Connect with us

automobile

எல்லாமே வித்துடிச்சி பாஸ்.. லம்போர்கினியின் வெறித்தனமான அப்டேட்.. அடுத்து என்ன?

Published

on

Lamborghini-Urus-Featured-Img

லம்போர்கினி நிறுவனத்தின் பியுர் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்ததாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹைப்ரிட் மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க லம்போர்கினி நிறுவனம் முடிவு செய்திருப்பதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Lamborghini-Urus-2

ஹூரகேன் மற்றும் உருஸ் மாடல்களுக்கான முன்பதிவுகள் முழுமை பெற்று விட்டன. இதன் மூலம் லம்போர்கினியின் பியுர் கம்பஷன் மாடலின் வாகன உற்பத்தி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது என்று லம்போர்கினி நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஸ்டீஃபன் வின்கில்மேன் தெரிவித்து இருக்கிறார்.

பெரும் முதலீடு :

2024 ஆண்டு, ஹைப்ரிட் மாடல்கள் பிரிவில் மட்டும் சுமார் 1.8 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய இருப்பதாக லம்போர்கினி் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின் நீட்சியாக இந்த தசாப்தத்தின் இறுதியில் லம்போர்கினி நிறுவனத்தின் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் திறன் கொண்ட வாகனம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Lamborghini-Urus-3

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் கம்பஷன் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு மாற்றாக பிளக்-இன் ஹைப்ரிட் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஹைப்ரிட் ரெவெல்டோ மாடல் 2025 இறுதியில் விற்றுத் தீர்ந்து விடும் என்று தான் எதிர்பார்ப்பதாக வின்கில்மேன் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு விற்பனையில் அமோக வளர்ச்சி பதிவான நிலையில், இந்த ஆண்டும் இதே நிலை தொடரும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இந்திய விற்பனை விவரம் :

லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு மட்டும் 92 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதில் 60:40 வீதம் உருஸ் மற்றும் சூப்பர்கார் மாடல்கள் இடம்பெற்று இருந்தன. இதன் மூலம் லம்போர்கினி நிறுவனம் விற்பனையில் 33 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்தது. இது தவிர இந்திய சந்தையில் லம்போர்கினி நிறுவனம் 400 யூனிட்கள் மைல்கல்லை கடந்த ஆண்டு எட்டியது.

Lamborghini-Urus-4

இந்திய சந்தையில் லம்போர்கினி மட்டுமின்றி மெர்சிடிஸ் பென்ஸ் வாகனங்கள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. டாப் என்ட் கார்களின் விற்பனை அதிகரிப்பது தற்போதைய டிரென்ட் ஆக இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

automobile

என்ன லைசன்ஸ் இல்லாமலே பைக் ஓட்டலாமா?..இது என்ன புதுசா இருக்கே…

Published

on

இந்தியாவில் நடக்க சாத்தியமே இல்லை என்று நினைத்த MotoGP, இந்த ஆண்டு MotoGP பாரத்  என்ற பெயரில் இந்தியாவில் நடைபெறவிருப்பது இந்திய வாகன பிரியர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது. MotoGP பாரத் தொடர் உத்திரபிரதேசத்தின், நொய்டாவில் உள்ள Buddh International Circuit- ஆல் நடத்தப்படுகிறது.

atom gp1 bike

MotoGP பாரத் பற்றிய விளம்பரங்கள் நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான வரவேற்புகளும் அதிகரித்தவண்ணமாக உள்ளது. இந்தியாவிலும் Racing culture பல முன்னேற்றம் கண்டுள்ளது. பலதரபட்ட மக்களிடையில் மோட்டார் ரேசிங்கின் ஆர்வம்  அதிகரித்தும் காணப்படுகிறது.

மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த மற்றும் தரமான வீரர்களை உருவாக்குவதையும் கருத்தில் கொண்டு, நமது கோயம்புத்தூரை சேர்ந்த CRA Motorsports, Atom GP1  race bike- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

Atom GP1 பைக்கானது 10 முதல் 17 வயதான ரேசிங்கில் ஆர்வமுள்ளவர்களுக்கானது. இந்த பைக்கானது பைக் வகைகளில் ‘mini GP motorcycle kit’ என்கிற புது வகையை உருவாக்கியுள்ளது. Atom GP1 பைக்கில்  5-ஸ்பீடு, 159.3சிசி சிங்கில் சிலிண்டர் பொறுத்தப்பட்டுள்ளது, 2-வால்வு கார்புரேட்டட் இஞ்ஜின் ஆகும். இது 15bhp power,13.85Nm torque வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த பைக்கில் USD front fork முன் பகுதியிலும், பின்பகுதிக்கு Mono shock absorber-ம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

atom GP1

12அங்குல அலாய் வீல்களை கொண்ட இந்த பைக்கில் TVS Remora tyre பொருத்தப்பட்டுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் இடம்பெற்றுள்ளது.என்னடா சின்ன பிள்ளைங்க லைசன்ஸ் இல்லாம பைக் ஓட்டமுடியுமானு நினைக்காதீங்க.

இந்த பைக் ரோட்டில் ஓட்டுவதற்கு அல்ல. இது பயிற்சி மற்றும் ரேசிங்கிற்காக பயிற்சி தளங்களில் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். சிறுவயதிலிருந்தே moto racing பயிற்சி அளிப்பதால் எதிர்காலத்தில் தரமான வீரர்களை MotoGP-யிலும் பார்க்க முடியும். ஆனால் இந்த பைக்கின் விலை ரூ.2.75லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

automobile

ZS எலெக்ட்ரிக் காரில் இப்படியொரு வசதியா? எம்ஜி-க்கு தாராள மனசு தான்!

Published

on

By

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ZS EV எஸ்.யு.வி.-இன் புதிய எக்ஸ்-க்ளுசிவ் ப்ரோ வெர்ஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய வெர்ஷனில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ஃபுல் சூட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய எக்ஸ்-க்ளூசிவ் ப்ரோ வெர்ஷனின் விலை ஸ்டான்டர்டு எக்ஸ்-க்ளுசிவ் வெர்ஷனை விட ரூ. 59 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். அதிக விலைக்கு ஏற்ப புதிய வெர்ஷனில் பல்வேறு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி புதிய வெர்ஷனில், பெட்ரோல் என்ஜின் கொண்ட ஆஸ்டர் எஸ்.யு.வி.-க்கு இணையான அம்சங்கள் உள்ளன.

MG-ZS-EV-3

என்னென்ன மாற்றங்கள் :

இதுவரை எம்ஜி ZS EV மாடலில் பிலைன்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், லேன் சேன்ஜ் அசிஸ்ட், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது புதிய வெர்ஷனில் டிராஃபிக் ஜாம் அசிஸ்ட், ஃபார்வேர்டு கொலிஷன் வார்னிங், ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபாச்சர் வார்னிங், ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம்கள், அடாப்டிவ் குரூயிஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் அசிஸ்டிவ் சிஸ்டம்களின் சென்சிடிவிட்டியை மேனுவல் முறையில் செட் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருப்பது தான். அதன்படி சென்சிடிவிட்டியை லோ, மீடியம் மற்றும் ஹை என மூன்று நிலைகளில் அட்ஜஸ்ட் செய்ய முடியும். இந்த சிஸ்டம் ஹேப்டிக், ஆடியோ மற்றும் விஷூவல் என மூன்று லெவல்களில் எச்சரிக்கை செய்யும்.

