பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான துவக்கத்தை எதிர்கொண்டார். நான்காவது வீரராக களமிறங்கிய பாபர் அசாம் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் இவரது மோசமான ஃபார்ம் இன்னும் தொடர்வதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. டாஸ் வென்று, சரியான முடிவை எடுத்தோம் என்பதை நிரூபிக்கும் வகையில், வங்கதேச பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டர்களை முதல் செஷனிலேயே பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பாபர் அசாம் டக் அவுட் ஆனது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆனதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் எட்டாவது முறையாக டக் அவுட் ஆகி இருக்கிறார். எனினும், இது சாதனையில்லை. சொந்த மன்னில் பாபர் அசாம் டக் அவுட் ஆனது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த டக் அவுட் மூலம் பாபர் அசாம் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. கடைசி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் பாபர் அசாம் சராசரி 40-க்கும் கீழ் சரிந்து 37.41 ஆக குறைந்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் அதிக முறை டக் அவுட் வீரர்கள் பட்டியலில் தனிஷ் கனெரியா முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 25 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
மோசமான ஃபார்ம் தொடரும் போதிலும், சர்வதேச கிரிக்கெட்டின் மூன்றுவகை போட்டிகளில் ஐசிசி தரவரிசையின் படி பாபர் அசாம் முதல் ஐந்து இடங்களில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களில் ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் இடம்பெற்றுள்ளனர்.
இதே போன்று சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் பாபர் அசாம் ஐந்தாவது இடத்திலும் ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் பாபர் அசாம் முதலிடத்திலும் உள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…
இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…