Categories: Cricket

என்னை நம்பியவர்களுக்கு நன்றி – அபிஷேக் ஷர்மா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 47 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய அணிக்காக அவர் களமிறங்கிய 2-வது டி20 போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா தனது பயிற்சியாளர் மற்றும் கேப்டனுக்கு நன்றி தெரிவித்தார்.

நேற்றைய போட்டியில் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா சதம் அடித்ததால், இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களை குவிக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 134 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்திய அணிக்காக களமிறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்த அபிஷேக் ஷர்மா, “இது உனக்கான நாள் என்ற போது, நீங்கள் உங்களை வெளிப்படுத்துவீர்கள். எனது கேட்ச் தவறவிடப்பட்டதும், நான் அப்படித் தான் நினைத்துக் கொண்டு பொறுப்பேற்றேன். ருதுராஜ் எனக்கு துணையாக இருந்தார். எனது திறமை மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. என்னை பொருத்தவரை அந்த தருணம் தான் முக்கியம்.”

“நேற்றைய போட்டி முடிந்த விதம் அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். அதிக வருத்தம் கொள்ள எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. டி20-யை பொருத்தவரை அந்த தருணம் தானஅ மிகமுக்கியம். மேலும், இந்த நாள் என்னுடையது என்று உணர்ந்தேன். என் மீது நம்பிக்கை வை்த பயிற்சியாளர்கள், கேப்டன் ஆகியோருக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

15 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

19 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago