Categories: Cricket

வங்காளதேச முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் வீட்டிற்கு தீ வைப்பு.. என்ன நடக்குது அங்க?

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஷ்ரஃப் மோர்டாசா வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக கடுமையான போராட்டம் நடைபெற்று வந்த வங்காளதேசத்தில் நாடு முழுக்க கடும் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலகி, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

அரசியல் மாற்றம், வன்முறை காரணமாக வங்காளதேசம் முழுக்க பதற்ற சூழல் நிலவுகிறது. இந்த வரிசையில், அந்நாட்டு பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. பிரதமர் வீட்டில் வைக்கப்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டது. மேலும் அவருக்காக தயாரிக்கப்பட்ட உணவையும் போராட்டக்காரர்கள் சுவைத்தனர். பிரதமர் வீடு முற்றுகையிடப்பட்ட சம்பவங்களை போராட்டக்காரர்கள் வீடியோக்களாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

பிரதமர் வீடு மட்டுமின்றி நாடு முழுக்க அடிதடி, தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதே போன்று தான் வங்காளதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ராஃப் மோர்டாசா வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

வங்காளதேச கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் மஷ்ராஃப் மோர்டாசா ஈடுபட்டு வந்தார். இவர் அந்நாட்டின் குல்னா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் மஷ்ராஃப் மோர்டாசா 117 போட்டிகளில் வங்காளதேச அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதில் அவர் மொத்தம் 390 சர்வதேச விக்கெட்டுகளையும், 2955 ரன்களையும் எடுத்துள்ளார். இவர் மொத்தத்தில் 36 டெஸ்ட் போட்டிகள், 220 ஒருநாள் போட்டிகள் மற்றும் 54 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Web Desk

Recent Posts

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

5 mins ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

41 mins ago

புற்று நோய் பாதிப்பு அதிகரிக்கும்…அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான இந்திய அருமணல் ஆலைக்கு தேவையான அணுக்கனிம மூலப்பொருட்களை வழங்கும்…

1 hour ago

மழையால் இழந்த கலை…இரண்டாவது நாள் ஆட்டம் நிறுத்தம்…

இந்தியாவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது வங்கதேச கிரிக்கெட் அணி. இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று இருபது ஓவர்கள் போட்டி…

2 hours ago

சன்னுக்கு ரெஸ்டு?…இன்னைக்கு ரெயின் ஸ்டார்ட்சு!…வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கும் அப்-டேட்…

தமிழகத்தில் கடந்த சில நட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்ளில் அடிக்கும் வெயிலுக்கு இணையான அளவும்,…

2 hours ago

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

2 hours ago