டெல்லி பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் நார்த் டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 20 ஓவர்கள் முழுமையாக பேட் செய்த சவுத் டெல்லி அணி வெறும் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை விளாசியது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை விளாசியதே டி20 கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது. இதுதவிர மங்கோலியா அணிக்கு எதிராக நேபாளம் அணி 314 ரன்களை அடித்ததும் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களாக உள்ளது.
எனினும், டெல்லி பிரீமியர் லீக் போட்டியில் சவுத் டெல்லி அணி இத்தகைய இலக்கை எட்டுவதற்கு இந்திய வீரர் ஆயுஷ் பதோனி முக்கிய காரணியாக விளங்கினார். இவர் மட்டுமின்றி பிரியான்ஷ் ஆர்யா தன் பங்கிற்கு பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியது, அந்த அணியின் இமாலய ரன்குவிப்புக்கு காரணமாக அமைந்தது.
ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 165 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 120 ரன்களையும் விளாசினர். இதில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு ஓவர் முழுக்க ஆறு பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், நடப்பு டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பிரியான்ஷ் ஆர்யா இரண்ட முறை சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி 103 பந்துகளில் 286 ரன்களை விளாசியுள்ளது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…