Categories: Cricket

கபில் கோரிக்கை ஏற்பு.. அன்ஷூ சிகிச்சைக்கு ரூ. 1 கோடி வழங்கும் பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் அன்ஷூமான் கெய்க்வாட் சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் அன்ஷூமான் கெய்க்வாட்-க்கு உதவுமாறு முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்திய அணியின் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது.

இது குறித்து வெளியான தகவல்களில், சிகிச்சை பெற்றுவரும் அன்ஷூமான் கெய்க்வாட் குடும்பத்தாரிடம் ஜெய் ஷா தொலைபேசியில் உரையாடியதாகவும், பிசிசிஐ கெய்க்வாட் குடும்பத்திற்கு பக்கபலமாக செயல்படும் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அன்ஷூமான் கெய்க்வாட் உடல்நிலை குறித்து பிசிசிஐ தொடர்ச்சியாக கேட்டறிந்து வருவதாகவும், விரைவில் அவர் நலம்பெற்று திரும்பவார் என்று நம்புவதாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிகே கெய்க்வாட்-இன் மகனான அன்ஷூமான் கெய்க்வாட் லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

Web Desk

Recent Posts

வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்…கலைகட்டிய ஜம்மு – காஷ்மீர் தேர்தல்…

ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றங்களுக்கு அன்மையில் தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி ஜம்மு - காஷ்மீரில் மொத்தம் உள்ள…

16 hours ago

இந்த சேஞ்சுக்கு இவங்க தான் காரணம்…கை காட்டிய கம்பீர்…

கிரிக்கெட் விளையாட்டு சர்வதேச அளவில் புகழ் பெறத் துவங்கிய நேரத்தில் வெஸ்ட் இன்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இந்த விளையாட்டில்…

17 hours ago

ப்ரோட்டா பிரசாதம்!….கோவில் திருவிழாவில் நடந்த விநோதம்…

பொதுவாக கோவில்களில் சிறப்பு வழிபாட்டு நேரங்களின் போதும், திருவிழாக்கள் காலத்திலும் பிரசாதம் வழங்கப்பட்டு வருவது வழக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும்…

18 hours ago

விரக்தியில் பேசும் பேச்சு…தமிழிசைக்கு திருமாவளவன் பதிலடி…

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். அதன்…

19 hours ago

ஆதார், பான் போன்ற அரசு ஆவணங்களை வாட்ஸ்அப்-லேயே பெறலாம் – எப்படி தெரியுமா?

இந்தியாவில் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு மக்கள் அனைத்து சேவைகளை பயன்படுத்த கட்டாயமாக்கப்பட்ட அரசு ஆவணங்களாக உள்ளன. நாட்டில்…

20 hours ago

நானெல்லாம் ஆஷஸ் விளையாடவே முடியாது போல.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ஆஸி வீரர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களில் ஆடம் ஜாம்பா தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்குகிறார். டி20 போட்டிகளில் இவரது தாக்கம் ஆஸ்திரேலியா அணிக்கு…

20 hours ago