MG-ZS-EV-4

பாதுகாப்பு அம்சங்கள் :

இவைதவிர எம்ஜி ZS EV மாடலின் இதர அம்சங்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் மற்ற பாதுகாப்பு உபகரணங்களான ஆறு ஏர்பேக், இ.பி.டி. கொண்ட ஏ.பி.எஸ்., எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜிங், 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

MG-ZS-EV-5

மெக்கானிக்கல் மாற்றங்கள் இல்லை :

எம்ஜி ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 461 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். அன்றாட பயன்பாடுகளின் போது, போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர விஷயங்கள் காரணமாக ரேன்ஜ்-இல் மாற்றங்கள் ஏற்படலாம்.

புதிய ZS EV வெர்ஷனிலும் முன்புற ஆக்சிலில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இது 176 ஹெச்.பி. பவர் மற்றும் 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.

இதன் விலை ரூ. 23 லட்சத்து 38 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 27 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் எம்ஜி ZS EV மாடல் பி.ஒய்.டி. அட்டோ 3 மற்றும் ஹூண்டாய் கோனா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Continue Reading

automobile

28 கிமீ மைலேஜ்.. டாப் டக்கர் லுக்.. Fronx CNG வாங்க வேறென்ன வேண்டும்?

Published

on

By

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Fronx காரின் CNG வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி Fronx CNG வேரியண்ட் விலை ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது மாருதி சுசுகி Fronx மாடலின் பெட்ரோல் வெர்ஷன்களை விட ரூ. 95 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.

புதிய CNG வெர்ஷன் சிக்மா மற்றும் டெல்டா என்று இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனை பயனர்கள் சந்தா முறையிலும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ரூ. 23 ஆயிரத்து 248 செலுத்த வேண்டும்.

Maruti-Suzuki-Fronx-2

மாருதியின் CNG மாடல்கள் :

புதிய வெர்ஷனை சேர்க்கும் பட்சத்தில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தத்தில் 15 CNG மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஆல்டோ, ஆல்டோ K10, பிரெஸ்ஸா, செலரியோ, டிசையர், எர்டிகா, ஈகோ, ஸ்விஃப்ட், எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர் உள்ளிட்டவை மாருதி சுசுகி அரினா பிரிவில் கிடைக்கும் CNG மாடல்கள் ஆகும்.

Maruti-Suzuki-Fronx-CNG

நெக்சா பிரான்டிங்கில் புதிய Fronx தவிர கிரான்ட் விட்டாரா, XL6, பலேனோ போன்ற மாடல்களில் CNG கிட் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

என்ஜின் மற்றும் மைலேஜ் விவரங்கள் :

மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷனில் 1.2 லிட்டர் K-சீரிஸ், டூயல் ஜெட், டூயல் VVT பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 98.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. புதிய CNG கிட் மூலம், இந்த கார் லிட்டருக்கு 28.51 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என்று மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

Maruti-Suzuki-Fronx-4

இதர அம்சங்கள் :

புதிய மாருதி சுசுகி Fronx CNG வெர்ஷன்களில் டூயல் ஏர்பேக், இ.பி.டி.-யுடன் ஏ.பி.எஸ்., ரியர் பார்க்கிங் சென்சார்கள், 7 இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கன்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாௌக்ஸ் ஸ்கிட் பிலேட்கள் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

Maruti-Suzuki-Fronx-3

விலை விவரங்கள் :

மாருதி சுசுகி Fronx CNG சிக்மா MT ரூ. 8 லட்சத்து 41 ஆயிரம்
மாருதி சுசுகி Fronx CNG டெல்டா MT ரூ. 9 லட்சத்து 27 ஆயிரம்

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Continue Reading

automobile

இதுவரை இப்படி நடந்ததில்லை.. விற்பனையில் கெத்து காட்டிய மெர்சிடிஸ் பென்ஸ்!

Published

on

By

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான விற்பனையில் 13 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தி இருக்கிறது. இந்திய சந்தையில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 8 ஆயிரத்து 528 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் வரலாற்றில், அந்நிறுவனம் ஆறு மாத காலத்தில் விற்பனை செய்த அதிகபட்ச யூனிட்கள் இது ஆகும்.

