இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருவது குறித்து பல தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் ராகுல் டிராவிட்டிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவிற்கு கிடைக்கும் ஆதரவு ஆஷிஷ் நெஹ்ராவைப் போன்றது அல்ல என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல் ‘ ஹர்திக்கின் கேப்டன்சியில் சில தவறுகள் உள்ளது. ஹர்திக் இந்திய கேப்டனாக தனது இரண்டு சீசன்களை குஜராத்துடனான தனது இரண்டு சீசன்களைப் ஒப்பிட்டு பார்த்தால் சரியாக இல்லை அவர் குஜராத் அணிக்காக கேப்டன்சி செய்தது போல ஏன் இந்திய அணிக்காக சரியாக இயக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை.
முதல் ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரன் பேட்டிங் செய்ய வந்தபோது அக்சர் பட்டேலுக்கு அந்த ஓவரைக் கொடுத்தது மிக்பெரிய தவறு. ஹர்திக் பாண்டியா கேப்டன் ஐபிஎல் தொடரின் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக கேப்டன்சி செய்த போது புத்திசாலித்தனமாக இருந்தார். அவருக்கு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் ஆதரவு இருந்தது. ஆனால் டி20 வடிவத்தில் நாம் தேடும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தானா? நான் அப்படி நினைக்கவே இல்லை.
ஐபிஎல் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ராவின் உதவி ஹர்திக் பாண்டியாவுக்கு இருந்தது ஆனால் டி20 போட்டியில் ராகுல் டிராவிட்டின் ஆதரவு அவருக்கு இல்லை. என்னை பொருத்தவரை அடுத்ததாக வரும் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ரா ஹர்திக் பாண்டியாவிற்கு எப்படி உதவினாரோ அதேபோல ராகுல் டிராவீட்டும் உதவி செய்ய வேண்டும்’ என பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரேஷன் அட்டைகளை வழங்கியிருக்கிறது. ரேஷன் அட்டை வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும், அரிசி,…
தமிழகத்தை புரட்டி எடுத்து வந்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யத் துவங்கியுள்ளது. மாநிலத்தின் அனேக மாவட்டங்களில் அவ்வப்போது…
வருங்கால வைப்பு நிதியை (பி.எஃப்) தனிப்பட்ட காரணங்களுக்கு எடுத்துக் கொள்வோருக்கு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. அந்த வகையில் பி.எஃப்.…
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட்…
நவராத்தி நாட்களில் மாலை அணிவித்து அம்மனுக்கு விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருபவர்கள் பலரும் உண்டு. வீடுகளில் கொலு வைத்து…
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை…