ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் ஒருவர் ஆடம் கில்கிறிஸ்ட். விக்கெட்கீப்பர் பேட்ஸ்மென்-ஆன ஆடம் கில்கிறிஸ்ட் சமீபத்தில் தனது டாப் 3 தலைசிறந்த விக்கெட்கீப்பர் பேட்டர்களை அறிவித்தார். அந்த பட்டியலில் எம்.எஸ். டோனி இடம்பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க வீரர்களில் ஒருவர் ஆடம் கில்கிறிஸ்ட். இவர் தன்னை பொருத்தவரையில், தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்டர்கள் இவர்கள் தான் என மூவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அந்த பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரருக்கு முதலிடம் அளித்தார். இந்த பட்டியலில் இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான குமார் சங்கக்காராவும் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், தனது பேரன்புக்கு நிகரானவருமான ரோட்னி மார்ஷ்-ஐ ஆடம் கில்கிறிஸ்ட் தலைசிறந்த விக்கெட்கீப்பர் பேட்டர்களில் முதலாவது இடத்திற்கு அறிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் டோனி இரண்டாவது இடமும், மூன்றாவது இடத்தில் இலங்கை அணியின் குமார் சங்கக்காராவும் இடம்பெற்றுள்ளனர்.
“ரோட்னி மார்ஷ் எனது பேரன்புக்கு உரியவர். இவரைப் போன்று எம்எஸ் டோனி உருவெடுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அவரது அமைதியான குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்களைத் தொடர்ந்து குமார் சங்கக்காரா. அவர் செய்த எல்லாமும் கிளாஸாக இருக்கும். அதிரடி பேட்டிங் மற்றும் சிறப்பான கீப்பிங் திறன்களை ஒருங்கே பெற்றவர் இவர்,” என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ரோட்னி மார்ஷ் 1970 முதல் 84 வரையிலான காலக்கட்டத்தில் விளையாடி வந்தார். இவர் 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…
இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…
அதிரடியான ஆட்டக்காரர்களுக்கு பெயர்போன அணியாக இருந்து வருகிறது வெஸ்ட் இண்டீஸ். பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இந்த அணி…
ஆபரணங்களுக்கான உலோகங்களில் தங்கத்திற்கு என தனி மதிப்பு இருந்து வருகிறது. சடங்கு, சம்பர்தாயங்கள் அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகளில்…
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (பிஎம்-கிசான்) 18 ஆவது தவணை வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி அரசு…