Connect with us

latest news

90 மி.லி, பிளாஸ்டிக்கா இல்ல கண்ணாடி பாட்டிலா…? தமிழக அரசு பரிசீலினை… அவங்களே விட்டாலும் இவங்க விடமாட்டாங்க போலயே…

Published

on

90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் சாப்பிட்டு சுமார் 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசு விற்பனை செய்யும் மது பாட்டில்களை விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு வசதி இல்லாத ஏழை மக்கள் இது போன்ற குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயங்களை குடித்து வருகிறார்கள். இதனால் தமிழக அரசு குறைந்த விலையில் டெட்ரா பேக் என்ற மது விற்பனையை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள். ஏற்கனவே கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழகத்தில் கள்ளச்சாராயர் சாவு அரங்கேறியதை தொடர்ந்து 100 மில்லி லிட்டர் ரூபாய் 15 என்கின்ற மலிவு விலையில் மது விற்பனையை தொடங்கியது தமிழக அரசு. அதன் பின்னர் அந்த திட்டம் நாளடைவில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கின்றது.

தமிழகத்தில் பூரண மது விலக்கு  கொண்டு வர வேண்டும் என்பது பலரது விருப்பம். ஆனால் தற்போது அது இல்லை என்பதை சட்டசபையில் அமைச்சர் முத்துசாமி கூறிவிட்டார். இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறிய போது நமது பக்கத்து மாநிலங்களில் அதாவது கேரளா, கர்நாடகம், ஆந்திரா என அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனை நடைபெறும் போது நாம் மட்டும் எப்படி பற்றி கொள்ளாத கற்பூரமாக இருக்க முடியும் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பார்க்கும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே ஏழை மக்கள் கள்ளச்சாராயம் வாங்குவதற்கு பதில் குறைந்த விலையில் மது பானங்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் 90 மில்லி லிட்டர் மது விற்பனையை தொடங்க உள்ள நிலையில், அதனை கண்ணாடி பாட்டிலில் அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யலாமா என்று பரிசீலித்து வருகின்றது. கடைசியில் பிளாஸ்டிக் பாட்டில் தான் சிறந்த முறை என்பது தெரியவந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்த பரிசீலனை ஆரம்ப கட்டத்தில் தான் இருப்பதாகவும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

google news

latest news

பாஜக தமிழிசைக்கு சவால்…தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கியுள்ள நடிகர்…

Published

on

vijay

நடிகர் விஜய் தனது அறுபத்தி ஒன்பதாவது படத்தின்றகான அறிவிப்பை வெளியிட்டு , பட ஷூட்டிங்கிற்கான பூஜைகள் நேற்று சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதுவே விஜயின் கடைசி திரைப்படமாக இருக்கும் என நடிகர் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜயின் சமகால திரைப்பட போட்டியாளராக கருதப்படும் அஜீத்தை வைத்து “நேர் கொண்ட பார்வை”, “துணிவு” படங்களை இயக்கிய ஹெச்.வினோத், விஜயின் 69வது படத்தை இயக்க உள்ளார்.

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அன்மையில் துவங்கினார். கட்சி கொடி வெளியிடப்பட்டிருந்த நிலையில் முதல் அரசியல் மாநாட்டிற்கான வேலைகள தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.

விஜய்யின் 69வது பட பூஜை நடைபெறுவதற்கு முன்னர் மாநாட்டிற்கான கால்கோள் விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிக்கையின் மூலம் அறிவுரை வழங்கியிருந்தார்.

Balaji tamilisai

Balaji tamilisai

நடிகர் விஜயுடன் படங்களில் நடித்திருந்தவர் நடிகர் ‘தாடி’பாலாஜி. இவர் இப்போது விஜயுடன் இணைந்து அரசியல் தனது தீவிர செயல்பாடுகளை மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடந்த சிறப்பு பூஜையில் பங்கெடுத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்திருந்தார் நடிகர் ‘தாடி’ பாலாஜி. அப்போது தனது நண்பரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தரப்பிலிருந்து அழைப்பு வந்ததாகவும், மாநாட்டு வேலைகளை தீவிரமாக கவனித்து விஜய் சொல்லியதாக தன்னிடம் தெரிவிக்கப்படதாகவும் சொன்னார்.

விஜய் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருந்த கருத்து குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்தார் நடிகர் ‘தாடி’பாலாஜி. மாநாடு முடியட்டும் அதன் பின்னர் தலைவர் விஜயை பற்றி தமிழிசையை பேசச் சொல்லுங்கள் என சவால் விடுத்துள்ளார், நடிகர் தாடி பாலாஜியை தொடர்ந்து தமிழ் சினிமா நடிகர், நடிகைகள் பலரும் விஜய் கட்சியில் மாநாட்டிற்கு முன்னதாக தங்களை இணைத்துக் கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

google news
Continue Reading

latest news

புரட்டாசி சனிக்கிழமை…பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்…

Published

on

தினசரி கோவில்களுக்கு செல்லும் பழக்கம் பலரிடம் இருந்து வந்தாலும், முக்கிய நாட்கள், பண்டிகை தினங்கள் அன்று இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவதும் அளித்து அன்றைய தினத்தில் சாமி தரிசெய்து தங்களது பிரார்த்தனைகளை வைத்தும், நேர்த்திக் கடகளை செலுத்தி வருபவர்களும் இருந்து வருகிறார்கள்.

தமிழ மாதங்களில் சில குறிப்பிட்ட சில தெய்வங்களை வணங்கும் மாதங்களாகவும் இருந்து வருகிறது. ஆடி மாதம் என்றால் அம்மன் கோவில்களில் அதிகமான பக்தர்கள் காணப்படுவார்கள். அம்மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுபவைகளாக அமைந்து வருகிறது.

