள்ளது. அதைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்து இருக்கின்றார்.
latest news
ஆடு நனையுதுன்னு ஓநாய் அழ வேண்டாம்… அண்ணாமலை அனுதாபம் எங்களுக்கு தேவையில்லை… ஆர்பி உதயகுமார் பதிலடி…
அதிமுக கட்சிக்கு அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் எப்போதும் தேவைப்படாது என்று ஆர்பி உதயகுமார் கூறி இருக்கின்றார். இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் அண்ணாமலை பேசியதற்கு பதில் அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகரீகம் இல்லாத அரசியல் பண்பாட்டை விதைத்து வருகிறார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை. அதிமுகவை பற்றி எங்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகின்றது. அண்ணாமலை என்ன அதிமுக தொண்டரா? ஆடு நனைகிறது என்று ஓநாய் அழத் தேவையில்லை. அண்ணாமலை போன்றவரின் அனுதாபம் அதிமுகவுக்கு எப்போதும் தேவை கிடையாது.
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பணத்தை வாரி இறைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் 2014, 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற வாக்கை விட வாரணாசியில் பிரதமர் மோடி குறைவான வாக்குகளை இந்த முறை பெற்றிருக்கின்றார். அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத அரைவேற்காடுத்தனமான பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி மூலமாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று அண்ணாமலை பேசியிருப்பதை வாபஸ் பெற வேண்டும். இனி அதிமுக தொண்டர்களை சீண்டி பார்க்க வேண்டாம். அவர் தன் கட்சியை மட்டும் வளர்த்தால் போதும். அதிமுகவை பற்றி எந்த கவலையும் அவருக்கு வேண்டாம். மீறி ஏதாவது பேசினால் அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன நடக்கும் என்று அண்ணாமலை தெரிந்து கொள்வார்” என பேசி இருந்தார்.
india
பக்தர்கள் கவனத்திற்கு.. இந்த 2 நாள் விஐபி தரிசனம் ரத்து.. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். பல்வேறு நாட்டில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வந்து செல்கிறார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் கட்டுக்கடங்காத அளவிற்கு பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
கூட்டமாக இருந்தாலும், வெயில் மழை என எதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது. வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்திருக்கிறார்கள். அதிலும் இன்று சனிக்கிழமை என்பதால் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கின்றது.
பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருப்பதியில் இரண்டு நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருக்கின்றது. ஆனி வார ஆஸ்தானத்தை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி மற்றும் 16ஆம் தேதி களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகின்றது.
மேலும் ஆனி வாரம் ஆஸ்தானம் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து ஒன்பதாம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதால் 12 மணிக்கு பிறகு தான் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 5 மணி நேரம் இடைவெளியில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
latest news
ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவு… ஆனால் அங்க இல்லையாம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அவரின் அலுவலகத்தில் புதைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் வழங்கியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்றிலிருந்து இந்த சம்பவத்தால் பல இடங்களில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரண நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து அவரின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ள தகவில் வெளியாகி இருக்கின்றது.
பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி இடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடர முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் உடல் கல்டி அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.
-
tech news11 hours ago
தமிழகத்தில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு – விரைவில் சென்னையில்..
-
latest news1 day ago
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை… வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்…!
-
World News2 days ago
2024 United Kingdom elections: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர்… யார் இந்த கீர் ஸ்டார்மர்?!
-
tech news2 days ago
இனி அந்த விலை கிடையாது.. சத்தமின்றி Netflix செய்த காரியம்..?
-
latest news1 day ago
Budget 2024… தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?!
-
india10 hours ago
திருமணமாகி இரண்டே வருடம்.. கணவன், மாமியார், நாத்தனார் என குடும்பமாக… ஐடி பெண் ஊழியர் எடுத்த விபரீத முடிவு..!
-
latest news1 day ago
சென்னையில் அதிர்ச்சி.. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை!
-
latest news1 day ago
my v3 ads: நீதிமன்றத்தில் சரணடைந்த சக்தி ஆனந்தன் – என்ன காரணம்?