Categories: Cricket

நான் சிக்ஸ் கொடுத்தாலும், டோனி சொன்னது இதுதான்.. சிஎஸ்கே வீரர் ஓபன் டாக்

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான விக்கெட் கீப்பர், கேப்டனாக அறியப்படுவர் மகேந்திர சிங் டோனி. இந்திய அணி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி பல இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் ஜொலிக்க ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி கேப்டன் பதவியில் இருந்து விலகிய எம்எஸ் டோனி அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, ஐபிஎல் தொடர்களில் எம்எஸ் டோனியுடனான உரையாடல்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்திய இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான தொடர் மூலம் தேஷ்பாண்டே இந்திய அணியில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் சர்வதேச அளவில் தேர்ச்சி பெறுவதற்கான திறமையை கொண்டிருப்பதாக எம்எஸ் டோனி என்னிடம் கூறினார். ஆனாலும், பந்துவீச ஓடும் போது அமைதியாக இருக்க வேண்டும். பந்துவீச ஓடி வரும் போது ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரத்தால் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். ஆழமாக மூச்சு விட்டு, அதன்பிறகு பந்துவீச வேண்டும் என்றார். ஆனால், டோனி இப்படி கூறுவதே ஒரு சாதனை படைத்ததற்கு சமமாதுதான்.”

“என் பந்துகளில் சிக்சர் அடிக்கப்பட்டால், டோனி என்னிடம் நீ எந்த தவறும் செய்யவில்லை. நீ வீசியவை நல்ல பந்துகள் தான். இன்றைய நாள் உனக்கானது இல்லை. அடுத்த போட்டியிலும் இதையே பின்பற்ற வேண்டும் என்று கூறுவார். என்னை ஃபிட்னஸில் கவனமாக இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்,” என்று துஷார் தேஷ்பாண்டே தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

இதுக்கு ஒரு என்ட் இல்லையா? பும்ராவை கூப்பிட்டு வச்சு பங்கமாக கலாய்த்த கோலி, ஜடேஜா..

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டி…

6 mins ago

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவின் சூப்பர் சம்பவம்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்து…

27 mins ago

INDvBAN 2வது டெஸ்ட்: கருணை காட்டாத மழை.. ஒருபந்து கூட போடல, 2-ம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல்…

1 hour ago

ராஜினாமா நோ சான்ஸ்…சித்தராமையா திட்டவட்டம்…

கர்நாடக மாநில முதலமைச்சர்  சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி…

21 hours ago

ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு…மக்கள் எங்கள் பக்கம் தான் ஓபிஎஸ் அதிரடி…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தை மீண்டும் வலுவாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.…

22 hours ago

இந்தியா – வங்கதேசம்…இரண்டாவது டெஸ்ட் போட்டி…பாதியில் நிறுத்தம்!…

இந்தியா கிரிக்கெட் அணியை மூன்று இருபது ஓவர்கள் போட்டிகள் அடங்கிய தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின்…

1 day ago