டொயோட்டா கசூ (Gazoo) ரேசிங் தனது முதல் பேட்டரி ப்ரோடோடைப் சோதனையை துவங்கி இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் திட்டத்தில் டொயோட்டா நிறுவன தலைவர் அகியோ டொயோட்டா தனிப்பட்ட முறையில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இந்த கார் அதன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்று அகியோ டொயோடா ஒவ்வொரு கட்டத்திலும் உறுதிப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் நடைபெற்ற லி மேன்ஸ் 24 ஹவர்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அகியோ டொயோட்டா, புதிய ஸ்போர்ட்ஸ் கார் தற்போதைய கம்பஷன் என்ஜின் மாடல்களை போன்று ஓட்டுவதற்கு சிறப்பான மாடலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருந்தார். டொயோட்டா நிறுவனத்தின் GR86, GR சுப்ரா, GR யாரிஸ் மற்றும் GR கொரோலா போன்ற மாடல்கள் இந்த பிரிவில் மிகவும் பிரபலமானவை ஆகும்.
“இந்த காரின் ஆரம்பக்கட்டம், இதில் எந்த பவர்டிரெயின் உள்ளது என்பதில் இல்லை, எந்த பவர்டிரெயின் இருந்தாலும், ஓட்டும் போது அது எத்தகைய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதில் தான் உள்ளது. நாங்கள் உருவாக்கி வரும் GR பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்தை சமீபத்தில் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பை பெற்றேன்.”
“இது தற்போதைக்கு சந்தையில் அறிமுகமாகுமா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, ஆனால், இது போன்ற கார்களை உருவாக்குவதற்கு முக்கிய காரணம், இவற்றில் எத்தகைய பவர்டிரெயின் இருந்தாலும், இவற்றை ஓட்டும் போது இந்த கார்கள் எவ்வளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன என்பதில் தான் உள்ளது,” என அகியோ டொயோடா தெரிவித்தார்.
இந்த காரில் தற்போதைய கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் வழங்கப்படும் என்று டொயோட்டா தெரிவித்துள்ளது. அதன்படி இதில் கிளட்ச், கியர்பாக்ஸ் மற்றும் தற்போதைய என்ஜின்கள் வெளிப்படுத்தும் சத்தம் முதற்கொண் இடம்பெற்று இருக்கும்.
“நாங்கள் உருவாக்கி வரும் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனத்திற்கும் மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் உள்ள வித்தியாசம், GR BEV-யில் இருக்கும் போது பெட்ரோல், டீசல் வாசத்தை தவிர்த்து, என்ஜின் சத்தம் வரை நீங்கள் கேட்க முடியும். மேலும் இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் கிளட்ச் உள்ளது. இந்த கார் பற்றிய விவரம் அறியாதவர்களிடம், காரை ஓட்ட சொன்னால், அவர்களாலேயே எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது,” என்று அகியோ டொயோடா தெரிவித்து உள்ளார்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…