அனைத்து நிறுவனங்களும் தற்போது மின்சார கார்களை உருவாக்கத்தில் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அப்படி நிறுவனங்கள் உற்பத்தி செய்த வாகனங்களை போட்டி போட்டுக் கொண்டு சந்தைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஹூண்டாய் நிறுவனம் முன்னதாக இந்த வரிசையில் 2 கார்களை வைத்துள்ளது. கோனா மற்றும் அயானிக்-5 ஆகிய இரண்டு கார்களும் தற்போது சந்தையில் விற்பனையில் உள்ளது.
அறிமுகப்படுத்தியபடுத்திய நாள் முதல் இன்று வரை இதன் விலை அதிகமாக உள்ளது. இது மக்களிடையே கவனத்தை ஈர்க்க தவறியது. இதனால் ஹூண்டாய் தற்போது மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார கார்களை தயாரிக்க உள்ளது. அதற்கான முயற்சியில் தற்பொழுது பணி செய்து கொண்டு இருக்கிறது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் அதிக அளவு விற்கப்பட்டு வரும் க்ரிட்டாவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் மாதம் ஹூண்டாய் நிறுவனத்தால் க்ரிட்டா வை முதன்முதலாக சோதையின் போது சாலையில் காணப்பட்டது. அது தற்போது விற்பனையில் உள்ள காரை போலவே அடிப்பகுதியில் பேட்டரி பேக் உடன் இணைத்து காணப்பட்டது. சாலையின் சோதனையின் போது அந்த வாகனத்தில் புகை போக்குகளே இல்லாமல் பெட்ரோல் காரை போன்று எவ்வித சத்தமில்லாமலும் முழுவதுமாக பேட்டரியில் இயங்கும் காராக இருந்தது. வடிவமைப்பில் சிறிது கூட மாற்றம் இன்றி இப்பொழுது விற்பனையில் இருக்கும் அதே காரில் தான் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் வாகனம் அறிமுகப்படுத்தும் பொழுது அதன் உருவ அமைப்பில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இதன் வருகையை தற்போது விற்பனையில் இருக்கும் க்ரிட்டாவின் பேஸ்-லிப்ட் க்கு பின்பு இதனைப் பற்றிய க்ரிட்டா ஈ.வி பற்றி தகவலை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உள்ளமைப்பு அது நவீன தொழில்நுட்பத்துடன் வருகிறது. வேதத்தை கட்டுப்படுத்த அதில் மாறுபாடுகள் செய்து புதிய பிரேக்கிங் வசதியுடன் வருகிறது. முழுவதுமாக டிஜிட்டல் வடிவிலான கண்சோல், சூழ்நிலைக்கேற்ப வாகனத்தை ஓட்ட இயக்க முறைகள் கொண்டும் வருகிறது. இதனுடன் மிகப்பெரிய சன்ரூப் அம்சத்தையும் கொண்டுள்ளது.
இதன் அறிமுகம் எப்போது..?
க்ரிட்டா மின்சார வாகனம் தற்பொழுது அதனை முழுவதும் சோதிக்கும் வகையில் தான் உள்ளது . ஹூண்டாய் அதன் பேட்டரி மற்றும் மோட்டார்களை பல வித சோதனையின் அடிப்படையில் பரிசோதித்து வருகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்த உடன் கிரட்டா அடுத்த கட்ட நகர்வை பெறும். அதன் பின்பு 2025 ஆம் ஆண்டு இதனை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தற்போது உள்ள கோணா மற்றும் அயானிக்-5 கார்கள் மட்டும் சந்தையில் விற்பனையில் இருக்கும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…