பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது அந்த அணிக்கு கடுமையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், மற்றும் பலர் பாகிஸ்தானின் படுதோல்வியை மறக்க கடுமையாக வசைபாடி வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேசம் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இரு அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் அணி பாகிஸ்தானை வீழ்த்தை தொடரை கைப்பற்றியதை விட பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது இந்திய வீரர் ரவிசந்திரன் அஸ்வினை வருத்தம் அடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய அஸ்வின், “வங்கதேசம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது, ஆனால் பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். பாகிஸ்தானை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதே இதற்கு முக்கிய காரணம்.”
“கிட்டத்தட்ட 1000 நாட்களுக்கும் மேலாக பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் வெற்றி பெறாமல் தவிக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். யாருக்காக நான் இப்படி ஃபீல் செய்கிறேன் என்று உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றைத் தான்.”
“வக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், ஷோயப் அக்தர், இம்ரான் கான், இன்சமாம் உல் ஹக், இஜாஸ் அகமது, சலிம் மாலிக், சயித் அன்வர், அமீர் சோஹைல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆளுமை மிகப்பெரியது,” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…