வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் சரியாக விளையாடாமல் இருக்கிறார். கடைசியாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 33 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதற்கு முன்னதாக முதல் போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.
ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் திடீரென மோசமாக விளையாடி வருவதால் சுப்மன் கில்லை பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். இதற்கிடையில், கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அது என்ன சாதனை என்றால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 26 போட்டிகளின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை பாகிஸ் தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் வைத்திருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் சாதனையை படைத்துள்ளார். 1. சுப்மன் கில் இந்தியா அணிக்காக 1352* ரன்கள் 2 அவருக்கு அடுத்ததாக பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக 1322 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும், கடந்த சில சுப்மன் கில் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றாலும் கூட இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடர்கிறது இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்த அணி பேட்டிங்செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…