ஐசிசி-இன் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த இருக்கிறது. இதற்காக சமீபத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி இந்திய அணி பாகிஸ்தான் பயணம் செய்யும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று கூறப்படுகிறது. மறுப்பக்கம் தொடரை நடத்தும் பாகிஸ்தான் இந்தியாவுக்கான போட்டிகள் அனைத்தையும் லாகூரில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ஒருவேளை பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஐசிசி மாற்று திட்டமிடல்களை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு அளித்துள்ள ஒப்புதல் அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் ஐசிசியுடன் இணைந்து நிதி அறிக்கை ஒன்றை உருவாக்கி அதனை ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. ஏற்கனவே திட்டமிட்ட நிதியை அதிகப்படுத்தி, அதற்கு நிர்வாகமும் ஒப்புதல் அளித்து இருக்கிறது. ஒருவேளை போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியில் விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம்.
இது தொடர்பாக ஆலோசனை மற்றும் திட்டமிடல் கூட்டம் மற்றும் போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்யும் வழிமுறைகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து போட்டி நடைபெறும் இடங்களை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் அதிநவீன வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன. கடந்த வாரம் இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மற்ற செலவீனங்களுக்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…
இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…
இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…