மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் தனது பயணிகள் வாகன பிரிவு விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் 21 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 21 ஆயிரத்து 588 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2022 ஜூன் மாதத்தில் விற்பனையான 26 ஆயிரத்து 880 யூனிட்களை விட அதிகம் ஆகும்.
வருடாந்திர அடிப்படையில் மஹிந்திரா நிறுவனம் வளர்ச்சியை பதிவு செய்துள்ள நிலையிலும், மாதாந்திர விற்பனையில் 0.90 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. மே 2023 மாதத்தில் 32 ஆயிரத்து 883 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், கடந்த மாதத்தில் 32 ஆயிரத்து 588 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
அமோக வரவேற்பு :
பயணிகள் வாகன பிரிவில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யுவி மாடல்களுக்கு அமோகா வரவேற்பு கிடைத்து இருப்பது தெரியவந்துள்ளது. எனினும், கார் மற்றும் வேன்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஜூன் 2023 மாதத்தில் ஒட்டுமொத்த விற்பனை 32 ஆயிரத்து 588 யூனிட்களாக இருக்கும் நிலையில், வருடாந்திர அடிப்படையில் விற்பனை 31 சதவீதம் வளர்ச்சி பெற்று இருக்கிறது.
2024 நிதியாண்டில் மஹிந்திரா நிறுவனம் இதுவரை ஒரு லட்சத்து 172 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் மஹிந்திரா நிறுவனம் 76 ஆயிரத்து 310 யூனிட்களையே விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. யுடிலிட்டி வாகனங்கள் விற்பனை கடந்த மாதம் 22 சதவீதம் வளர்ச்சி பெற்று 35 ஆயிரத்து 585 யூனிட்களாக உள்ளன.
அசத்தல் வளர்ச்சி :
இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 620 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவின் வருடம் துவங்கி குறிப்பிட்ட தேதி வரையிலான அடிப்படையிலும் மஹிந்திரா நிறுவனம் 33 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் 75 ஆயிரத்து 420 யூனிட்களில் இருந்து தற்போது ஒரு லட்சத்து 162 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
மந்தமான வேன் விற்பனை :
கார் மற்றும் வேன் மாடல்களின் விற்பனை 90 சதவீதம் சரிவடைந்து ஜூன் 2023 மாதத்தில் வெறும் மூன்று யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் 260 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 890 என்று இருந்தது. தற்போதைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை வெறும் பத்து யூனிட்கள் தான் விற்பனையாகி இருக்கிறது.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…