job news
Recruitment: பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும்..! மத்திய அரசுத்துறையில் வேலை..!
சாகித்ய அகாடமி என்பது இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்தியாவின் முதன்மையான இலக்கிய நிறுவனம் அகாடமி விருது, பெல்லோஷிப்கள், மானியங்கள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் கண்காட்சிகள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை பாதுகாத்து ஊக்குவிக்கிறது.
இந்திய இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுடன் இலக்கிய பரிமாற்ற திட்டங்களையும் அகாடமி மேற்கொள்கிறது. தற்பொழுது, நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களை அகாடமி வரவேற்கிறது. மேலும் தகவல்களுக்கு https://www.sahitya-akademi.gov.in/ என்ற அதிகாரப்பூரவ இணையதளத்தை அணுகலாம்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை:
தற்பொழுது இந்நிறுவனத்தில் துணைச் செயலாளர் (பொது)(1), மூத்த கணக்காளர்(1), வெளியீட்டு உதவியாளர்(1), திட்ட உதவியாளர்(1), ஸ்டெனோகிராபர் கிரேடு-II (2), மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்(3) என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது.
விண்ணப்பதாரரின் வயது:
- துணை செயலாளர் (பொது) பணிக்கு விண்ணப்பிப்பவர் 50 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- மூத்த கணக்காளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 40 வயது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- வெளியீட்டு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- நிகழ்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- ஸ்டெனோகிராபர் கிரேடு-II பணிக்கு விண்ணப்பிப்பவர் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- பல்பணி ஊழியர் (மல்டி டாஸ்கிங்) பணிக்கு விண்ணப்பிப்பவர் 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி:
- துணைச் செயலாளர் (பொது) பணிக்கு, முதுகலை பட்டம் மற்றும் 5 ஆண்டுகள் துறை தொடர்புடைய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மூத்த கணக்காளர் பணிக்கு, வணிகத்தில் பட்டம் மற்றும் கணக்கியலில் 5 வருட அனுபவம் மற்றும் அரசாங்க விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றிய அறிவுத்திறன் இருக்க வேண்டும்.
- வெளியீட்டு உதவியாளர் பணிக்கு அச்சிடும் துறையில் பட்டம் மற்றும் டிப்ளமோ அல்லது அச்சகம் அல்லது பதிப்பகம் அல்லது புத்தக வெளியீட்டில் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனத்தில் 5 வருட அனுபவம். அச்சிடுதல் மற்றும் புத்தக வெளியீட்டின் பல்வேறு செயல்முறைகள் பற்றிய அறிவுத்திறன் போன்றவை இருக்க வேண்டும்.
- நிகழ்ச்சி உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் 5 வருட அனுபவம். கூட்டங்கள், மாநாடுகள் போன்றவற்றை ஒழுங்கமைக்கும் திறன். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் மற்றும் இலக்கியங்களைப் பற்றிய நல்ல அறிவுத்திறன் , இலக்கியப் பொருட்களைக் கையாளும் திறன். கணினி பயன்பாடுகளின் அடிப்படை அறிவுத்திறன் போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும்.
- ஸ்டெனோகிராஃபர் கிரேடு-II பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10+2 அல்லது அதற்கு சமமான தகுதி. சுருக்கெழுத்தில் வேகம் மற்றும் ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு செய்வதில் நல்ல வேகம். கணினி பயன்பாட்டில் நல்ல அறிவுத்திறன் மற்றும் ஸ்டெனோகிராஃபராக 1 வருட அனுபவம் ஆகியவற்றை கொண்டிருக்கவேண்டும்.
- பல்பணி ஊழியர் (மல்டி டாஸ்கிங்) பணிக்கு, அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐக்கு சமமான தேர்ச்சி மற்றும் ஒரு ஊழியர் பல வேலைகளைச் செய்யும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
வேலை இடங்கள்:
குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் புது தில்லி, பெங்களூரு, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சாகித்ய அகாடமி தலைமை அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
சம்பள விவரம்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.2,08,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் இது குறித்த விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு More Details க்குச் சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை & கடைசி தேதி:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட Application Form என்ற விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பப் படிவத்துடன், செயலர், சாகித்ய அகாடமி, ரவீந்திர பவன், 35 ஃபெரோஸ்ஷா சாலை, புது தில்லி-110001 என்ற முகவரிக்கு அனைத்து கல்வி ஆவணங்கள், அனுபவம் மற்றும் சாதி சான்றிதழ் போன்றவற்றின் நகல்களுடன் விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
- தபால் உறையில் தங்கள் விண்ணப்பிக்கும் (______ பதவிக்கான விண்ணப்பம்) என்று எழுதி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
- ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது கடைசி தேதி ஜூன் 12 வரை உள்ளது.