அதிலும் பெண்கள் அதிகமானோர் ஆடி மாதத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை வழிபாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள்.

Lord Perumal

Lord Perumal

நவராத்திரி விரதம் பெரும்பாலும் புரட்டாசி மாதத்திலேயே வரும். இந்த நாட்களில் பகதர்கள்  மாலை அணிவித்து விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை முன்வைக்கவும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவும் கோவில்களுக்கு சென்று வந்த வண்ணம் இருப்பர்.

அதே போல இந்த குறிப்பிட்ட புரட்டாசி மாதம் பெருமாளை வழிபட உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் சனிக்கிழமை அதிக பிரசித்தி பெற்ற நாளாக இருக்கிறது பெருமாளை வழிபட நினைப்பவர்களுக்கு.

புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதே போல மார்கழி மாத்ததிலும் பெருமாளை வழிபடுவது அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று தமிழகத்தில் அமைந்திருக்கும் முக்கிய பெருமாள் கோவில்களில் பக்தர்கள் அதிகாலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

latest news

இந்த நாலு மாவட்டத்துக்கு கன மழை…வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை…

Published

on

Rain

தமிழகத்தில் வட-கிழக்கு பருவ மழை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் லேசானது வரையிலான மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

குமரிக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளைச் சார்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருந்தது.

RainFall

RainFall

இந்நிலையில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான மழை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.

அதன்படி தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று  மிகக் கனமழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் கனமழை முதல் மிதமானது வரையிலான மற்றும் லேசானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கை சொல்லியிருக்கிறது.

இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதே போல தமிழகத்தின் இதர மாவட்டங்களில் திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

வெப்ப சலனத்தின் காரணமாக சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. இதனால சென்னையின் ஒரு சில இடங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

google news
Continue Reading

latest news

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம்.. பதிவு செய்வது எப்படி?

Published

on

பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பபட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இந்த இன்டர்ன்ஷிப்கள் தலைசிறந்த பணியிட அனுபவத்தை வழங்கும் நோக்கில் வழங்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இந்தத் திட்டத்தை முடித்த பிறகு உடனடி வேலையில் சேர்வவதை எளிமையாக்குகிறது. தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இருந்து பயனடைய அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.

modi

இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பங்கேற்க கீழ்வரும் தகுதி இருப்பது அவசியம் ஆகும்..,

  • வயது வரம்பு: 21 முதல் 24 வயது வரை
  • முழுநேர வேலையில் ஈடுபடக் கூடாது
  • அரசு ஊழியர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தனிநபர்கள் தகுதியற்றவர்கள்
  • ஐஐடிகள், ஐஐஎம்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து பட்டதாரிகள் அல்லது CA அல்லது CMA போன்ற தகுதிகள் உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ITIகள்) மற்றும் கௌஷல் கேந்திரா (திறன் மையங்கள்) ஆகியவற்றில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாத உதவித்தொகையாக ரூ. 4,500-ஐ அரசிடமிருந்து பெற முடியும். இதோடு நிறுவனங்கள் சார்பில் கூடுதலாக ரூ. 500 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை சமூகப் பொறுப்பு (CSR) முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக வழங்கப்படும்.

மாதாந்திர உதவித்தொகை பெறுவது மட்டுமின்றி, விண்ணப்பதாரர்கள் திடீர் செலவுகளை ஈடுகட்ட ஒரு முறை மட்டும் ரூ. 6,000 நிதி உதவியைப் பெறலாம். பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் பயிற்சியாளர்கள் காப்பீடு செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதி செய்யும். இதோடு, பிரீமியம் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.

பதிவு செய்வது எப்படி?

  • அக்டோபர் 12 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.pminternship) பதிவு செய்ய வேண்டும்.
  • இதைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யும் பணி அக்டோபர் 27 ஆம் தேதி துவங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறும். இதன் பிறகு நவம்பர் 8 ஆம் தேதியில் இருந்து 15 ஆம் தேதிக்குள் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் இணைவதற்கான கடிதம் வழங்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் இணையும் முதற்கட்ட இன்டர்ன்கள் தங்களின் ஓராண்டு கால வேலைவாய்ப்பு பயிற்சியை டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்குவர்.
google news
Continue Reading

latest news

ஆன்லைனில் பாஸ்போர்ட் சேவைகளை இயக்குவதில் புது சிக்கல்.. காரணம் இதுதான்

Published

on

இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக இந்தியர்கள் பாஸ்போர்ட் பெற்று வருகின்றனர். இதற்காக பாஸ்போர்ட் சேவாக்க் இயக்கப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதிலும் உள்ளவர்கள் புதிய பாஸ்போர்ட் பெறவும், ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் அது சார்ந்த சேவைகளை பெற பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைனிலும் தங்களது தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவா ஆன்லைன் தளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சில நாட்களுக்கு அதற்கான வலைதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 4) 8 மணி துவங்கி அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவா வலைதள சேவைகள் பயன்பாட்டில் இருக்காது. இந்த தேதிகளில் பயனர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த சேவைகள், நேர்முக தேர்வுக்கு நேரம் பெறுவது போன்ற சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

“பாஸ்போர்ட் சேவா வலைதளம் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து அக்டோபர் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பாட்டில் இருக்காது,” என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வலைதளம் செயல்படாது என்பதால், பொது மக்கள் மட்டுமின்றி பாஸ்போர்ட் சேவா வலைதளத்தை வெளியுறவு விவகாரங்கள் துறை அதிகாரிகள், குடிவரவு பணியக அதிகாரிகள், காவல் துறையை சேர்ந்தவர்கள் என யாரும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

Trending