டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தான் அல்ட்ரோஸ் iCNG மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 7 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கும் அல்ட்ரோஸ் CNG மாடலின் டாப் எண்ட் வேரியன்டில் சன்ரூஃப் உள்ளது.
இந்த காரில் CNG கிட் பூட் ஃப்ளோர் (boot floor) கீழே பொருத்தப்பட்டு இருக்கிறது. இதே போன்ற செட்டப் டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் மாடல்களிலும் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ஒற்றை சிலிண்டருக்கு பதிலாக டாடா நிறுவனம் CNG டேன்க் அளவை பிரித்து இரண்டாக மாற்றி இருக்கிறது. மேலும் இவை காரின் பூட் ஃப்ளோர் அடியில் கச்சிதமாக பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
புதிய டிசைன் காரணமாக இந்த காரில் கிட்டத்தட்ட 210 லிட்டர்கள் அளவுக்கு பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. தற்போது அல்ட்ரோஸ் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கும் ALFA பிளாட்ஃபார்ம் இந்த செட்டப்-ஐ மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரத்யேகமான டுவின் சிலிண்டர் CNG செட்டப் பயன்படுத்துவதற்காக காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருப்பது தெரியவந்துள்ளது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டாடா பன்ச் iCNG மாடலில் இந்த செட்டப் வழங்கப்பட இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதே போன்ற செட்டப் டாடா டியாகோ ஹேச்பேக் மற்றும் டிகோர் காம்பேக்ட் செடான் மாடல்களிலும் வழங்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்த இரு மாடல்களும் சற்றே பழைய X90 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வகையில், இந்த கார்களில் எப்படி டுவின் சிலிண்டர்கள் கொண்ட CNG கிட் வழங்கப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவைதவிர டாடா நிறுவனம் தனது நெக்சான் மாடலையும் CNG வேரியண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. நெக்சான் மாடலில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் நீண்ட காலத்திற்கு விற்பனை செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அப்போது டீசல் என்ஜினுக்கு மாற்றாக CNG கிட் கொண்ட மோட்டார் அறிமுகம் செய்யப்படலாம்.
பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் முதற்கட்ட செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் 2024-25 காலக்கட்டத்தில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப்…
இந்தியாவில் இருந்து வெளநாடுகளுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் நாடு முழுக்க…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துவக்கம் முதலே பரபர சம்பவங்களை காணத் துவங்கியது. இந்தத் தொடரில் இந்திய…
மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின்.…
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து டி20 தொடரில் விளையாடுகிறது.…
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தத்…