Categories: Cricket

என்னங்க இது, ரிஷப் பண்ட்-க்கு இந்த நிலையா? முன்னாள் வீரர் ஆதங்கம்

துலீப் கோப்பை 2024-25 தொடருக்கான அணிகள் விவரங்களை கடந்த வாரம் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடரில் நான்கு அணிகள் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷப் பண்ட் பி டீமில் இடம்பிடித்துள்ளார். இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அந்த அணிக்கு கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்ட்-க்கு வழங்கப்படவில்லை. மாறாக டீம் பி-யின் கேப்டன் பொறுப்பை அபிமன்யூ ஈஸ்வரனுக்கு பிசிசிஐ வழங்கி இருக்கிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பிசிசிஐ முடிவு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவுக்கு அடுத்த நிலையில், கேப்டன் பொறுப்பை ஏற்க தகுதியான நபராக பார்க்கப்பட்டவர் ரிஷப் பண்ட் ஆனால் துலீப் கோப்பை தொடரில் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை என்று ஆதங்கம் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “ரிஷப் பண்ட் கேப்டன் இல்லை. அவர் அபிமன்யூ ஈஸ்வரன் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அபிமன்யூ ஈஸ்வரன் கேப்டன்சியில் விளையாட இருக்கிறார், இதில் எந்த தவறும் இல்லை. எனினும், டெஸ்ட் கேப்டன்சி பொறுப்பிற்கு கூட ரிஷப் பண்ட் தகுதியானவர் இல்லையா? எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.”

“இந்த விஷயத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட்-ஐ தான் நீங்கள் பார்த்தீர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளில் சதம் விளாசிய ஒரே விக்கெட் கீப்பர் இவர் தான். இவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் விதம், அவர் ஸ்கோர் செய்யும் விதம், என்னை பொருத்தவரை இவர் தான் கேப்டனாக இருக்க முடியும்.”

“ஆனால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் கூட கேப்டனாக செயல்படுகிறார், ஆனால் பண்ட் கேப்டன் இல்லை. இதை என்னால் ஏற்க முடியவில்லை. புதிய தலைமை உருவாகி இருக்கிறது. இதனால், ரிஷப் பண்ட்-க்கு கேப்டன் பதவி வழங்காதது குறித்து கவுதம் கம்பீர் என்ன சொல்வார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

7 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

43 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago