திருமணமான 6 மாதத்தில்… தூக்கில் தொங்கிய கர்ப்பிணிப் பெண்… விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்…!

0
103

திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியை சேர்ந்த அழகுவேல் என்பவரின் மகன் பிரதீஷ் குமார். இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தின் வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த கவியரசி என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கவியரசி பயோமெடிக்கல் படித்து இருக்கின்றார். தற்போது அவர் ஐந்து மாத கர்ப்பமாகவும் இருக்கின்றார்.

கவியரசிக்கும் , அவரது கணவர் வீட்டில் இருப்பவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டிருக்கின்றார். கவியரசி நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் வீட்டில் இருந்தவர்கள் கதவை தட்டிப் பார்த்தனர். கதவு திறக்கப்படாத காரணத்தினால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சேலையில் அவர் தூக்கில் தொங்கி இருந்தார்.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த கெங்கவல்லி போலீசார் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . ஆனால் அவர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கவியரசியின் தாயார் அருந்ததி காவல்துறையினிடம் எனது மகளிடம் பிரதீஷ்குமார் அவரது தாயார் மற்றும் நாத்தனார் 3 பேரும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்து இருக்கின்றார். ஆனால் நாங்கள் வரும்போது அவரது உடல் தரையில் இருந்தது. எனவே அவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். கவியரசி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலிஸ் சூப்பரென்ட் உறுதி அளித்த பிறகு அங்கிருந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here