Mercedes-Benz-Car

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் 2023) மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வாகன முன்பதிவில் அசத்தியது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முன்பதிவில் 3 ஆயிரத்து 500-க்கும் அதிக யூனிட்களை பதிவு செய்து இருக்கிறது. பென்ஸ் வாகனங்களுக்கு ஏற்பட்டுள்ள அதீத தட்டுப்பாடு காரணமாக இத்தகைய வரவேற்பு கிடைப்பதாக தெரிகிறது.

Mercedes-Benz-Car-1

இரண்டாவது காலாண்டு விற்பனையில் 3 ஆயிரத்து 831 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன வரலாற்றில் முதல் முறை ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது மெர்சிடிஸ் பென்ஸ் வாகன விற்பனை எட்டு சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.

Mercedes-Benz-Car-2

2023 முதல் அரையாண்டு வரையிலான விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் வாகன விற்பனை பத்து மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து EQB மற்றும் EQS போன்ற மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது உள்ளிட்டவை, வாகன விற்பனை அதிகரிக்க காரணமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சத்திற்கும் அதிக விலை கொண்ட டாப் எண்ட் வாகன பிரிவு 50 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த பிரிவு வாகனங்கள் மட்டும் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் ஆகும்.

Mercedes-Benz-Cars

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் GLS, S-கிளாஸ், S-கிளாஸ் மேபேக், GLS மேபேக் மற்றும் AMG G63 போன்ற மாடல்களுக்கு அதிக வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக LWB E-கிளாஸ் தொடர்ந்து நீடிக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எ,ஸ்.யு.வி. என்ற பெருமையை GLEபெற்று இருக்கிறது. முற்றிலும் புதிய C-கிளாஸ் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கணிசமான எண்ணிக்கையை பெற்று அசத்தி உள்ளன.

Continue Reading

automobile

90 கிமீ ரேன்ஜ்.. எக்கச்சக்க அம்சங்கள்.. புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்த பிஎம்டபிள்யூ

Published

on

By

பிஎம்டபிள்யூ நிறுவனம் CE 02 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மமாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துவக்க விலை 7 ஆயிரத்து 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 28 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஹைலைன் வேரியண்ட் கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. இதன் விலை 8 ஆயிரத்து 474 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

BMW-CE-02-1

புதிய பிஎம்டபிள்யூ CE 02 டியுபுலர் ஃபிரேம் மற்றும் டுவின் பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கிறது. இதில் 2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 90 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. பயனர்கள் விரும்பும் பட்சத்தில், இந்த ஸ்கூட்டரை ஒற்றை பேட்டரியில் மட்டும் ஓட்டுவதற்கான ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

BMW-CE-02-2

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 15 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை ஸ்டான்டர்டு சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது மூன்று மணி முப்பது நிமிடங்கள் வரை ஆகும்.

BMW-CE-02-3

அம்சங்களை பொருத்தவரை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எல்.இ.டி. லைட்கள், ரிவர்ஸ் கியர், இரண்டு ரைடிங் மோட்கள் மற்றும் ஃபுல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான அக்சஸரிக்கள் வழங்கப்பட்டுள்ளன. அக்சஸரீக்களை சேர்க்கும் போது இந்த ஸ்கூட்டர் விலை அதிகரிக்கும்.

BMW-CE-02-4

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. எனினும், இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் குறைவு தான். இந்தியாவில் பிஎம்டபிள்யூ உடன் கூட்டணி அமைத்து இருக்கும் டிவிஎஸ் நிறுவனம் இதே பிளாட்ஃபார்மில் புதிய வாகனத்தை உருவாக்கலாம் என்று தெரிகிறது.

BMW-CE-02-5

எனினும், இதன் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் கூட்டணியில் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கும் பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்.

Continue Reading

Trending

Exit mobile version