இந்தியாவுக்காக 2-வது டி20 போட்டி- சதம் அடித்து சாதனை படைத்த அபிஷேக் ஷர்மா

0
49

ஜிம்பாப்வே-க்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய அணியில் அறிமுகமானவர் அபிஷேக் ஷர்மா. இந்திய டி20 அணியின் இளம் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா இந்தியாவுக்காக தனது 2-வது டி20 போட்டியில் விளையாடினார்.

தொடரின் முதலாவது மற்றும் தேசிய அணிக்காக அறிமுகமான டி20 போட்டியில், அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா சாதனைகளை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் 33 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக் ஷர்மா, அடுத்து எதிர்கொண்ட 13 பந்துகளில் சதம் அடித்தார். இதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்-இல் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை அபிஷேக் பெற்றார்.

இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் இவர் விளாசிய 8 சிக்சர்களை சேர்த்து, இவர் இந்த ஆண்டில் மொத்தமாக 47 சிக்சர்களை விளாசியுள்ளார். மறுப்பக்கம் ரோகித் சர்மா 46 சிக்சர்களை அடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களை குவித்துள்ளது. இந்தியா சார்பில் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் 100 ரன்களை அடித்து அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் 47 பந்துகளில் 77 ரன்களையும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களையும் விளாசினர்.

google news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here