job news
ஸ்டேட் பேங்க்ல வேலை பார்க்க சான்ஸ்?…வெளியாகியுள்ள அறிவிப்பு…
படித்து முடித்த இளைஞர்களாக இருந்தாலும் சரி, படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களாகவே இருந்தாலும் அரசு மற்றும் அரசு சார்ந்த, பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவதையே அதிகம் விரும்புபவர்களாகவே இருந்து வருகிறார்கள். இது போன்ற வாய்ப்பு பற்றிய அறிவுப்புகள் எப்போது வரும் என காத்திருக்கும் படித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது போன்ற வாய்ப்புகள் வரும் போது அதனை எப்படி எதிர் கொள்வது என்பதனை உணர்ந்து அதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருபவர்களும் அதிகரித்தே வருகின்றனர்.
பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் டெக்னிக்கல் பிரிவில் காலியாக உள்ள என்னூறு இடங்களை (800) நிரப்புவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் தேர்வதற்கு குரிய விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டியம் இணைய தள முகவரியும் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கான கல்வித் தகுதியும், வயது வரம்பு குறித்த தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.டெக்., எம்.எஸ்.சி கல்வி கற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த பணிகளுக்கான ஊதியமாக ரூபாய் நாற்பத்தி எட்டு ஆயிரத்து நானூற்றி என்பது ரூபாய் (ரூ.48,480/-) முதல் தொன்னூற்றி மூனாயிரத்து தொல்லாயிரத்து அறுபது ரூபாய்(ரூ.93,960/-) எனவும் சொல்லப்படுகிறது.
இந்த பணிகள் தேர்வுக்கு sbi.co.in/web/careers என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவ்க்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வழங்க கடைசி தேதி குறித்தும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதமான அக்டோபர் மாதம் நான்காம் தேதியே கடைசி எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
job news
அரசு வங்கியில் அதிகாரி ஆகணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு அறிவிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் அன்ட் சிந்து பேங்க், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இண்டியா, பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், யு.சி.ஓ. பேங்க் உள்ளிட்ட தேசிய வங்கிகளுக்கான 4,465 அதிகாரி காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிபிஎஸ் நடத்தும் வங்கி பணிக்களுக்கான இத்தேர்வுக்கான ஆரம்ப நிலை தேர்வு அக்டோபர் மாதம் நடக்க இருக்கிறது. அதை தொடர்ந்து முதன்மை தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் 21ந் தேதி வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான முடிவுகள் டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடப்பட்டு பணி ஒதுக்கீடு ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்ச வயது வரம்பு 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வும், ஓபிசிக்கு 3 வருடங்கள் தளர்வும், எஸ்.சி, எஸ்.டிக்கு 5 வருடங்கள் தளர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.டி, எஸ்.சி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக 175 ரூபாயும், மற்ற பிரிவினருக்கு 850ரூபாயும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://www.ibps.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். நாடு முழுவதிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Cricket
சூர்யாவுக்கு சப்போட்டாக களமிறங்கிய அஜீத்!…இதுக்கு அவர் தகுதியானவர் தானாம்!…
இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையும், கனவுமாக இருந்து வந்தது உலகக்கோப்பையை வெல்வது. ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது.
இந்த தொடருக்கும் பின் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இருபது ஓவர் கிரிக்கெட் கோப்பையை வென்றுக் கொடுத்த கேப்டனுமான ரோஹித் சர்மா சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வினை அறிவித்ததால்.
இவரைப் போலவே இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராத் கோலி, ஆல் ரவுண்டர் ஜடஜாவும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரும், ஆல்-ரவுண்டருமான ஹார்திக பாண்டியா இருபது ஓவர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த தேர்வு குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரியும், இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டருமான அஜீத் அகார்க்கர் கேப்டன் பொறுப்பிற்கு சூர்ய குமார் யாதவ் முற்றிலும் தகுதியானவர் என்றார். அவருக்கு சிறந்த கிரிக்கெட் மூளை உள்ளது என்றார். அதோடு உலகிலேயே சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர், அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடக் கூடியவர். அவரிடம் அதிக திறன்கள் உள்ளன, ஆனால் அதை கண்டறிவது கடினமானவை என்றார்.
automobile
வண்டி வேணும்ன்னா மூனு மாசம் வெயிட் பண்ணுங்க!…பின்ன வோல்டு நம்பர் ஒன்னுன்னா சும்மாவா?…
உலகம் முழுவதும் உள்ள வாகனங்கள் பொதுவாக பெட்ரோல், டீசலாலே நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. அதன் பின்னர் கேஸ்கள் மூலம் இவை இயக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோலே எரி பொருளாக நிரப்பபட்டு அதன் மூலமே இயக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான தேவைகள் அதிகரிக்கத் துவங்கியது. இதிலிருந்து எடுக்கப்படும் எரிபொருட்களே மனிதர்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரத்துவங்கியதால், சார்ஜ் செய்து பேட்டரிகள் மூலம் இயங்கக்கூடிய வாகனங்கள் சந்தையில் அறிமுகமானது. இவற்றிற்கு அதிக வரவேற்பு உலக அளவில் கிடைத்து. இப்போது பஸ், கார், உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பேட்டரிகள் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனப் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது இந்தியாவின் டூவிலர் தயாரிப்பு முன்னணி நிறுவனமான பஜாஜ்.
சிஎன்ஜி (CNG) கேஸின் மூலம் இயக்கப்படக் கூடிய முதல் டூவீலர்களை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவின் பஜாஜ் நிறுவனம். ஃபிரீடம் என்ற பெயரில் 125 சிசி (CC)இஞ்சின், என்ஜிஓ 4 டிரம் (NGO 4 Drum), என்ஜிஓ 4 டிரம் எல்ஈடி(NGO 4 Drum LED), என்ஜிஓ டிஸ்க் எல்ஈடி டிஸ்க் எல்ஈடி (NGO 4 Disc LED) என்ற மூன்று மாடல்களில் விற்பனையாகி வருகிறது பஜாஜின் ஃபிரீடம்.
மும்பை, புனே, குஜராத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே கிடைத்து வரும் இந்த பைக்குகளை சொந்தமாக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
job news
மதுரையில் த.வே.க மாநாடு உறுதியா?!.. சமையல் கலைஞர் கொடுத்த பேட்டி!…
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. எனவே, அப்போது விஜய் எப்படியும் பின்னாளில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயும் அடிக்கடி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாகவும், தமிழக வெற்றிக் கழகம் என்பது தனது அரசியல் கட்சியின் பெயர் எனவும் அவர் கூறினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி களமிறங்கும் எனவும் கூறியிருக்கிறார்.
மேலும், பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோருக்கும், அதிக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்து வருகிறது.
விஜயின் அரசியல் மாநாடு மதுரையில் நடக்கவிருப்பது ஒரு சமையல் கலைஞர் மூலம் தெரியவந்திருக்கிறது. மாணவ, மாணவியர் சந்திப்பு விழாவுக்கு சமைக்கும் சமையல்காராரை செய்தி சேனல் ஒன்று பேட்டியெடுத்தபோது ‘ புதுச்சேரியில் ஒரு விழாவுக்க நாங்கள் உணவு சமைத்தோம். அது விஜய்க்கு பிடித்திருந்தது. அப்போதிலிருந்து விஜய் தொடர்பான விழாக்களுக்கு நாங்கள்தான் சமைத்து வருகிறோம். மதுரையில் நடக்கவுள்ள மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு சமைக்க வேண்டும் என எங்களிட்ம் கேட்டிருக்கிறார்கள். 350 பேர் இதற்காக வேலை செய்ய போகிறோம்’ என அவர் கூறியிருக்கிறார். எனவே, விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடப்பது உறுதியாகியிருக்கிறது.
-
Cricket1 day ago
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
-
latest news1 day ago
ஓட்டுநர் உரிமத்தில் மாற்றங்கள்.. ஆன்லைனிலேயே செய்யலாம்..
-
Cricket6 hours ago
INDvsBAN முதல் டி20-க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தயார் நிலையில் 2500 காவலர்கள்
-
latest news21 hours ago
2026ல் பாஜக ஆட்சி…திமுகவின் ஊழல்கள் வெளிவரும்…எச்.ராஜா உறுதி…
-
latest news20 hours ago
போஸ் கொடுத்த திருடன்…காட்டிக் கொடுத்த கேமரா…
-
latest news23 hours ago
வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி…வச்சு செய்யப்போகுதா மழை?…
-
Cricket1 day ago
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
-
latest news24 hours ago
பவன் கல்யாண் உதயநிதி இடையே உரசல்…சனாதனத்தை பற்றிய பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை…