கிரிக்கெட்டில் அனைத்துவித போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரர்கள் கொண்ட இந்திய அணி ஒருசமயத்தில் இருந்தது. அந்த அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா பிரதானமாக இருந்தனர். இந்த குழுவில் இடம்பெற்று இருந்த கேஎல் ராகுல் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க தவறினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்றவாரு சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக் கொள்ள தவறிய கே.எல். ராகுல் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் சேர்க்கப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டு இருக்கும் கேஎல் ராகுல் ரிஷப் பண்ட்-க்கு பேக்கப் வீரராகவே செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் பத்து இன்னிங்ஸில் 452 ரன்களை விளாசினார். இதில் ஒரு சதம், இரண்டு அரைசதங்கள் அடங்கும். இவற்றை ஐந்தாவது வீரராக களமிறங்கி அடித்தார். தற்போது இந்த இடத்தில் விளையாடுவதற்கு ரிஷப் பண்ட் அணியில் திரும்பியதால், கேஎல் ராகுல் அணியில் இடம்பிடிக்க முடியாமல் உள்ளார்.
கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாடி வருகிறார். இவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக ஆகஸ்ட் 3 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளார். ரிஷப் பண்ட் இந்திய அணியில் இடம்பெறுவதை தேர்வுக்குழு முடிவு செய்துள்ள நிலையில், கேஎல் ராகுலுக்கு அஜித் அகார்கர் அட்வைஸ் செய்துள்ளார்.
“நீண்டகாலமாக ரிஷப் பண்ட் வெளியில் உள்ளார். அவருக்கு அதிக சுமை கொடுக்காமல், உள்ளே கொண்டுவர நினைக்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பும் ஒருவரை, படிப்படியாக தான் கொண்டுவர வேண்டும். இது தொடர்பாக கேஎல் ராகுலுக்கு அளிக்கப்பட்ட கருத்து, நீங்கள் ரீசெட் பட்டனை அழுத்த வேண்டும் என்பது தான்,” என பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…